பரிபாடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 30: | வரிசை 30: | ||
==பரிபாடல் நூல் தொகுப்பு== |
==பரிபாடல் நூல் தொகுப்பு== |
||
பரிபாடலின் தொகுப்பைப் பின்வரும் வெண்பாவின் துணைகொண்டு அறியலாகும்: |
|||
<blockquote>திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத்<br /> |
<blockquote>திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத்<br /> |
15:00, 8 சூலை 2014 இல் நிலவும் திருத்தம்
பரிபாடல் சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
பரிபாடல் இலக்கணம்
- தொல்காப்பியம் பரிபாடலுக்கு இலக்கணம் கூறுகிறது. ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நான்கு வகைப் பாவில் இது பரிபாடல் என்று சொல்ல முடியாத அளவுக்கு அவை நான்கினுக்கும் பொதுவாய் அமைந்த யாப்பினை உடையது பரிபாடல் என அது குறிப்பிடுகிறது.[1]
- நான்கு பாவின் உறுப்புகளும் கொண்ட பாடல்.[2]
- வெண்டளையும், ஆசிரியத்தளையும் விராய் வந்து துள்ளலோசைப்படச் சொல்லப்படும்.[3]
- வெண்பா உறுப்பாகப் பரிபாடல் வரும்.[4]
- கொச்சகம், அராகம், சுரிதகம், எருத்து ஆகிய நான்கு உறுப்புக்களையும் கொண்டிருக்கும். காமப் பொருளில் வரும்.[5]
- சொற்சீர் அடியும், முடுகியல் அடியம் கொள்வது உண்டு.[6]
- 25 முதல் 400 வரை அடிகள் கொண்டிருக்கும்.[7]
- பரி போல் கால்களால் பரிந்து நடைபோடும் பண்ணிசைப் பாடல்களைக் கொண்ட நூல் 'பரிபாடல்' என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.[8][9][10]
பரிபாடல் நூல் தொகுப்பு
பரிபாடலின் தொகுப்பைப் பின்வரும் வெண்பாவின் துணைகொண்டு அறியலாகும்:
திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத்
தொருபாட்டுக் காடுகாட் கொன்று - மருவினிய
வையையிரு பத்தாறு மாமதுரை நான்கென்ப
செய்யபரி பாடற் றிறம்.
பரிபாடலில் திருமாலுக்கு 8 பாடல், செவ்வேளுக்கு (முருகனுக்கு) 31 பாடல், காடுகாள் (காட்டில் இருக்கும் காளிக்கு அதாவது கொற்றவைக்கு) 1 பாடல், படிப்பதற்கு இனிமையுள்ள வையைக்கு 26 பாடல், பெருநகரமாகிய மதுரைக்கு 4 பாடல் என மொத்தம் 70 பாடல்கள் உள்ளன. (ஆனால் இவை முழுமையாகக் கிடைக்கவில்லை.)
வெளியிணைப்புகள்
அடிக்குறிப்பு
- ↑
'பரிபாடல்லே தொகை நிலை வகையின்,
"இது பா" என்னும் இயல் நெறி இன்றி,
பொதுவாய் நிற்றற்கும் உரித்து' என மொழிப. (தொல்காப்பியம் பொருளதிகாரம் 425 செய்யுளியல்) - ↑ உரையாசிரியர் இளம்பூரணர் விளக்கம்
- ↑ பேராசிரியர் விளக்கம்
- ↑
நெடுவெண்பாட்டே, குறுவெண்பாட்டே,
கைக்கிளை, பரிபாட்டு, அங்கதச் செய்யுளொடு,
ஒத்தவை எல்லாம் வெண்பா யாப்பின. (தொல்காப்பியம் பொருளதிகாரம் 423 செய்யுளியல்) - ↑
கொச்சகம், அராகம், சுரிதகம், எருத்தொடு,
செப்பிய நான்கும் தனக்கு உறுப்பு ஆக,
காமம் கண்ணிய நிலைமைத்து ஆகும். (தொல்காப்பியம் பொருளதிகாரம் 426 செய்யுளியல்) - ↑
சொற்சீர் அடியும், முடுகியல் அடியும்,
அப் பா நிலைமைக்கு உரிய ஆகும். (தொல்காப்பியம் பொருளதிகாரம் 427 செய்யுளியல்) - ↑
பரிபாடல்லே,
நால்-ஈரைம்பது உயர்பு அடி ஆக,
ஐ-ஐந்து ஆகும், இழிபு அடிக்கு எல்லை. (தொல்காப்பியம் பொருளதிகாரம் 464 செய்யுளியல்) - ↑ "பாய் பரிப் புரவி' (மதுரைக்காஞ்சி 689)
- ↑ துள்ளி நடப்பது கலிப்பா, தவ்வி நடப்பது பரிபாடல்.
- ↑ முனைவர் பாண்டியன்