கள்ளு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கள் என்பது பனை மற்றும் தென்னை மரத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஒரு வகையான பானம் ஆகும். பனை அல்லது தென்னை மரங்களின் கிளைகளிலிருந்து கீரல் செய்து அதிலிருந்து வடியும் பால் போன்ற திரவம் மண் பானைகளில் சேகரிக்கப்படுகிறது. இந்த பானம் புளிப்பு சுவையுடன் இருக்கிறது. இதை அருந்துபவர்களுக்கு போதை ஏற்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் கள், மதுபானங்களில் ஒன்றாக உள்ளது. மேலும் கள் அருந்துவதற்குத் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாட்டில் கள் உற்பத்தி செய்யப்படுவதில்லை.