வழுவூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வழுவூர்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாவட்டம் நாகப்பட்டினம்
ஊராட்சி தலைவர் செந்தில்நாதன்[1]
மக்களவைத் தொகுதி வழுவூர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்


வழுவூர் என்பது இந்தியா, தமிழ் நாடு, நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் தாலூக்காவிலுள்ள ஊராகும்[2][3].

அமைவிடம்[தொகு]

மயிலாடுதுறை, திருப்பனந்தாள், திருவிடைமருதூர், செம்பொன்னார் கோயில் என்பவை அருகிலுள்ள தாலுக்காக்கள்.
சீர்காழி, தரங்கம்பாடி, காரைக்கால், திருவாரூர், தேரழுந்தூர், திருமணஞ்சேரி ஆகியவை அண்மையிலுள்ள ஊர்களாகும்.
இலந்தங்குடி, திருநாள்கொண்டசேரி, பூவளை, மாதா கோயில் என்பவை வழுவூரிலுள்ள சிற்றூர்களாகும்.

அடையும் வழி[தொகு]

வழுவூரை அடைய தொடர்வண்டியில் செல்பவர்கள் குத்தாலம் நிலையத்தில் இறங்கிச் செல்லலாம். விரைவு வண்டியில் செல்வதாயின் 7 கிலோமீட்டர் தூரத்திலுள்ள மயிலாடுதுறை நிலையத்தில் இறங்கிச் செல்லவேண்டும்.

தலங்கள்[தொகு]

  • வீரபத்திரசுவாமி (வழிக்கரையான்) கோவில் (1000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது.)[4]
  • வீரட்டானேசுவரர் கோயில் - மூலவர் பெயர்: கஜசம்ஹாரமூர்த்தி

பிரசித்தி[தொகு]

வழுவூர், பரதநாட்டியத்தில் வழுவூர் பாணி என்பதன் மூலம் பிரசித்தி பெற்ற ஊராகும். வழுவூர் இராமையா பிள்ளை மிகப் பிரபலமான பரத நாட்டிய ஆசிரியராவார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.tnsec.tn.nic.in/results/result%202011/Result_VPP/VPP%20NGP%20Kuthalam.pdf
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2014-03-04.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-22. பார்க்கப்பட்ட நாள் 2014-03-04.
  4. அருள்மிகு வீரபத்திரசுவாமி (வழிக்கரையான்) திருக்கோயில்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வழுவூர்&oldid=3696853" இலிருந்து மீள்விக்கப்பட்டது