கோபாலகிருஷ்ண காந்தி
கோபாலகிருஷ்ண காந்தி (வங்காளம்: গোপালকৃষ্ণ গান্ধী ; ஆங்கிலம்: Gopalkrishno Gandhi; பிறப்பு: ஏப்ரல் 22, 1945) மகாத்மா காந்தியின் பேரன் ஆவார். மகாத்மா காந்தியின் நான்காவது மகன் தேவதாஸ் காந்தியின் மகன். தமிழக அரசியல் தலைவர் சி. ராஜகோபாலாச்சாரியின் மகள்வழி பேரன். இவர் அமெரிக்காவில் பேராசிரியராக பணியாற்றிய ராஜ்மோகன் காந்தி, . 2004 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டுவரை மேற்கு வங்காளத்தின் ஆளுநராக இருந்தவர். 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 01 ஆம் தேதி முதல் சென்னையில் இயங்கிவரும் கலாசேத்திராவின் தலைவராகவும் இருந்து வருகிறார்.
வாழ்கை சுருக்கம் [தொகு]
1968 ஆம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணியில் நுழைந்தார். 1992 வரை பல்வேறு பதவிகளை வகித்தார். இதில் 1968 லிருந்து 1985 ஆம் ஆண்டுவரை தமிழகத்தில் பணியாற்றியதும் அடங்கும்.1996 ஆம் ஆண்டு தென்னாப்ரிக்காவிற்கான இந்திய ஹைகமிசனராக நியமிக்கப்பட்டார். 2002 லிருந்து 2004 ஆம் ஆடு வரை நோர்வே நாட்டில் இந்திய தூதராக நியமிக்கப்பட்டார். அதன் பின் மேற்கு வாங்க ஆளுநராக நியமிக்கப்பட்டார்.