வழுவூர்
தோற்றம்
| வழுவூர் | |||||||
| ஆள்கூறு | |||||||
| நாடு | |||||||
| மாவட்டம் | நாகப்பட்டினம் | ||||||
| ஊராட்சி தலைவர் | செந்தில்நாதன்[1] | ||||||
| மக்களவைத் தொகுதி | வழுவூர் | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
வழுவூர் என்பது இந்தியா, தமிழ் நாடு, நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் தாலுக்காவிலுள்ள ஓர் ஊராகும்[2][3].
அமைவிடம்
[தொகு]மயிலாடுதுறை, திருப்பனந்தாள், திருவிடைமருதூர், செம்பொன்னார் கோயில் என்பவை அருகிலுள்ள தாலுகாக்கள்.
சீர்காழி, தரங்கம்பாடி, காரைக்கால், திருவாரூர், தேரழுந்தூர், திருமணஞ்சேரி ஆகியவை அண்மையிலுள்ள ஊர்களாகும்.
இலந்தங்குடி, திருநாள்கொண்டசேரி, பூவளை, மாதா கோயில் என்பவை வழுவூரிலுள்ள சிற்றூர்களாகும்.
அடையும் வழி
[தொகு]வழுவூரை அடைய தொடர்வண்டியில் செல்பவர்கள் குத்தாலம் நிலையத்தில் இறங்கிச் செல்லலாம். விரைவு வண்டியில் செல்வதாயின் 7 கிலோமீட்டர் தூரத்திலுள்ள மயிலாடுதுறை நிலையத்தில் இறங்கிச் செல்லவேண்டும்.
தலங்கள்
[தொகு]- வீரபத்திரசுவாமி (வழிக்கரையான்) கோவில் (1000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது.)[4]
- வீரட்டானேசுவரர் கோயில் - மூலவர் பெயர்: கஜசம்ஹாரமூர்த்தி
பிரசித்தி
[தொகு]வழுவூர், பரதநாட்டியத்தில் வழுவூர் பாணி என்பதன் மூலம் பிரசித்தி பெற்ற ஊராகும். வழுவூர் இராமையா பிள்ளை மிகப் பிரபலமான பரத நாட்டிய ஆசிரியராவார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.tnsec.tn.nic.in/results/result%202011/Result_VPP/VPP%20NGP%20Kuthalam.pdf
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. Retrieved 2014-03-04.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-22. Retrieved 2014-03-04.
- ↑ அருள்மிகு வீரபத்திரசுவாமி (வழிக்கரையான்) திருக்கோயில்