கடன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


கடன் (ஒலிப்பு) என்பது திருப்பிக்கொடுக்கவேண்டியது; இது பொதுவாக திரும்பக்கொடுக்கவேண்டிய சொத்திருப்புகளைக் குறிக்கும், ஆனால் அந்தக் குறிப்புச் சொல் நன்னெறி சார்ந்த கடமைப்பொறுப்பு மற்றும் பணம் குறிப்பிடாத இதர செயலெதிர்ச்செயல் ஆகியவற்றையும் உள்ளடக்கும். சொத்திருப்புகளைப் பொறுத்தவரையில் கடன் என்பது எதிர்கால வாங்கும் ஆற்றலை, ஒரு கூட்டுத் தொகை ஈட்டப்படுவதற்கு முன்னர் இப்போதே பயன்படுத்திக்கொள்ளும் ஒரு வழிமுறை. சில நிறுவனங்கள் மற்றும் கூட்டாண்மைகள் கடனைத் தங்கள் ஒட்டுமொத்த கூட்டாண்மை நிதிஆதார உத்தியாகப் பயன்படுத்துகிறார்கள்.[மேற்கோள் தேவை]

கடனாளர், கடனாளிக்கு ஒரு சொத்திருப்புத் தொகையைக் கடனாக அளிக்க ஒப்புக்கொண்டால் கடன் உருவாகிறது. நவீன சமூகத்தில் திரும்பச் செலுத்தவேண்டும் என்னும் நோக்கிலேயே கடன் வழங்கப்படுகிறது; பெரும்பாலான நிலைகளில் கூடவே வட்டியும் எதிர்பார்க்கப்படுகிறது. வரலாற்று ரீதியாக ஒப்பந்த வேலையாட்களின் உருவாக்கத்தில் கடன் தான் பெரும் பொறுப்பாகிறது.

சொற்பிறப்பியல்[தொகு]

ஆங்கிலத்தில் டெட் என்ற சொல் ஃபிரெஞ்சு டெட்டெ என்பதிலிருந்து வருகிறது மற்றும் இறுதியாக லத்தீன் டீ ஹாபெரெ (கொள்ளுதல்) என்பதிலிருந்து டீபெரே (திரும்பக் கொடுத்தல்) வருகிறது. டெப்ட் என்னும் ஆங்கில சொல்லில் இருக்கும் எழுத்து b 17 ஆம் நூற்றாண்டில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது, பொதுவாக இது சாமுவேல் ஜான்சன் அவர்களால் தம்முடைய 1755 ஆம் ஆண்டு அகராதியில் சேர்க்கப்பட்டிருக்கலாம் - b என்ற எழுத்து இல்லாமல் நிலைத்துவந்த வேறு பல சொற்களும் அந்த காலகட்டத்தின் போது மீண்டும் உள்செருகப்பட்டிருந்தது.

பணம் செலுத்துதல்[தொகு]

கடன் ஒன்று ஏற்படுவதற்கு முன்னர், கடனாளர் மற்றும் கடனாளி இருவருக்கிடையிலும் அந்தக் கடன் எந்த வழிமுறையில் திரும்பச் செலுத்தப்படும் என்பதை முடிவுசெய்யப்படவேண்டும், இது பின்செலுத்தும் திட்டப்பணம் என்று அழைக்கப்படும். இந்தப் பணம் செலுத்துதல் வழக்கமாக செலாவணி அளவு பணம் மூலம் குறிப்பிடப்படும், ஆனால் சில நேரங்களில் பொருட்கள் மூலம் குறிப்பிடப்படலாம். பணம் திரும்பச் செலுத்ததுல் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தவணை முறையில் அல்லது கடன் ஒப்பந்தம் முடியும் தருவாயில் ஒட்டுமொத்தமாகவும் செய்யப்படலாம்.

கடன் வகைகள்[தொகு]

ஒரு நிறுவனம் தன்னுடைய இயக்கங்களுக்கு நிதி திரட்ட பல்வேறு வகையான கடன்களைப் பயன்படுத்துகிறது. பல்வேறு வகையான கடன்களைப் பொதுவாக இவ்வாறு வகைப்படுத்தலாம்: 1) பாதுகாக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பற்ற கடன், 2) தனியார் மற்றும் பொதுக் கடன், 3) ஆட்சிக்குழு மற்றும் இருதுறை கடன், 4) மேலே குறிப்பிட்டவைகளில் ஒன்று அல்லது கூடுதல் பண்புகளை வெளிப்படுத்தும் இதர வகையான கடன்.[1]

நிறுவனத்தின் சொத்திருப்புகளின் மீது உரிமையாளருக்குரிய அடிப்படையில் கடன்கொடுப்பவர் அடைக்கலம் கொண்டிருந்தால் அல்லது நிறுவனத்திற்கு எதிராக பொது கோரிக்கைகளில் முன்பிருந்தால் அப்போது அந்தக் கடன் கடப்பாடு பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. பாதுகாப்பற்ற கடன் நிதிஆதாரக் கடப்பாடுகளைக் கொண்டிருக்கிறது, இங்கு தங்கள் திரும்பக்கோருதலில் வாங்குபவரின சொத்திருப்புகளின் மீது கடன்கொடுப்பவர் அடைக்கலம் கொண்டிருப்பதில்லை.

தனியார் கடன்களில் அடங்குபவை வங்கிக்-கடன் வகைகள், அது மதிப்புவாய்ந்தவையாக இருக்கலாம் அல்லது உயர்ந்து காணப்படலாம். பொதுக் கடன்கள் என்பது எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் பங்குச் சந்தை மூலம் அல்லது ஏதாவது சில கட்டுப்பாடுகளுடன் நேரடியாக வர்த்தகம் செய்யப்பட்டும் அனைத்து நிதியாதார பத்திரங்களையும் உள்ளடக்கியிருக்கும் ஒரு பொது வரையறை.

கடன் ஆட்சிக்குழு என்பது ஒரு இடர்ப்பாட்டு நிர்வாகக் கருவி, இது தலைமை வங்கிகள் தங்கள் இடர்ப்பாட்டை குறைக்கவும் கடன் வழங்கும் திறனைக் கட்டற்று வைத்திருப்பதற்கும் கடன்கள் மீது உறுதியளிக்க அனுமதிக்கிறது.

அடிப்படைக் கடன் தான் எளிமையான கடன் வடிவமாக இருக்கிறது. அது குறிப்பிட்ட கால நேரத்திற்கு ஒரு தொகையை வழங்கவும் குறிப்பிட்ட நாளுக்குள் திருப்பிக் கொடுத்துவிடும் ஒரு ஒப்பந்தத்தையும் கொண்டிருக்கிறது. வர்த்தகக் கடன்களில் வட்டியும் அந்த தேதிக்குள் செலுத்தப்படவேண்டும், இது ஆண்டுக்கு மூலத் தொகையின் சதவீதத்தில் கணக்கிடப்படுகிறது.

சில கடன்களில், கடனாளிக்கு உண்மையிலேயே கொடுக்கப்படும் கடன் தொகை திரும்பச் செலுத்தவேண்டிய தொகையைவிடக் குறைவாக இருக்கும்; கூடுதல் மூலத் தொகை ஒரு உயர் வட்டி விகிதம் கொண்டிருக்கும் அதே பொருளாதார விளைவைக் கொண்டிருக்கிறது (பாய்ண்ட் (அடமானம்) பார்க்கவும்), மேலும் இது சில நேரங்களில் வங்கியாளரின் பன்னிரண்டு என்று குறிப்பிடப்படுகிறது, "பேக்கர்ஸ் டஜன்" என்னும் நாடகத்தில் – பன்னிரண்டு (ஒரு டஜன்) கொடு, கடனாக பதினொன்று பெறு (வங்கியாளரின் பதினொன்று) என்பதாக வரும். செயல்படவுள்ள வட்டிவிகிதம் தள்ளுபடிக்குச் சமமாக இல்லை என்பதைக் கவனிக்கவும்: ஒருவர் $10 கடனாகப் பெற்று $11 திரும்ப செலுத்தவேண்டியிருந்தால் அப்போது அது ($11–$10)/$10 = 10% வட்டி; அதேநேரத்தில் ஒருவர் $9 கடன் பெற்று $10 திரும்பச் செலுத்தவேண்டியிருந்தால் அப்போது அது ($10–$9)/$9 = 11 1/9 % வட்டியாகும்.[2]

ஒன்றுகூட்டப்பட்ட கடன் என்பது, எந்தத் தனி கடன் வழங்குநரும் ஒரே கடனில் இடர்பாட்டை ஏற்கத் தயாராக இல்லாத ஒரு பெரும் தொகையைக் கடனாகப் பெற விரும்பும் நிறுவனங்களுக்கு இது வழங்கப்படுகிறது, வழக்கமாக இது பல மில்லியன் டாலர்களில் இருக்கும். அத்தகைய நிலைமைகளில், வங்கிகளின் கூட்டமைப்பு ஒவ்வொன்றும் ஒட்டுமொத்த தொகையில் ஒரு பகுதியை முன்வைக்க ஒப்புக்கொள்ளலாம்.

கடன் பத்திரம் என்பது ஒரு கடன் பாதுகாப்பு, இது குறிப்பிட்ட சில நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களால் வழங்கப்படுகிறது. கடன்பத்திரம் வைத்திருப்பவர் ஒட்டுமொத்த தொகையைத் திரும்பப்பெறுவதையும் அத்துடன் கூடுதலாக வட்டியையும் பெறுவதற்கான உரிமையை அளிக்கிறது. ஒரு நிறுவனம் கடன் பெற விரும்பும்போது முதலீடு செய்பவர்களுக்குப் பங்குச்சந்தையில் கடன்பத்திரங்கள் வழங்கப்படுகிறது. கடன்பத்திரங்கள் ஒரு குறிப்பிட்ட வாழ்நாளைக் கொண்டிருக்கும், வழக்கமாக ஆண்டுகளின் எண்ணிக்கையில் இருக்கும்; இதில் நீண்ட கால கடன்பத்திரங்கள் 30 வருடங்களுக்கு மேல் நீடித்திருப்பது சர்வசாதாரணமானது. கடன்பத்திரத்தின் வாழ்நாளின் இறுதியில் பணம் முழுமையாக திரும்பஅளிக்கப்பட வேண்டும். வட்டி, இறுதி பணம் செலுத்துதலுடன் சேர்க்கப்படலாம் அல்லது கடன் பத்திரத்தின் வாழ்நாளின் ஒழுங்குமுறையான கால இடைவெளியில் தவணை முறையில் (கூப்பன்கள் என்று அறியப்படுவது) செலுத்தப்படலாம். கடன் பத்திரங்கள், கடன்பத்திர சந்தைகளில் வர்த்தகம் செய்யப்படலாம் மேலும் அவை வட்டியில்லா பங்குகளைக் காட்டிலும் ஒப்பீட்டளவில் பாதுகாப்பான முதலீடுகளாக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

கடன் ஒருங்கூட்டல்[தொகு]

நிதி ஆதாரம்[தொகு]

ரொக்கக் கடன்

வணிகப் பொருட்கள் மற்றும் கடன்களுக்கான பாதுகாப்பு ஈடுகளுக்குப் பதிலாக வங்கிகள் பணத்தைக் கடனாக கொடுக்கும் முதன்மையான வழிமுறை இதுதான். இது நடப்புக் கணக்கு போலவே இயங்குகிறது, என்ன வேறுபாடென்றால் இந்தக் கணக்கிலிருந்து பணத்தை எடுப்பது கணக்கில் வைக்கப்பட்டிருக்கும் தொகையுடன் கட்டுப்படுத்தப்படுவதில்லை. அதற்குப் பதிலாக கணக்கு வைத்திருப்பவர், கணக்கில் வைப்புத் தொகைக்கும் மேலாக "வரையறை", "கடன் வசதி" என்று அழைக்கப்படும் ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டுமே எடுக்க அனுமதிக்கப்படுவார். நடைமுறையில் ரொக்கக் கடன்கள் கேட்கப்படும்போது திரும்பச் செலுத்தப்படவேண்டும். அதனால் இவை வங்கியின் கேட்பு நிதிகளின் நேர்மாறான பகுதிகளாகும்.

நடப்பு மூலதனம்:

தங்கள் தினசரி நடவடிக்கைகள் அனைத்திற்கும் செலவுசெய்ய நிறுவனங்களுக்குப் பணம் தேவைப்படுகிறது. அவர்கள் ஊதியம் வழங்கவேண்டும, கச்சாப் பொருட்களை வாங்கவேண்டும், பில்களைக் கட்டவேண்டும் என பல செலவுகள் இருக்கிறது. இவற்றையெல்லாம் செய்வதற்கு அவர்களிடம் இருக்கும் பணம்தான் நிறுவனத்தின் நடப்பு மூலதனம் எனக் கூறப்படுகிறது. நடப்பு மூலதனத்திற்கான முக்கிய ஆதாரமாக இருப்பது நடப்பு சொத்திருப்புகள், ஏனெனில் பணத்தை உருவாக்குவதற்கு நிறுவனம் பயன்படுத்தும் குறுகிய கால சொத்திருப்புகளாக இருப்பவை இவைதான். எனினும், நிறுவனம் நடப்பு கடப்பாடுகளையும் கொண்டிருக்கிறது அதனால் நிறுவனம் தன் வசம் எவ்வளவு நடப்பு மூலதனம் இருக்கிறது என்பதை மதிப்பிடும்போது இவற்றையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்.

அதனால் நடப்பு மூலதனம் என்பது:- நடப்பு மூலதனம் = நடப்பு சொத்திருப்பு || கையிருப்பு + கடனாளிகள் + பணம் - நடப்பு கடப்பாடுகள் இவ்வாறு நடப்பு மூலதனம் என்பது நிகர நடப்பு சொத்திருப்பு போன்றதே ஆகும், மேலும் அது நிறுவனத்தின் இருப்புநிலை ஏட்டின் மேல்புற பாதியின் முக்கிய அங்கமாகவும் இருக்கிறது. தன்னுடைய எல்லாத் தேவைகளையும் நிறைவேற்றுவதற்கு ஒரு நிறுவனத்திடம் போதிய நடப்பு மூலதனம் இருப்பது அவசியமாகும். பல நிறுவனங்கள் திவாலாகிப் போயிருக்கிறது, அதற்குக் காரணம் அவை இலாபகரமாக இயங்கவில்லை என்பதில்லை, ஆனால் அவை நடப்பு மூலதனப் பற்றாக்குறையால் தொந்தரவுகளுக்கு உள்ளாயின. நடப்பு மூலதன சுழற்சி

வங்கி மிகைஎடுப்பு:

மிகைஎடுப்பு என்னும் சொல்லுக்கு ஒரு வங்கி கணக்கிலிருந்து மிக அதிகமாகப் பணம் எடுக்கும் ஒரு செயலாகும். வேறுவகையில் சொல்லவேண்டுமென்றால், வங்கிக் கணக்குவைத்திருப்பவர் ஒரு வங்கிக் கணக்கில் போடப்பட்டுள்ள பணத்திற்கும் மேலாக எடுப்பது என்று பொருள். ஒரு வங்கி கணக்கிலிருக்கும் இருப்பைக் காட்டிலும் கூடுதல் பணம் எடுக்கும்போது மிகைஎடுப்பு ஏற்படுகிறது, இது அந்த கணக்கில் ஒரு எதிர்மாறான இருப்பை ஏற்படுத்துகிறது - ஒரு நபர் "மிகை எடுப்பாளர்" என்று சொல்லப்படலாம்.

கணக்கு வைத்திருப்பவரிடம் மிகைஎடுப்பு பாதுகாப்புத் திட்டத்துக்கான ஒப்பந்தம் ஒன்று முன்னரே செய்யப்பட்டிருந்து, மிகைஎடுப்பு செய்யப்பட்ட தொகை அதிகாரமளிக்கப்பட்ட மிகைஎடுப்புக்குள் இருந்தால், அப்போது அதற்கு வசூலிக்கப்படும் வட்டி விகிதம் ஒப்புக்கொண்ட அளவிலேயே இருக்கும். ஒப்பந்த விதிமுறைக்கும் மேலாக இருப்பு அதிகரித்தால், அதற்கான கட்டணங்கள் விதிக்கப்படும், மேலும் உயர் வட்டி விகதங்கள் பொருந்தலாம்.

காலவரம்புடையக் கடன்:

வங்கியில் காலவரை வைப்புத்தொகைகளின் எதிர்மாறானவை காலவரம்புடைய கடன். நிலையான, முன்னரே தீர்மானிக்கப்பட்ட தவணைமுறைகளில் திரும்பச் செலுத்துதல் கோரப்பட்டிருந்தால் வங்கிகள் இந்த முறைமையில் கடன் வழங்குகின்றன. இந்த வகையான கடன்கள் வழக்கமாக நீண்ட கால சொத்திருப்புகளைப் பெறுவதற்காக கடன் வாங்குனர்களுக்கு வழங்கப்படும், எ-டு: கடன் வாங்குபவருக்கு நீண்ட காலத்துக்கு ஆதாயமாக இருக்கக்கூடிய சொத்திருப்புகள் (குறைந்தது ஒரு ஆண்டுக்கு மிகையாக இருக்கவேண்டும்). இயந்திரத் தொகுதிகள் மற்றும் சாதனங்கள் வாங்குதல், தொழிற்சாலைக்குக் கட்டிடம் கட்டுதல், புதிய செயல்திட்டங்களை அமைத்தல் ஆகியவை இந்தப் பிரிவில் அடங்கும். மோட்டார் வாகனங்கள், நுகர்வோர் பயன்பாட்டுப்பொருட்கள், வீடு மனைகள் மற்றும் உள்கட்டமைப்பு உருவாக்கம் ஆகியவையும் கூட இந்தப் பிரிவில் அடங்கும்.

கட்டணங்களைக் கழிவுசெய்தல்:

சில சிறிய வங்கிகளிடத்தில் கட்டணம் குறைத்தல் ஒரு பெரும் செயல்பாடாக இருக்கிறது. இந்தக் குறிப்பிட்ட வகை கடன் அளித்தலில், கடன் வாங்குபவர் தன்னுடைய வாடிக்கையாளர் மீது எடுத்த பில்லை வங்கி எடுத்துக்கொண்டு ஒரு சிறுதொகையை கழிவு/தரகுக் கூலியாக கழித்துக்கொண்டு உடனடியாக அவருக்குப் பணம் செலுத்திவிடும். பில்லில் குறித்த நாளன்று கடன் வாங்கியவரின் வாடிக்கையாளரிடம் வங்கி அந்த பில்லை வழங்கி ஒட்டுமொத்த தொகையையும் வசூலிக்கும். அந்த பில் தாமதப்படுத்தப்பட்டால், வணிக நடவடிக்கை விதிமுறைகளுக்கு ஏற்ப முன்னரே தீர்மானிக்கப்பட்ட வட்டியை கடன் வாங்கியவர் அல்லது அவருடைய வாடிக்கையாளர் செலுத்துவார்.

செயல்திட்டத்துக்கான நிதியளித்தல்:

செயல்திட்ட நிதியாதாரம் என்பது ஒரு கடினமான நிதியாதாரக் கட்டமைப்பை ஆதாரமாகக் கொண்டு நீண்ட-கால உள்கட்டமைப்பு மற்றும் தொழிற்துறை செயல்திட்டங்களுக்கு நிதி அளித்தலாகும், இங்கு செயல்திட்ட ஆதரவாளர்களின் இருப்புநிலை ஏடுகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக செயல்திட்ட கடன் மற்றும் வட்டியில்லா பங்குகள் இந்தச் செயல்திட்டத்திற்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்படுகிறது. வழக்கமாக ஒரு செயல்திட்ட நிதியளிப்பு கட்டமைப்பு, ஸ்பான்ஸர்கள் என்று அறியப்பட்ட வட்டியில்லா பங்குகளின் முதலீட்டாளர்கள் மற்றும் இந்தச் செயல்பாட்டுக்குக் கடன்களை வழங்கும் வங்கிகளின் ஒரு குழு ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கும்.

நிதி ஆதாரமற்றவை[தொகு]

கடன் சான்று:

கடன் சான்றும் கூட ஒரு வணிக நடவடிக்கைக்குப் பணம் செலுத்தும் ஒரு மூலமாக இருக்கலாம், அப்படியென்றால் கடன் சான்றைத் திரும்பச் செலுத்தி ஏற்றுமதியாளருக்குப் பணம் செலுத்தலாம் என்று பொருள். கடன் சான்றுகள், குறிப்பிடத்தக்க மதிப்புடைய பன்னாட்டு வர்த்தக பரிவர்த்தனையில் முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது, இது ஒரு நாட்டில் இருக்கும் பொருள் வழங்குனர் மற்றும் மற்றொரு நாட்டில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கிடையிலான வணிகங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட பொதுமக்கள் வசதிவாய்ப்புகள் (தெருக்கள், நடைபாதைகள், மழைநீர்த் தொட்டிகள் முதலானவை) கட்டப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு, நிலம் வளர்ச்சி செயல்முறைகளுக்கும் கூட இது பயன்படுத்தப்படுகிறது. ஒரு கடன் சான்றுக்கான உடந்தையாளர்களாக இருப்பவர்கள், பெரும்பாலும் பணம் பெறவேண்டிய ஆதாயதாரர், விண்ணப்பதாரர் வாடிக்கையாளராக இருக்கும் கடன் வழங்கும் வங்கி மற்றும் ஆதாயம் பெறக்கூடியவர் வாடிக்கையாளராக இருக்கும் அறிவுறுத்தும் வங்கி. பெரும்பாலும் எல்லாக் கடன் சான்றுகளும் மாற்ற இயலாதது, அதாவது ஆதாயதாரர், வழங்கும் வங்கி மற்றும் உறுதிப்படுத்தும் வங்கி ஏதாவது இருந்தால் அவற்றிடம் முன்னரே ஒப்புதல் பெறாமல் அதைத் திருத்தியமைக்கவோ ரத்துசெய்யவோ முடியாது. ஒரு வணிகப் பரிவர்த்தனையைச் செயல்படுத்துகையில், கிரோஸ் (பிரிட்டிஷ் கிரோ காசோலை) மற்றும் பயண காசோலைகளுக்குப் பொதுவாக இருக்கும் செயல்பாடுகளைக் கடன் சான்றுகள் உள்வாங்கிக்கொள்ளும். பொதுவாக, பணம் பெறுவதற்கு ஆதாயம்பெறுபவர் சமர்ப்பிக்கவேண்டிய ஆவணங்களில் வர்த்தக பொருள்விவரப்பட்டியல், ஏற்றுமதி ஒப்பந்த சீட்டு மற்றும் கடப்பின் போது இழப்பு அல்லது சேதாரங்களுக்காக சரக்குகள் காப்பீடு செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கும் ஆவணம் ஆகியவை அடங்கும். எனினும், ஆவணங்களின் பட்டியல் மற்றும் வடிவங்கள் கற்பனைகளுக்கும் பேச்சுவார்த்தைகளுக்கும் உட்பட்டுள்ளது மேலும் சரக்கேற்றப்படும் பொருள்களின் தர அல்லது அவற்றின் தோற்றம் கொண்ட இடம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் நடுநிலையான மூன்றாம் தரப்பினரால் வழங்கப்படும் ஆவணங்களை வழங்கும் தேவையையும் அது கொண்டிருக்கலாம்.

வார்ப்புரு:Corporate finance

கடனைக் கணக்கிடுதல்[தொகு]

தேசிய கணக்கிடுதலில், கடன்பட்டவர்களுக்கு ஏற்ப கடன்கள் சேர்க்கப்படுகிறது. குடும்பக் கடன்கள் என்பது குடும்ப உறுப்பினர்கள் வைத்திருக்கும் கடன். "தேசிய" அல்லது பொதுக் கடன் என்பது பல்வேறு அரசாங்க அமைப்புகளால் (கூட்டரசுகள், மாநிலங்கள், நகரங்கள்....) வைக்கப்பட்டிருக்கும் கடனாகும். வணிகக் கடன் என்பது வணிகங்களால் வைக்கப்பட்டிருக்கும் கடன். நிதியாதாரக் கடன் என்பது நிதியாதாரத் துறைகளால் (ஒரு நிதியாதார நிறுவனத்திடமிருந்து மற்றொன்றுக்கு) வைக்கப்பட்டிருக்கும் கடன். ஒட்டுமொத்தக் கடன் என்பது இந்த எல்லாக் கடன்களின் ஒரு கூட்டுத்தொகையாகும், இதில் இரட்டை கணக்கிடுதலைத் தவிர்ப்பதற்காக நிதியாதாரக் கடன்கள் விலக்கப்பட்டுள்ளது. இந்தப் பல்வேறு வகையான கடன்கள், ஜிடிபி/கடன் விகிதங்களில் கணிக்கப்படலாம். கடனின்மை மற்றும் நிலுவையிலுள்ள கடனின் அளவுகளுக்கிடையில் இருக்கும் வேறுபாடுகளின் வேகத்தை மதிப்பிடுவதற்கு இந்த விகிதங்கள் உதவுகின்றன. உதாரணத்திற்கு, அமெரிக்கா உயர்ந்த நுகர்வோர் கடன்களையும் குறைந்த பொதுக் கடன்களையும் கொண்டிருக்கிறது, அதே நேரத்தில் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் இதற்கு நேர்மாறாக இருக்கிறது.

தனியார் மற்றும் பொது முகவர்களுக்கான கடனைக் கணக்கிடுவதில் வேறுபாடுகள் இருக்கின்றன. ஒரு தனியார் முகவர் பின்னாளில் ஒன்றைத் திருப்பிக் கொடுப்பதாகச் சொன்னால் ஒரு கடன் ஏற்படுகிறது, இந்தக் கடன் பொது முகவர்களால் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஒரு பொது அமைப்பு பின்னாளில் ஒன்றைத் திருப்பிக் கொடுப்பதாகச் (ஒரு வகையான உறுதிமொழி) சொல்லி சட்டம் இயற்றினால், அந்தச் சட்டத்தைப் பின்னாளில் மாற்றியமைக்கும் உரிமையை (மற்றும் திரும்பவும் செலுத்தாமல் இருப்பதையும்) அது தக்கவைத்துக்கொள்கிறது. இதனால் தான், உதாரணத்திற்கு, ஓய்வு பெறுபவர்களுக்கு பணம் செலுத்துவதாக அரசாங்கம் கூறிய உறுதிமொழி பொது கடன் மதிப்பீடுகளில் காட்டப்படுவதில்லை, ஆனால் தனியார் நிறுவனங்கள் ஓய்வு பெறுபவர்களுக்குப் பணம் செலுத்துவதான உறுதிமொழி காட்டப்படுகிறது.

பாதுகாப்புப் பத்திரமயமாக்கல்[தொகு]

ஒரு நிறுவனம் சொத்திருப்புகள் அல்லது பெறக்கூடியவைகளைக் குழுக்களாக ஒன்றிணைத்து அவற்றை ஒரு அறக்கட்டளை மூலம் சந்தையில் தனித்தனி தொகுதிகளாக விற்கும்போது பாதுகாப்புப் பத்திரமயமாக்கல் ஏற்படுகிறது. பணப்புழக்கத்துடன் இருக்கும் எந்தவொரு சொத்திருப்பும் பாதுகாப்பமையப் படுத்தப்படலாம். இந்தப் பெறக்கூடியவையிலிருந்து வரும் பணப் புழக்கங்கள் இந்த தனித் தொகுதிகளை வைத்திருப்பவர்களுக்குப் பணம் செலுத்துவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. தங்கள் கையிருப்புப் பட்டியலிலிருந்து இந்தச் சொத்திருப்புகளை நீக்குவதற்கும் ஒரு சொத்திருப்பைப் பணமாக மாற்றுவதற்கும் நிறுவனங்கள் அடிக்கடி இவ்வாறு செய்கின்றன. கையிருப்புப் பட்டியலிலிருந்த இந்தச் சொத்திருப்புகள் "நீக்கம்" செய்யப்பட்டு நம்பிக்கைக்குப் பொறுப்பாளியாக இருக்கவேண்டியிருந்த போதிலும், இது நிறுவனத்தின் சம்பந்தப்படுத்தலை முடிவுக்குக் கொண்டுவராது. நிறுவனம் அவ்வப்போது அறக்கட்டளையில் ஒரு சிறப்பு வட்டியைப் பராமரிக்கிறது, இது "இன்டரஸ்ட் ஒன்லி ஸ்ட்ரிப்" அல்லது "ஃபர்ஸ்ட் லாஸ் பீஸ்" என்று அழைக்கப்படுகிறது. அறக்கட்டளையிலிருந்து செய்யப்படும் எந்தப் பணம் கொடுத்தலும் வழக்கமான முதலீட்டாளர்களுக்கு முதலில் கொடுக்கப்படவேண்டும். இது முதலீட்டாளர்களைப் பெருமளவு இடர்ப்பாட்டிலிருந்து பாதுகாத்து பாதுகாப்புத்தன்மையை இன்னும் கவர்ச்சிகரமானதாக ஆக்குகிறது. இந்த வட்டி மீதான நிறுவனத்தின் இழப்பீடுகளின் வெளிப்பாடு, சொத்திருப்புகள் உண்மையிலேயே வரவு செலவு அறிக்கைக்கு வெளியே இருக்கிறதா என்னும் கேள்வியை எழுப்புகிறது.

கடன், பணவீக்கம் மற்றும் பங்குச்சந்தை விகிதம்[தொகு]

கீழே குறிப்பிட்டிருப்பதைப் போல், பொதுவாக ஒரு குறிப்பிட்ட பணம் தொடர்பான செலாவணி பணம் மூலமாகவே கடன் குறிப்பிடப்படுகிறது, அதனால் அந்த செலாவணி பணத்தின் மதிப்பீடுகளில் ஏற்படும் மாற்றங்கள், கடனின் ஆட்கொள்ளத்தக்க அளவையும் மாற்றக்கூடும். இது பணவீக்கம் அல்லது பணவாட்டம் காரணமாக ஏற்படலாம் அதனால் கடன் வாங்குபவர், கொடுத்தவர் இருவருமே ஒரே செலாவணியைப் பயன்படுத்தியபோதிலும் இது ஏற்படலாம். இவ்வாறு, காலம் தாழ்ந்த பணம் கொடுப்பு நிர்ணயங்களை முன்னரே தீர்மானித்துக்கொள்வது முக்கியமானதாகும் அப்போதுதான் ஏற்றஇறக்க படிநிலையும் கூட ஏற்றுக்கொள்ளப்பட்டதாக ஒப்புக்கொள்ளப்படுகிறது. உதாரணத்திற்கு "யுஎஸ் டாலர் குறிப்பிடப்பட்ட" கடனுக்கு ஒப்புக்கொள்வது சாதாரணமாகிவிட்டது.[மேற்கோள் தேவை]

தொழில்மயமாக்கப்பட்ட பெரும்பாலான நாடுகளில் வங்கிச் சார்ந்த கணக்குகளுக்குத் தொடர்புடைய கடனில் பணத்தின் பெரும் பகுதி இந்த வடிவத்திலேயே இருக்கிறது. (இவற்றைப் பற்றிய விவாதங்களுக்கு பணம், அகன்ற பணம் மற்றும் கேட்பு வைப்புகள் பார்க்கவும்). இதனால் பணவீக்கம், பணவாட்டம், பணப்புழக்கம் மற்றும் கடன் ஆகியவற்றுக்கிடையில் தொடர்பு இருக்கிறது. தொழில்மயமாக்கப்பட்ட நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை பிரதிநிதிக்கும் மதிப்பின் நிலைக்களன், மற்றும் அதன் மீது வரி சுமத்தும் நாட்டின் இயலும்தன்மை, கடனின் வெளிநாட்டு பங்குதாரருக்கும் திரும்பச் செலுத்தப்படுவதற்கான உத்திரவாதமாக அமைகிறது, ஏனெனில் உலகம் முழுவதிலும் பல இடங்கள் தொழிலக பொருட்களில் பெரும் பற்றாக்குறையுடன் இருக்கிறது.

பணவீக்கம் உள்ளடக்கிய கடன்[தொகு]

கணக்கின் பணவீக்கம் உள்ளடக்கிய தொகுப்புகளுடன், கடன் வாங்குதல் மற்றும் திரும்பச் செலுத்ததுல் ஏற்பாடுகள் இணைக்கப்படுவதற்குச் சாத்தியமிருக்கிறது, மேலும் அவை சில நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. உதாரணத்திற்கு, அமெரிக்க அரசாங்கம் இரு வகையான பணவீக்கம்-உள்ளடக்கிய கடன்பத்திரங்களை வழங்குகிறது, அதாவது டிரஷரி இன்ஃப்ளேஷன்-புரொடெக்டட் செக்யூரிடிஸ் (TIPS) மற்றும் ஐ-பாண்ட்கள். கிடைக்கப்பெறும் முதலீடுகளில் இவைதான் மிகவும் பாதுகாப்பான வடிவங்களில் ஒன்றாக இருக்கிறது, ஏனெனில் இருக்கும் ஒரே பெரும் இடர்ப்பாடான பணவீக்கம் இதில் நீக்கப்பட்டுள்ளது. இதர பல அரசாங்கங்களும் இத்தகைய கடன்பத்திரங்களை வழங்குகின்றன, மேலும் சில நாடுகள் அமெரிக்க அரசாங்கம் வழங்குவதற்கு முன்னரே அவ்வாறு செய்திருக்கிறது.

உறுதியான உயர் பணவீக்கத்தைக் கொண்டிருக்கும் நாடுகளில், வங்கிகளில் வாங்கப்படும் சிறு கடன்களும் கூட பணவீக்கம் உள்ளடக்கியதாக இருக்கும்.

கடன் விகிதங்கள், இடர்ப்பாடு மற்றும் ரத்துசெய்தல்[தொகு]

இடர்ப்பாடற்ற வட்டி விகிதம்[தொகு]

பெரும் நிறுவனங்கள் அல்லது அரசாங்கங்கள் போன்ற நிலையான நிதியாதார இருப்புகளுக்குக் கடன் வழங்குதல் அவ்வபோது "இடர்பாடுகளற்றவை" அல்லது "குறைந்த இடர்ப்பாடு" கொண்டவை என்றும் "இடர்ப்பாடற்ற வட்டி விகிதம்" என்றும் குறிப்பிடப்படுகிறது. ஏனெனில் கடன் மற்றும் வட்டி திரும்பப் பெறுவது என்றும் தவறாது. அத்தகைய இடர்ப்பாடற்ற வட்டிக்கு ஒரு சிறந்த உதாரணமாக இருப்பது யுஎஸ் டிரெஷரி செக்யூரிடி - பொருளாதாரங்களில் கிடைக்கப் பெறும் வருவாய்களிலேயே மிகக் குறைந்தபட்ச வருவாயையே இது ஏற்படுத்துகிறது, ஆனால் தன்னுடைய கடன் பத்திரங்களின் மீது யுஎஸ் டிரெஷரி கடனைத் தீர்க்கத் தவறாது என்பதில் முதலீட்டாளர்கள் உறுதியுடன் இருக்கலாம். இடர்ப்பாடற்ற விகிதம் சாதாரணமாக புரளும் வட்டி விகிதத்தை அமைப்பதற்காகவும் கூட பயன்படுத்தப்படுகிறது, இது வழக்கமாக இடர்ப்பாடற்ற வட்டி விகிதம் மற்றும் கடனாளியின் கடன்மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டு கடனாளருக்கு ஒரு மிகையூதியத்துடன் கணக்கிடப்படுகிறது (வேறு வகையில் சொல்லவேண்டுமென்றால் கடனாளி கடனைத் தீர்க்கத் தவறி கடனாளர் கடனை இழந்துவிடும் இடர்ப்பாடு). நடைமுறையில், எந்தக் கடன் வழங்கலும் உண்மையிலேயே இடர்ப்பாடற்றதல்ல, ஆனால் "இடர்ப்பாடற்ற" விகிதத்தில் இருக்கும் கடன்வாங்குபவர்கள் மிகக் குறைவான அளவே தீர்க்கத் தவறிவிடும் வாய்ப்பு கொண்டவர்களாகக் கருதப்படுகிறார்கள்.

எனினும், கடன் ஏற்பட்ட காலத்தின்போது ஒரு செலாவணியின் உண்மையான மதிப்பில் மாற்றம் ஏற்பட்டால், கடன் தொடங்கப்பட்ட நேரத்தில் எதிர்பார்க்கப்பட்டதை விட திரும்பப்பெறும் பணத்தின் வாங்கும் ஆற்றல் மிக அதிக அளவில் வேறுபடலாம். அதனால் ஒரு நடைமுறைசார்ந்த முதலீட்டு நோக்கில் பார்த்தால், "இடர்ப்பாடற்ற" அல்லது "குறைந்த இடர்ப்பாடு" கடன்கொடுத்தல்களில் இன்னமும் ஒரளவு இடர்ப்பாடு இருக்கத்தான் செய்கிறது. பணவீக்கம் காரணமாக அல்லது ஒரு வெளிநாட்டு முதலீட்டில் பணமாற்று விகித ஏற்றஇறக்கங்கள் காரணமாக பணத்தின் உண்மையான மதிப்பு மாற்றம் கொண்டிருக்கலாம்.

பன்னாட்டு தீர்வுகளுக்கான வங்கி என்பது மைய வங்கிகளின் ஒரு அமைப்பு, இந்த அமைப்பு தான் வங்கிகள் கொடுக்கக்கூடிய கடன்களுக்கு ஈடாக எவ்வளவு மூலதனத்தை தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்பதை முடிவுசெய்யும் விதிமுறைகளை அமைக்கிறது.

அளவீடுகள் மற்றும் கடன்மதிப்புகள்[தொகு]

அரசு மற்றும் தனியார் கூட்டாண்மைகளால் திரும்பச் செலுத்தவேண்டிய குறிப்பிட்ட கடன்பத்திர கடன்கள், மூடீஸ், ஃபிட்ச் ரேடிங்கஸ் இன்க்., ஏ.எம்.பெஸட் மற்றும் ஸ்டாண்டர்ட் & பூர்ஸ் போன்ற மதிபீட்டு முகவர்களால் மதிப்பீடு செய்யப்படுகிறது. அரசு அல்லது நிறுவனம் கூட தனதே ஆன ஒரு தனி மதிப்பீட்டை நிர்ணயித்துக்கொள்ளும். இந்த ஏஜென்சிகள் கடனாளி தன்னுடைய கடப்பாடுகளுக்கான வாக்குறுதியை நிறைவேற்றும் இயலும்தன்மையை மதிப்பீடு செய்து அதற்கு ஏற்றவாறு அவருக்கு ஒரு கடன் மதிப்பீடு கொடுப்பார்கள். மூடீஸ் பின்வரும் எழுத்துகளைப் பயன்படுத்துகிறார் Aaa Aa A Baa Ba B Caa Ca C , இங்கு மதிப்பீடுகள் Aa-Caa 1-3 எண்களால் தகுதிபெறுகின்றன. உதாரணத்திற்கு முன்ரிச் ரெ தற்போது Aa3 என மதிப்பிடப்படுகிறது.(as of 2004). எஸ்&பி மற்றும் இதர மதிப்பீட்டு ஏஜென்சீக்கள் சற்றே வேறுபட்ட அமைப்புமுறைகளைக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் பெரிய எழுத்துகள் மற்றும் +/- தகுதிநிலைகளைப் பயன்படுத்துகிறார்கள்.

மதிப்பீடுகளில் ஏற்படும் மாற்றங்கள் நிறுவனத்தைக் கடுமையாகப் பாதிக்கும், ஏனெனில் அதன் மறுநிதியளித்தல் விலைகள் அதன் கடன்தகுதிநிலையைச் சார்ந்திருக்கிறது. Baa/BBB (மூடீஸ்/எஸ்&பி) மதிப்பீடுகளுக்கும் கீழே இருக்கும் கடன்பத்திரங்கள் பயனறறவை- அல்லது உயர் இடர்ப்பாட்டுடைய கடன் பத்திரங்களாகக் கருதப்படுகிறது. அவற்றின் கடனைத் தீர்க்கத் தவறும் உயர்ந்த இடர்ப்பாடு (Ba வுக்கு தோராயமாக 1.6%) உயர்ந்த வட்டி கட்டணம் மூலம் ஈடு செய்யப்படுகிறது. வாராக் கடன் என்பது கடனாளியால் திரும்ப செலுத்தவே முடியாத (பகுதியாகவோ முழுமையாகவோ) கடனாகும். கடனாளி தன்னுடைய கடனைத் தீர்க்கத் தவறியவாராகிறார். இத்தகைய கடன்கள் அவ்வப்போது மறுபாக்கிங் செய்யப்பட்டு அதன் பெயரளவிலான விலைமதிப்புக்கும் குறைவாக விற்கப்படும். பயன்றற கடன்பத்திரங்களை வாங்குவது இடர்ப்பாட்டுடையதாகக் கருதப்படுகிறது, ஆனால் முதலீட்டின் இலாபகரமான வடிவமான வாய்ப்பினைக் கொண்டிருக்கிறது.

ரத்துசெய்தல்[தொகு]

திவாலாவாகும் நிலைமையில், கடன்கள் முழுமையாகவோ பகுதியாகவோ கைவிடப்படுவது அரிதாக இருக்கிறது. சில கலாச்சாரங்களில் இருக்கும் பழக்கவழக்கங்கள் இதை ஒரு நிர்ணயிக்கப்பட்ட கால அடிப்படையில் (பெரும்பாலும் ஆண்டுதோறும்) செய்யவேண்டும் என்று கோருகிறது, இது சமூகத்தில் இருக்கும் அமைப்பு ரீதியான ஏற்றத்தாழ்வுகளைத் தவிர்க்கவும் அல்லது யாராவது ஒருவர் கடனைத் தக்கவைத்துக்கொள்வதில் நிபுணனாவதையும் திரும்ப செலுத்தவேண்டியதை கட்டாயப்படுத்துவதையும் தவிர்ப்பதற்கானது - கடன் தணிப்பு பார்க்கவும். அதற்கு உதாரணமாக இருப்பது புக் ஆஃப் லெவிடிகஸ்சில் விவரிக்கப்பட்டுள்ள பைப்லிகல் ஜுபிலி இயர்.

ஆங்கிலேயர் சட்டத்தின் கீழ், கடனாளர் தன்னுடைய கடனை கைவிட ஏமாற்றப்படும்போது இது ஒரு குற்றம்: திருட்டுக்கான சட்டம் 1978 பார்க்கவும்.

பன்னாட்டு மூன்றாம் உலக கடன் எந்த அளவுக்கு எட்டியிருக்கிறதென்றால், வளர்ச்சிபெற்றுவரும் நாடுகளுக்குத் தொடர்புடைய உலகளாவிய சமநிலையைத் திரும்பப்பெறுவதற்கு கடன் ரத்துசெய்தல் மட்டுமே இதற்கு இருக்கும் ஒரே வழி என்று பல பொருளாதார நிபுணர்கள் நம்புகிறார்கள்.

கடனால் ஏற்படும் விளைவுகள்[தொகு]

மக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தாங்கள் செய்ய இயலாதவற்றை அல்லது அனுமதிக்கப்படாதவற்றைச் செய்வதற்குக் கடன் அனுமதிக்கிறது. பொதுவாக, தொழில்மயமாகிவிட்ட நாடுகளில் இருக்கும் மக்கள் தங்கள் கையிலிருக்கும் பணத்தைக் கொண்டு வாங்க இயலாத வீடுகள், வாகனங்கள் மற்றும் மிக உயர்ந்த பொருட்களை வாங்குவதற்காக இதைப் பயன்படுத்துகிறார்கள். தங்கள் சொத்திருப்புகளில் செய்யப்பட்ட முதலீடுகளைச் சமநிலைப் படுத்துவதற்கு நிறுவனங்கள் கடன்களைப் பல வழிமுறைகளிலும் கூட பயன்படுத்தித் தங்கள் வட்டியில்லா கடன்பத்திரங்கள் மீதான வருவாயை சமநிலையாக ஆக்குகிறார்கள். ஒரு முதலீட்டின் இடர்ப்பாட்டுத்தன்மையை முடிவுசெய்வதில் இந்த சமநிலை, வட்டியில்லா கடன்பத்திரத்துடன் கடன் கொண்டிருக்கும் விகிதத் தொடர்பு, முக்கியத்துவமுடையதாகக் கருதப்படுகிறது; ஒவ்வொரு வட்டியில்லா கடன்பத்திரத்திற்கும் எவ்வளவு கடன் இருக்கிறதோ அந்த அளவு இடர்ப்பாடும் இருக்கிறது. நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் இருவருக்குமே இந்த அதிகரித்த இடர்ப்பாடு மோசமான விளைவுகளையே உண்டுபண்ணும், ஏனெனில் கடனைப் பராமரிக்கும் செலவுகள் வெளிப்புற நிகழ்வுகள் (வருவாய் இழப்பு) அல்லது உள்ளுக்குள்ளான சிக்கல்கள் (வளஆதாரங்களின் மோசமான நிர்வாகம்) காரணமாக திரும்பச் செலுத்த முடியாத அளவுக்கு வளர்ச்சிப்பெற்றுவிடும்.

மிக அதிகமாக சேர்ந்துவிட்ட கடன்கள், மோசமடைந்த பொருளாதார சிக்கல்களை மேலும் மோசமடையச் செய்வதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.[3] உதாரணத்திற்கு, பெரும் மந்த நிலை ஏற்படுவதற்கு முன்னர் கடன்/ஜிடிபி விகிதம் மிகவும் உயர்ந்து இருந்தது. பொருளாதார முகவர்கள் பெரும் கடனுக்கு உள்ளானார்கள். எதிர்கால வருவாய் மீது மிகையாக எதிர்பார்க்கப்பட்டதுக்கு இணையானதாக இருக்கும் இந்த அதிகரித்த கடன், பங்குச் சந்தைகளில் சொத்திருப்புகளின் வெறுமையுடன் இணைந்துகொண்டது. எதிர்பார்ப்புகள் சரிசெய்யப்பட்டவுடன், பணவாட்டம் மற்றும் கடன் பற்றாக்குறை தொடர்ந்தது. பணவாட்டம் கடனை மிகவும் விலையுயர்ந்ததாக ஆக்கிவிட்டது, மேலும் ஃபிஷ்ஷர் விவரித்தது போது, இது மீண்டும் பணவாட்டத்தை வளப்படுத்தியது, ஏனெனில் பொருளாதார முகவர்கள் தங்கள் கடன் நிலைகளைக் குறைப்பதற்காக தங்கள் பயன்படுத்துதல் மற்றும் மூதலீடு ஆகியவற்றைக் குறைத்துக்கொண்டனர். குறைந்துவிட்ட தேவையின் காரணமாக வணிக செயல்பாடுகளும் குறைந்து மேலும் வேலையின்மையை ஏற்படுத்தியது. நேரடியாகச் சொல்லவேண்டுமென்றால், பணவீக்கம் மற்றும் குறைந்துவிட்ட தேவைகளாலும் ஏற்பட்ட அதிகரித்த கடன் விலைகள் காரணமாகவும் கூட அதிக திவாலாக்கள் ஏற்பட்டது.

சில நிறுவனங்கள், திவாலாவாகும் நிலையை ஏற்படுத்தாத மாற்று வகையான கடன் வாங்குதல் மற்றும் திரும்பச் செலுத்துதல் ஏற்பாடுகளுக்குள் நுழையும் சாத்தியங்களைக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக, சில நேரங்களில் நிறுவனங்கள் தாங்கள் திரும்ப செலுத்தவேண்டிய கடன்களையே வட்டியில்லா கடன் பத்திரங்களாக மாற்றமுடியும். இவ்வகையில், பணம் பெற்றவரின் பங்கீடுகள் மற்றும் மூலதன வருவாய்கள் வடிவில், கடனாளர் கடன் மற்றும் வட்டிக்கு இணையாக ஏதோவொன்றைத் திரும்பப்பெறும் வாய்ப்பைக் கொண்டிருக்கிறார். இவ்வாறு "திரும்பச் செலுத்துதல்" கடன்வாங்கியர் ஈட்டுவதற்குச் சரிசம விகிதத்தில் இருப்பதால் அதுவே திவாலா ஏற்படுவதற்குக் காரணமாக அமையாது. கடனானது இவ்வாறாக மாற்றப்பட்டால், அது இனிமேற்கொண்டு கடன் என அறியப்படாது.

கடன்களுக்கு எதிரான விவாதங்கள்[தொகு]

தனிப்பட்ட, குடும்ப, சமூக, கூட்டாண்மை மற்றும் அரசாங்க நிலையில் கடன் ஒரு கருவி மற்றும் நிறுவனமாக சித்தரிக்கப்படுவதற்கு எதிராகச் சிலர் வாதிடுகின்றனர். இன்றும் கூட இஸ்லாம் வட்டியுடன் கடன் கொடுத்தலை தடைசெய்கிறது, கத்தோலிக்கத் திருச்சபை 1822 ஆம் ஆண்டு முதல் இதை அனுமதித்தது மேலும் தோராஹ் இவ்வாறு விளக்குகிறது, எல்லா கடன்களும் ஒவ்வொரு ஏழாம் ஆண்டில் மற்றும் 50 ஆம் ஆண்டில் அழிக்கப்படவேண்டும் (புக் ஆஃப் லெவிடிகஸ் இல் விவரித்துள்ளது போல் ஐம்பதாவது ஆண்டு நிறைவில்).

கடன், வட்டியில் வளரும் வேகத்தை விட விரைவாக திரும்பச் செலுத்தப்படவில்லையென்றால் காலப்போக்கில் கடன் அதிகரித்துவிடும். இந்த விளைவு கந்துவட்டி என குறிப்பிடப்படலாம், இதர சூழ்நிலைகளில் "கந்துவட்டி" அதிகமான வட்டி விகிதத்தை மட்டுமே குறிக்கிறது, இது ஏற்றுக்கொள்ளப்பட்ட இடர்ப்பாட்டின் போதிய இலாபத்தை விட கூடுதலாகும்.

பன்னாட்டு சட்டக் கோட்பாடுகளில், வெறுக்கத்தக்க கடன் என்பது நாட்டின் நலனுக்குப் பலனளிக்காத நோக்கங்களுக்காக ஆட்சி நிர்வாகத்தால் ஏற்படுத்தப்படும் கடன். இவ்வாறு அத்தகைய கடன்கள் அந்த ஆட்சி அதிகாரத்தின் தனிப்பட்ட கடன்கள் என்றும் அது அந்த நாட்டின் கடன்கள் அல்ல என்றும் இந்தக் கோட்பாட்டால் கருதப்படுகிறது.

உயர்ந்த வட்டி விகிதங்கள் இருக்கும் ஒரு பொருளாதாரத்தில், வட்டியில்லா பங்குகளின் மூதலீட்டின் அதிக நெகிழும்தன்மையுடயை பங்கு வீதத்தைவிட வர்த்தகத்துக்குக் கடன் அதிக விலையுடையதாக இருக்கும். போராடிக்கொண்டிருக்கும் வர்த்தகத்திற்கு வட்டியில்லா கடன் பத்திர மூதலீடு மூலம் நிதியளிப்பது சுலபமாக இருக்கலாம், ஏனெனில் சிக்கல் ஏற்படும் காலத்தில் வட்டியைக் கட்டாமல் தவிர்ப்பது சாத்தியப்படலாம்.

அளவுகளும் புழங்கல்களும்[தொகு]

உலகளாவிய கடன் தள்ளுபடி ஆண்டுக்காண்டு 4.3%த்தில் வளர்ச்சி பெற்று 2004 ஆம் ஆண்டில் $5.19 டிரில்லியனாக இருந்தது. உலகம் முழுவதுமுள்ள மில்லியன் கணக்கிலான மக்களின் செலவழிக்கும் பழக்கவழக்கங்களை அதே போன்று தொடர்ந்துகொண்டிருந்தால் வரும் ஆண்டுகளில் அது இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காண்க[தொகு]

குறிப்புதவிகள்[தொகு]

  1. ஜோசப் ஸ்வான்சம் மற்றும் பீட்டர் மார்ஷல், ஹௌலிஹன் லோகீ மற்றும் லிண்டன் நார்லே, கிர்க்லாண்ட் & எல்லிஸ் இண்டர்நேஷனல் LLP (2008). எ பிராக்டிஷனர்ஸ் கைட் டு கார்பொரேட் ரீஸ்ட்ரக்சரிங் பக்கம் 5 சிட்டி & ஃபைனான்சியல் பப்ளிஷிங், முதல் பிதிப்பு ஐஎஸ்பிஎன்: 9781905121311
  2. சம்பிரதாயப்படி, d % கழிவு இன் பயனுள்ள வட்டியாக அமைகிறது.
  3. 5 Ways to Get Out of Debt Faster.Kiplinger. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-09-15. பார்க்கப்பட்ட நாள் 2010-06-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடன்&oldid=3815154" இலிருந்து மீள்விக்கப்பட்டது