க. பொன்முடி
Jump to navigation
Jump to search
க. பொன்முடி ஒரு தமிழக அரசியல்வாதியாவார். தமிழக அமைச்சரவையில் உயர் கல்வி அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். திராவிடக் கொள்கையில் பற்றுக் கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1989 ஆம் ஆண்டு முதல் முக்கியப் பங்கு வகிக்கின்றார்.
தமிழ்நாடு மாநிலம், விழுப்புரம் மாவட்டம், டி.எடையார் கிராமத்தில் துளுவ வேளாளர் குடும்பத்தில் ஆகத்து 19, 1950 ஆம் ஆண்டு பிறந்தார். வரலாறு, அரசியல் மற்றும் பொதுத்துறை நிர்வாகம் ஆகிய துறையில் முதுநிலைப் பட்டமும், வரலாற்றில் முனைவர் பட்டமும் பெற்ற இவர் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். பொன்முடி 1989 ஆண்டு முதல் தி.மு.க.வில் முக்கியப் பதவிகளில் உள்ளார். 2016ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு திருக்கோயிலூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]
தேர்தலில் போட்டியிட்ட ஆண்டுகள்[தொகு]
ஆண்டு | தொகுதி | முடிவு |
---|---|---|
1989 | விழுப்புரம் | வெற்றி |
1991 | விழுப்புரம் | தோல்வி |
1996 | விழுப்புரம் | வெற்றி |
2001 | விழுப்புரம் | வெற்றி |
2006 | விழுப்புரம் | வெற்றி |
2011 | விழுப்புரம் | தோல்வி |
2016 | திருக்கோயிலூர் | வெற்றி |