சேர நாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சேர நாடு
Chera Kingdom
கிமு 5ம் நூற்றாண்டு – கிபி 1102 Blank.png
 
Flag of the Kingdom of Cochin.svg
 
Travancore.jpg
சேர நாட்டின் அமைவிடம்
சேர நாட்டின் பகுதி
தலைநகரம் ஆரம்ப சேரர்கள்: வஞ்சி மூதூர், கரூர் (வஞ்சி)
இரண்டாவது சேரர்கள்: மகோதயபுரம், குலசேகரபுரம்
மொழி(கள்) தமிழ், மலையாளம்
மதம் இந்து சமயம், சமணம்
அரசு முடியாட்சி
தலைவர் நெடுஞ்சேரலாதன்
செங்குட்டுவன்
பண்டைக்காலம் நடுப் பகுதி
 - நிறுவிய ஆண்டு கிமு 5ம் நூற்றாண்டு
 - சேரர்களின் முதலாவது எழுச்சி கிபி 800
 - சேரர்களின் இரண்டாவது எழுச்சி
 - கலைக்கப்பட்டது கிபி 1102
தற்போதைய நிலை இந்தியாவின் கொடி இந்தியா

பண்டைத் தமிழகத்தில் இருந்த முக்கியமான மூன்று நாடுகளுள் சேர நாடும் ஒன்று. அந்நாடு அக்காலத் தமிழகத்தின் மேற்குக் கரைப் பகுதிகளை உள்ளடக்கியிருந்தது. பெரும்பாலும் இன்றைய தமிழகம்த்தின் கொங்கு நாடு ப்பகுதியே அக்காலச் சேர நாடு எனலாம். பல சங்கத் தமிழ் நூல்களும்கூடச் சேர நாட்டில் உருவாயின. மெலும் வேணாடு, குட்டநாடு, தென்பாண்டிநாடு ஆகிய கொடுந்தமிழ் மண்டிலங்களையும் (இன்றைய கேரளா) சேரன் ஆண்டான். தலைநகர் கரூர் வஞ்சி. இது ஆண்பொருணை (அமராவதி) ஆற்றின் கரையிலுள்ளதாகச் சங்க இலக்கியங்கள் கூரும். மேலும் காஞ்சி எனும் நொய்யலாறு இங்கே ஓடுகிறது[1].

பொருளடக்கம்

எல்லைகள் [தொகு]

சங்க காலச்சேரர்தம் எல்லைகள் கொங்கத்தின் எல்லைகளேயாகும். ஆனால் பிற்காலத்தில் உருவாகிய கொல்லம் கேரள வர்மாக்கள் சமஸ்கிருதத்திற்குக் கேரளாவில் முக்கியத்துவம் அளித்ததால், அங்கு தமிழ் அழிந்தது. ஆகையால் அப்பகுதிகள் தனியாட்சி பெற்றன. சங்க, பக்தி காலச் சேரர்கள் (சேரமான் பெருமாள், குலசேகரர் ஆகியோர்) கரூரினின்றே ஆட்சி புரிந்தனர். ஆனால் இவர்கள் ஆட்சி முடிந்தவுடன், கேரள வர்மாக்கள் கிளர்ச்சி மூலம் கொல்லத்தைத் தலைமையிடமாகக் கொண்டு கேரளத்தில் தனியாட்சி நிறுவினர்[1].

மன்னர்கள் [தொகு]

சேர நாட்டை ஆண்ட அரச வம்சத்தினர் சேரர்கள் எனப்பட்டனர். சங்க நூல்கள் பலவற்றில் சேர மன்னர்கள் பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. மிகப் பழைய சங்க நூல்களில் ஒன்றாகிய பதிற்றுப்பத்து பத்து சேர மன்னர்களைப் பாடிய பாடற் தொகுப்பு ஆகும். இதில் ஒவ்வொரு சேர மன்னன் பற்றியும் பத்துப் பாடல்கள் உள்ளன.

நகரங்கள் [தொகு]

கரூர் அல்லது வஞ்சி என்று அழைக்கப்பட்ட நகரம் சேர நாட்டின் தலை நகரமாக விளங்கியது. முசிறி சேர நாட்டின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றாகும். இத் துறைமுகத்தின் நடவடிக்கைகள் பற்றியும், அதன் வளங்கள் பற்றியும் பண்டைத் தமிழ் நூல்களிலே குறிப்புக்கள் உள்ளன. சேர நாட்டின் இன்னொரு புகழ் பெற்ற துறைமுகம் தொண்டியாகும்[1].

மேற்கோள்கள் [தொகு]

  1. 1.0 1.1 1.2 Nagaswami, R. (1995), Roman Karur: A peep into Tamil's past, Brahad Prakashan, Madras
"http://ta.wikipedia.org/w/index.php?title=சேர_நாடு&oldid=1178330" இருந்து மீள்விக்கப்பட்டது