ரோகின்டன் பாலி நரிமன்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
![]() | இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
ரோகின்டன் பாலி நரிமன் (பிறப்பு: 13 ஆகத்து, 1956) இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஆவார். இவர் பாலி சாம் நரிமன் என்னும் உலக அளவில் புகழ் பெற்ற சட்ட அறிஞரின் மகன் ஆவார். நீதிபதி வெங்கடாசலையா என்பவர் ரோகின்டன் பாலி நாரிமனை சீனியர் கவுன்சலாக அமர்த்தினார். முப்பது ஆண்டுகள் சட்டத் துறையில் அறிவும் அனுபவமும் கொண்டவர்.
கல்வியும் தொழிலும்[தொகு]
ரோகின்டன் பள்ளிப் படிப்பை மும்பையில் முடித்தார். வணிகவியல் பட்டப் படிப்பையும் சட்டக் கல்வியையும் தில்லிப் பல்கலைக் கழகக் கல்லூரிகளிலும் பயின்றார். 1980-81 இல் ஆர்வர்டு சட்டப் பள்ளியில் படித்து எல்.எல்.எம். பட்டமும் பெற்றார். மும்பை உயர் நீதி மன்றத்தில் 3 ஆண்டுகள் வழக்குரைஞராகப் பணி புரிந்தார். உச்சநீதி மன்ற நீதிபதி வெங்கடாசலையா ரோகின்டனின் திறமையைக் கருத்தில் கொண்டு சீனியர் கவுன்சலாக இவரை அமர்த்தினார். அப்போது இருந்த வயது வரம்பு விதியை மாற்றி இவர் அப்பதவிக்கு அமர்த்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது 2011-13 ஆண்டுகளில் இந்தியாவின் சொலிசிடர் செனரல் பதவியை வகித்தார். 2014 சூலைத் திங்கள் முதல் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணிபுரிந்து வருகிறார்
பிற ஈடுபாடுகள்[தொகு]
பார்சி மதக் குருமாருக்குரியத் தகுதிகளைப் பெற்றவர். பார்சிக் கோவில்களில் பூசை செய்வார்.பார்சி இன மக்களுக்குத் திருமணச் சடங்குகளைச் செய்து வைப்பார். பீத்தோவன் போன்ற மேற்கத்திய இசையைக் கேட்பதில் நாட்டம் கொண்டவர். வரலாறு, தத்துவம், இலக்கியம், அறிவியல் ஆகியத் துறை நூல்களைப் படிக்கும் ஆர்வம் கொண்டவர். அரசியல் சட்டங்கள், சிவில் சட்டங்கள் தொடர்பான பல சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார். நியூயார்க்கு பிலடெல்பியா போன்ற நாடுகளுக்குச் சென்று தம் மதமான சொராஸ்டிரிய மதம், பிற மதங்கள் பற்றிய ஆய்வு உரைகளை ஆற்றியுள்ளார். உச்ச நீதி மன்ற வழக்கறிஞர்கள் நல அறக்கட்டளை உருவாக்குவதில் துணை நின்றார்.
மேற்கோள்[தொகு]
http://rohintonnariman.com/speech/law.html பரணிடப்பட்டது 2014-10-20 at the வந்தவழி இயந்திரம்
http://rohintonnariman.com/ பரணிடப்பட்டது 2014-10-20 at the வந்தவழி இயந்திரம்