திரிபுரா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திரிபுரா இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் அகர்தலாவாகும். பேசப்படும் முக்கிய மொழிகள், வங்காள மொழியும் காக்பரோக்குமாகும்.
பரப்பளவு: 10,492 கிமீ² சனத்தொகை: 28 லட்சம் (1991).
[தொகு] வரலாறு
சுதந்திரத்துக்கு முன் திரிபுரா முடியாட்சி நாடாக இருந்தது. இம் முடியாட்சிக்கு எதிராக எழுந்த கணமுக்தி பரிஷத் இயக்கம், முடியாட்சியை வீழ்த்தி, நாட்டை இந்தியாவுடன் இணைத்தது. இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது பெருமளவு வங்காள மக்கள் கிழக்குப் பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக வந்து இந்த மாநிலத்தில் குடி புகுந்துள்ளனர்.
[தொகு] மக்கள்
சமயவாரியாக மக்கள் தொகை [1]
| சமயம் |
பின்பற்றுவோர் |
விழுக்காடு |
| மொத்தம் |
3,199,203 |
100% |
| இந்துகள் |
2,739,310 |
85.62% |
| இசுலாமியர் |
254,442 |
7.95% |
| கிறித்தவர் |
102,489 |
3.20% |
| சீக்கியர் |
1,182 |
0.04% |
| பௌத்தர் |
98,922 |
3.09% |
| சமணர் |
477 |
0.01% |
| ஏனைய |
1,277 |
0.04% |
| குறிப்பிடாதோர் |
1,104 |
0.03% |
[தொகு] மேற்கோள்கள்
- ↑ Census of india , 2001
[தொகு] வெளியிணைப்புகள்