உள்ளடக்கத்துக்குச் செல்

துளுவ வெள்ளாளர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துளுவ வெள்ளாளர்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு
மொழி(கள்)
தமிழ்
சமயங்கள்
இந்து மற்றும் கிறிஸ்தவம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
வெள்ளாளர் தமிழர்

துளுவ வெள்ளாளர் (Thuluva Vellalar) எனப்படுவோர் (பொதுவாக அறியப்படுவது அகமுடைய முதலியார் அல்லது ஆற்காடு முதலியார்)[1][2] தமிழ்நாட்டில் உள்ள வேளாளர் சமூகத்தின் உட்பிரிவுகளின் உள்ள ஒரு இனக்குழுவினர் ஆவர். இவர்கள் ஆந்திரப் பிரதேசம் மற்றும் கருநாடகம் ஆகிய பகுதிகளிலும் வசிக்கின்றனர்.

பண்டைய தமிழ்நாட்டின் துளு பகுதியிலிருந்து அவர்கள் குடிபெயர்ந்ததால், அவர்கள் துளுவ வெள்ளாளர் என்று அழைக்கப்படுகிறார்கள்.

தமிழ்நாடு அரசு சாதிகள் பட்டியலில், இவர்கள் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இடம் பெற்றுள்ளனர்.

வரலாறு

துளுவ வெள்ளாளர்கள், வெள்ளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஆரம்பகால தமிழ் பாரம்பரியத்தின்படி, தொண்டைமான் இளந்திரையன் என்ற மன்னர், தொண்டை மண்டலத்தில் சாகுபடிக்காக, வன நிலங்களை மீட்டெடுப்பதற்காக, துளு பகுதிகளிலிருந்து ஏராளமான விவசாயிகளை (இப்போது துளுவ வேளாளர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்) அழைத்து வந்தார்.[3] அறிஞர் எம். ஆரோக்கியசாமி, தொண்டைமான் இளந்திரையனை, மெக்கன்சி கையெழுத்துப் பிரதிகளில், குறிப்பிடப்படும் புகழ்பெற்ற நபரான மன்னர் ஆதோண்ட சக்கரவர்த்தியுடன் அடையாளம் காட்டுகிறார்.[4]

துளுவ வெள்ளாளர்கள் போர்வீரர்களாகவும் மற்றும் நில உரிமையாளர்களாகவும் இருந்துள்ளனர்.[5] இவர்கள் நாயக்/நாயக்கர் மற்றும் முதலி ஆகிய பெயர்களையும் பயன்படுத்துகிறார்கள்.[6][7][8]

மக்கள் தொகை

இன்றைய தமிழ்நாட்டில், அவர்களின் முக்கிய நகரமாக வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை இருந்தது, இது 14 ஆம் நூற்றாண்டில், போசள மன்னர் மூன்றாம் வீர வல்லாளனின் தலைநகராக செயல்பட்ட நகரம் ஆகும்.[9][10]

துளுவ வேளாளர்கள் சமூகத்தில் உள்ளவர் முற்போக்கானவர்கள் மற்றும் வளமானவர்கள். அவர்கள் கல்வி விடயத்தில் கணிசமாக முன்னேறியுள்ளனர்,[11] மேலும் சமூகம் வணிகம், அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுகின்றனர்.

இச்சமூகம் பொதுவாக முதலியார் மற்றும் உடையார் பட்டங்களைப் பயன்படுத்துகிறது.[12] இருப்பினும், நாயக்கர், கவுண்டர், ரெட்டி மற்றும் பிள்ளை பட்டங்களும் சில இடங்களில் உள்ளன.

தற்போதைய நிலை

துளுவ வெள்ளாளர் சமூகம், துளுவ வெள்ளாளர் முதலியார்கள் என்றும் குறிப்பிடப்படுகிறது, வரலாற்று ரீதியாக தமிழ்நாட்டில் ஒரு முற்பட்ட சாதி (FC) என வகைப்படுத்தப்பட்டது.[13] இருப்பினும், காலப்போக்கில், அவர்கள் பிற்படுத்தப்பட்ட சாதியாக (BC) மறுவகைப்படுத்தப்பட்டனர்.[14]

ஆற்காடு வெள்ளாளர் தொடர்ந்து, முற்பட்ட சாதி (FC) அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டு, பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கான இடஒதுக்கீட்டின் கீழ் எந்த சலுகைகளையும் பெறவில்லை.[15]

வரலாற்று வகைப்பாடு

தமிழ்நாட்டில், அடுத்தடுத்த பிற்படுத்தப்பட்டோர் ஆணையங்கள் மூலம் துளுவ வேளாளர்களின் நிர்வாக வகைப்பாடு உருவாகியுள்ளது, இது அகமுடையார் சமூகத்துடனான அவர்களின் உறவு குறித்த தொடர்ச்சியான விவாதங்களை பிரதிபலிக்கிறது.[16]

ஆரம்பகால ஆணையங்கள் (1969-1985)

ஏ. என். சட்டநாதன் தலைமையிலான முதல் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் ஆணையம் (1969-70), சமூகங்களின் உறவு குறித்து முரண்பாடான ஆதாரங்களைக் கண்டறிந்தது. சென்னை மாவட்ட ஆட்சியர், இவர்கள் இருவரும் தனித்துவமான சாதிகள் என்று கூறிய போதிலும், செங்கல்பட்டு அதிகாரிகள், இவர்கள் ஒரே சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறினர். தீர்க்கப்படாத இந்தக் கேள்வி இருந்தபோதிலும், அரசாங்கத்தின் 1972 ஆணை "துளுவ வெள்ளாளரை உள்ளடக்கிய அகமுடையார்" என்ற பதிவின் கீழ் அவர்களை ஒன்றாக இணைத்தது.[16] இதனால் இவர்கள் தமிழ்நாடு அரசு சாதிகள் பட்டியலில், பிற்படுத்தப்பட்டோர் பிரிவில், அகமுடையார் (தொழுவ அல்லது துளுவ வெள்ளாளர் உட்பட) என்று இடம் பெற்றனர்.

ஜே. ஏ. அம்பாசங்கர் தலைமையிலான இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் (1982-85), பின்னர் ஆவணப்படுத்தியது, 1980-களின் முற்பகுதியில் அகமுடையார் மற்றும் துளுவ வேளாளர்களின் ஒருங்கிணைந்த மக்கள் தொகை தமிழ்நாட்டின் மக்கள்தொகையில் 3.48% (1,741,852 நபர்கள்) ஆகும்.[16] இடஒதுக்கீட்டுக் கொள்கைகளால், விகிதாசாரமாகப் பயனடைந்த ஒன்பது குழுக்களில் இரு சமூகங்களும் அடங்கும் என்றும், ஒதுக்கப்பட்ட பதவிகளில் "பெரும் பங்கை" ஆக்கிரமித்துள்ளதாகவும் ஆணையம் குறிப்பிட்டது.[16]

சமகாலத் தீர்மானம் (2023-2024)

நீதிபதி ஜனார்த்தனன் ஆணையம் (2023), இந்த வகைப்பாட்டை மறுபரிசீலனை செய்து, தனித்தனி உள்ளீடுகளை உருவாக்குவது, புதிய தரவு தேவையில்லை அல்லது இருக்கும் சலுகைகளைப் பாதிக்காது, ஆனால் தவறான வகைப்படுத்தல் குறித்த நீண்டகால குறைகளை நிவர்த்தி செய்யும் என்று முடிவு செய்தது. இந்தப் பரிந்துரை சூன் 2024 இல் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில், இரு சமூகங்களுக்கும் தனித்துவமான உள்ளீடுகளை நிறுவ, அரசாங்க உத்தரவிற்கு வழிவகுத்தது.[16]

இந்த மாற்றம் ஒரு புதிய வகைப்பாட்டைக் காட்டிலும், நிர்வாகத் திருத்தத்தைக் குறிக்கிறது என்பதை ஆணையம் வலியுறுத்தியது, மாவட்ட அளவிலான பதிவுகள் சமூகங்களுக்கான தனித்தனி அடையாளங்களை தொடர்ந்து ஆவணப்படுத்தியுள்ளன என்பதைக் குறிப்பிட்டது.[16]

குறிப்பிடத்தக்க நபர்கள்

மேற்கோள்கள்

  1. "ப உ சண்முகம் பிறந்தநாள் விழா". Dinamani. 2012-08-16. https://www.dinamani.com/all-editions/edition-vellore/2012/aug/16/1000-பேருக்கு-அன்னதானம்-542766.html. 
  2. "துளுவ வேளாளர் சங்கம் கோரிக்கை". Dinamalar. 2012-05-14. Retrieved 2021-11-12.
  3. Krishnaswamy Ranaganathan Hanumanthan. Untouchability: A Historical Study Upto 1500 A.D.: with Special Reference to Tamil Nadu. Koodal Publishers. p. 101.
  4. M. Arokiaswami (1954). The Early History of the Vellar Basin, with Special Reference to the Irukkuvels of Kodumbalur. A Study in Vellala Origin and Early History. Amudha Nilayam. p. 72.
  5. Rajadurai, S. V.; Geetha, V. (2004). "Response to John Harriss". In Wyatt, Andrew; Zavos, John (eds.). Decentring the Indian Nation. Routledge. p. 115. ISBN 978-1-13576-169-1.
  6. India. Office of the Registrar General. Census of India, 1961: Delhi, Volume 19, Part 6, Issue 9 of Census of India, 1961, India. Office of the Registrar General. Manager of Publications, 1964. p. 17.
  7. India. Office of the Registrar General. Census of India, 1961, Volume 9, Issue 6, Part 6. Manager of Publications, 1964 - India. p. 5.
  8. Kanakalatha Mukund. The View from Below: Indigenous Society, Temples, and the Early Colonial State in Tamilnadu, 1700-1835. Orient Blackswan, 2005 - British - 206 pages. p. 101.
  9. India. Office of the Registrar (1962). Census of India, 1961. Manager of Publications. p. xxii.
  10. A. Krishnaswami (Professor of History) (1975). Topics in South Indian From Early Times Upto 1565 A.D. History. p. 212.
  11. "3". Census Book of India 1961 (in Tamil). Vol. 9 North Arcot District. Madras: The Director of stationery and Printing, Madras. 1961. p. 31.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  12. AP court orders. "Doctypes".
  13. Rajadurai, S. V.; Geetha, V. (2004). Wyatt, Andrew; Zavos, John (eds.). Response to John Harriss. Routledge. p. 115. ISBN 978-1-13576-169-1. Retrieved 2024-11-23.
  14. "List of Backward Classes approved by Government of Tamil Nadu".
  15. "EWS: The Antidote to the Fraudulent Dravidian Model of Social Justice". The Commune. Archived from the original on [insert archive date here].
  16. 16.0 16.1 16.2 16.3 16.4 16.5 "Govt. delinks Thuluva Vellalars from Agamudayars in Backward Classes list". The Hindu. 14 June 2024 இம் மூலத்தில் இருந்து 8 April 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250408164145/https://www.thehindu.com/news/national/tamil-nadu/govt-delinks-thuluva-vellalars-from-agamudayars-in-backward-classes-list/article69215123.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=துளுவ_வெள்ளாளர்&oldid=4308749" இலிருந்து மீள்விக்கப்பட்டது