அந்தமான் நிக்கோபார் தீவுகள்
அந்தமான் நிகோபார் தீவுகள் இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்றாகும். இத்தீவுகள் இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ளன. இது இரண்டு தீவுக் கூட்டங்களைக் கொண்டது. அவை அந்தமான் தீவுகள் மற்றும் நிகோபார் தீவுகள் ஆகும். இவை அந்தமான் கடலையும் இந்தியப் பெருங்கடலையும் இணைக்கின்றன. இப்பிரதேசத்தின் தலைநகரம் போர்ட் பிளேர் என்னும் அந்தமானில் உள்ள நகரம் ஆகும்.
அந்தமான் நிகோபார் தீவுகளின் மொத்தம் எண்ணிக்கை 572. இதில் மக்கள் குடியிருக்கும் தீவுகளின் எண்ணிக்கை 36 ஆகும். இத் தீவுக்கூட்டங்களைக் கொண்ட இந்தத் தொகுதி ஒரு முனையில் இருந்து மறு முனைவரை 700 கி.மீட்டருக்கும் அதிகமான தொலைவு கொண்டது. அந்தமான் நிகோபாரின் தலைநகரான போர்ட் பிளேயரில் இருந்து கப்பல் மூலம் பொருட்களை தென் முனைத்தீவுகளுக்குக் கொண்டு சேர்க்க 50 மணி நேரம் வரை பிடிக்கும். இங்குள்ள தீவுகள் அரிய வகை கடல் உயிரினங்கள், தென்னை மரம் சூழ்ந்த கடற்கரைகள், பவளப் பாறைகள், பசுமைக் காடுகள், அருவிகள் போன்றவற்றைக் கொண்டுள்ளன.
[தொகு] மக்கள்
| சமயம் | பின்பற்றுவோர் | விழுக்காடு |
|---|---|---|
| மொத்தம் | 356,152 | 100% |
| இந்துகள் | 246,589 | 69.24% |
| இசுலாமியர் | 29,265 | 8.22% |
| கிறித்தவர் | 77,178 | 21.67% |
| சீக்கியர் | 1,587 | 0.45% |
| பௌத்தர் | 421 | 0.12% |
| சமணர் | 23 | 0.01% |
| ஏனைய | 238 | 0.07% |
| குறிப்பிடாதோர் | 851 | 0.24% |
[தொகு] மேற்கோள்கள்
[தொகு] வெளி இணைப்புகள்
|
||||||||||