பேச்சு:சேரர்
கேள்வி[தொகு]
சேரமான் பெருமாள் என்ற சேர மன்னர் பற்றி ஏன் இக்கட்டுரையிற் சேர்க்கப்படவில்லை?--பாஹிம் 14:15, 21 ஏப்ரல் 2011 (UTC)
தொட்டியம் பக்கம் இருந்த முசிறிக்கான (திருச்சி மாவட்டம்) இணைப்பை சரி செய்துள்ளேன். தொண்டி இராமநாதபுர மாவட்டத்தில் உள்ளதா? --குறும்பன் (பேச்சு) 18:06, 28 ஆகத்து 2012 (UTC)
- இக்கட்டுரைச் செய்திகள்
- பண்டைய காலம்
- சங்க காலம்
- சமய காலம்
என்னும் கால நோக்கில் தோகுக்கப்படுதல் நன்று. --Sengai Podhuvan (பேச்சு) 21:51, 26 மார்ச் 2013 (UTC)
ஐயம்[தொகு]
சேரளம், சேரலம் இவ்விரண்டில் எது சரியான சொல்? - ச.பிரபாகரன் (பேச்சு) 12:13, 23 ஆகத்து 2013 (UTC)
இரண்டும் சரிதான். ஆனால் சேரலம் முந்திய காலத்திலும் சேரளம் பிந்தைய காலத்திலும் வழங்கப்பட்டவை. எதற்காக கேட்கிறீர்கள் எனத் தெரிந்து கொள்ளலாமா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:49, 23 ஆகத்து 2013 (UTC)
தலைநகரம்[தொகு]
கரூர் சேரர்களின் தலைநகரமாக இருந்ததா? அதற்கான சான்று?--நிர்மல் (பேச்சு) 16:37, 20 சூன் 2015 (UTC)
சேரரின் தலைநகரம் வஞ்சி நகரம் ஆகும் இதற்கு கருவூர் மகோதையபுரம் என்ற பெயரும் உண்டு இப்பொழுது இந்நகரம் கொடுங்கலூர் என்று அழைக்கப்படுகிறது இப்பெயர் பதினான்காம் நூற்றாண்டுக்கு பிறகு ஏற்படுத்தப்பட்டதாகும். தமிழகத்தில் உள்ள கரூர் நகரம் சேரரின் தலைநகரான கரூரை(வஞ்சி) நகரத்தின் பெயரால் அழைக்கப்பட்டிருக்கலாம், சங்ககாலத்தில் இரண்டு சேர வம்சங்கள் இருந்ததை இங்கு கவணிக்கவும் அவர்களில் ஒருவர் வஞ்சியையும் மற்றொருவர் தமிழக கரூரையும் தலைநகர் தலைநகராக கொண்டிருக்கலாம் சதீஸ் (பேச்சு) 03:40, 14 நவம்பர் 2018 (UTC)