கள்ளு
கள் என்பது பனை மற்றும் தென்னை மரத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஒரு வகையான பானம் ஆகும். பனை அல்லது தென்னை மரங்களின் கிளைகளிலிருந்து கீரல் செய்து அதிலிருந்து வடியும் பால் போன்ற திரவம் மண் பானைகளில் சேகரிக்கப்படுகிறது. இந்த பானம் புளிப்பு சுவையுடன் இருக்கிறது. இதை அருந்துபவர்களுக்கு போதை ஏற்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் கள், மதுபானங்களில் ஒன்றாக உள்ளது. மேலும் கள் அருந்துவதற்குத் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாட்டில் கள் உற்பத்தி செய்யப்படுவதில்லை.
இலங்கையில் கள்,கள்ளு[தொகு]
இலங்கையில் பொதுவாக கிராமத்து மக்கள் கள்ளு என்னும் மதுபானத்தைதான் விரும்பி அருந்துகிறார்கள், இதற்கான காரணம், பொருளாதார வசதி இன்மை, மற்றும் உடம்புக்கு பெரிய அளவில் கெடுதல் இல்லை, என்ற காரணத்தினால் கள்ளை விரும்பி அருந்துகிறார்கள். விற்பனைசெய்ய முடியாமல் இருக்கும் மீதி கள்ளு வடிசாலைக்கு அனுப்பப்படுகிறது. வடி சாலைக்கு அனுப்பப்படும் கள்ளு தென்னம் சாராயம், பணம் சாராயம் என தயாரிக்கப்படுகிறது.