ஓலை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓலை என்பது ஒருவித்திலைத் தாவரங்களான பனை, தென்னை, கமுகு போன்றவற்றின் இலைகள் ஆகும். ஓலைகள் பல இலை நரம்புகளைக் கொண்டுள்ளன. இவை ஈர்க்கு என அழைக்கப்படும்.
[தொகு] ஓலையின் பயன்கள்
- ஓலை கொண்டு விளையாட்டுப் பொருட்கள், கலைப்பொருட்கள் செய்யப்படுகின்றன.
- பனை ஓலை, தென்னையோலை ஆகியன வீடுகளுக்கு கூரை வேயப் பயன்படுத்தப்படுகின்றன.
- பனை ஓலை விசிறி செய்யப்பயன்படுகிறது.
- பனை ஓலையானது பண்டைய காலத்தில் சுவடிகள் உருவாக்கப் பயன்பட்டுள்ளன.
- தென்னையோலையின் ஈர்க்குகளைக் கொண்டு வீடு கூட்ட உதவும் ஈர்க்குமார் செய்யப்படுகிறது.