கரவெட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎சிறப்புகள்: Correct word, replaced: பாராளுமன்ற → நாடாளுமன்ற
 
வரிசை 70: வரிசை 70:
* [[1920கள்|1920]], [[1930கள்|30களில்]] 'குடி அரசு'ப் பத்திரிகைக்கு இலங்கைத் தமிழரிடையே ஒரு வாசக வட்டம் இருந்தது. உதாரணமாக, கரவெட்டியில், 1930 இன் பிற்காலத்தில் பெரியாரின் கொள்கைகளை எடுத்துப்பேசிய ஓர் இளைஞர் குழாம் இருந்தது. அவர்களில் ஒருவர் 'குடி அரசு' என்ற பட்டப் பெயருடன் (குடியரசு கந்தவனம்)(குடியரசு கந்தப்பு) இறக்கும்வரை (ஏறத்தாழ 1960கள் வரை) அழைக்கப்பட்டு வந்தார்.
* [[1920கள்|1920]], [[1930கள்|30களில்]] 'குடி அரசு'ப் பத்திரிகைக்கு இலங்கைத் தமிழரிடையே ஒரு வாசக வட்டம் இருந்தது. உதாரணமாக, கரவெட்டியில், 1930 இன் பிற்காலத்தில் பெரியாரின் கொள்கைகளை எடுத்துப்பேசிய ஓர் இளைஞர் குழாம் இருந்தது. அவர்களில் ஒருவர் 'குடி அரசு' என்ற பட்டப் பெயருடன் (குடியரசு கந்தவனம்)(குடியரசு கந்தப்பு) இறக்கும்வரை (ஏறத்தாழ 1960கள் வரை) அழைக்கப்பட்டு வந்தார்.
* [[கண்ணகி]] [[மதுரை]]யை எரித்து விட்டு வந்து தங்கி நின்ற இடங்கள் [[வற்றாப்பளை அம்மன்]], [[மட்டுவில் பண்டிதலச்சி அம்மன்]], [[கரவெட்டி அத்துளு அம்மன்]], [[அல்வாய் முத்துமாரியம்மன்]] என்பது ஐதீகம்.
* [[கண்ணகி]] [[மதுரை]]யை எரித்து விட்டு வந்து தங்கி நின்ற இடங்கள் [[வற்றாப்பளை அம்மன்]], [[மட்டுவில் பண்டிதலச்சி அம்மன்]], [[கரவெட்டி அத்துளு அம்மன்]], [[அல்வாய் முத்துமாரியம்மன்]] என்பது ஐதீகம்.
* [[கரவெட்டி விக்கினேஸ்வராக் கல்லூரி]] யின் 3 பழைய மாணவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். [[பருத்தித்துறை]]த் தொகுதியில் [[பொன். கந்தையா]], அதிலிருந்து பிரிக்கப்பட்ட [[உடுப்பிட்டி]] தொகுதியில் [[மு. சிவசிதம்பரம்]], [[கே. ஜெயக்கொடி]] ஆகியோர்.
* [[கரவெட்டி விக்கினேஸ்வராக் கல்லூரி]] யின் 3 பழைய மாணவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். [[பருத்தித்துறை]]த் தொகுதியில் [[பொன். கந்தையா]], அதிலிருந்து பிரிக்கப்பட்ட [[உடுப்பிட்டி]] தொகுதியில் [[மு. சிவசிதம்பரம்]], [[கே. ஜெயக்கொடி]] ஆகியோர்.


==இவற்றையும் பார்க்கவும்==
==இவற்றையும் பார்க்கவும்==

21:34, 25 சூலை 2022 இல் கடைசித் திருத்தம்

கரவெட்டி
நகரம்
நாடுஇலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்யாழ்ப்பாண மாவட்டம்
பிரதேச செயலாளர் பிரிவுவடமராட்சி தென்மேற்கு

கரவெட்டி (Karaveddy) இலங்கையின் வட மாகாணத்தில் யாழ் மாவட்டத்தில் வடமராட்சி தெற்கு-மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இதன் எல்லைகளாக உடுப்பிட்டி, புலோலி, கரணவாய், நெல்லியடி ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளன.

இங்குள்ள கோயில்கள்[தொகு]

  • கரவெட்டி அத்துளு அம்மன்
  • கரவெட்டி தச்சந்தோப்பு பிள்ளையார்
  • கரவெட்டி கிழக்கு கிழவிதோட்ட பிள்ளையார்
  • கரவெட்டி கிழக்கு நுணுவில் பிள்ளயார்
  • கரவெட்டி கிழக்கு யார்க்கரு பிள்ளையார்
  • கரவெட்டி மேற்கு வெல்லன் பிள்ளையார்

இங்குள்ள கல்லூரிகள்[தொகு]

இங்கு பிறந்த புகழ் பூத்தோர்[தொகு]

சிறப்புகள்[தொகு]

  • கரவை வேலன் கோவை - கரவெட்டி வேலாயுதபிள்ளை என்பவர் மேல் பாடப்பட்ட நூல். அதில் இருந்து ஒரு செய்யுள்:
"முத்தம் பொதியும் பவளந் திறந்து முறையினும்பேர் துத்தம்
பயின்மொழி யாற்சொல்லுஞ் சால்வழிச் சூழ்பெருகும்
நத்தம் பயிலுங் கரவையில் வேலனன் னாட்டிலுங்கன்
சித்தம் பயில்பதி சொல்லா திருக்குந்தெரிவையரே."
  • வடமராட்சி கட்டைவேலி நெல்லியடிப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்துக் கலாசாரக் கூட்டுறவுப் பெருமன்றம் - இலங்கையிலேயே இலக்கிய வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்குமாக உழைக்கின்ற, செயற்படுகின்ற ஒரே பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் இதுவேயாகும். நூலக வசதி - ஒரு வருடத்தில் நூலகத்தில் அதிகமான புத்தகங்களை வாசிக்கின்றவர்களுக்குப் பரிசு வழங்கும் திட்டமும் உண்டு - நூல் வெளியீடு போன்ற பணிகளை இச்சங்கம் மாத்திரமே தொடர்ந்து செய்து வருகின்றது.
  • வடமராட்சி கரவெட்டி பகுதியிலை உள்ள சோனப்பு திடலில் அந்தக் காலத்தில் ஆண்டு தோறும் மாட்டுச் சவாரி நடக்கும்.
  • அன்ரன் பாலசிங்கம் அவர்கள் வளர்ந்த இடமான கரவெட்டி, இடதுசாரி சிந்தனைகளின் விதைநிலம். சமூக உட்கொடுமைகளுக்கெதிராகக் கிளர்ந்தெழுந்த மாக்சிசவாதிகள் நிறைந்த சிவப்பு மண் அது.
  • 1920, 30களில் 'குடி அரசு'ப் பத்திரிகைக்கு இலங்கைத் தமிழரிடையே ஒரு வாசக வட்டம் இருந்தது. உதாரணமாக, கரவெட்டியில், 1930 இன் பிற்காலத்தில் பெரியாரின் கொள்கைகளை எடுத்துப்பேசிய ஓர் இளைஞர் குழாம் இருந்தது. அவர்களில் ஒருவர் 'குடி அரசு' என்ற பட்டப் பெயருடன் (குடியரசு கந்தவனம்)(குடியரசு கந்தப்பு) இறக்கும்வரை (ஏறத்தாழ 1960கள் வரை) அழைக்கப்பட்டு வந்தார்.
  • கண்ணகி மதுரையை எரித்து விட்டு வந்து தங்கி நின்ற இடங்கள் வற்றாப்பளை அம்மன், மட்டுவில் பண்டிதலச்சி அம்மன், கரவெட்டி அத்துளு அம்மன், அல்வாய் முத்துமாரியம்மன் என்பது ஐதீகம்.
  • கரவெட்டி விக்கினேஸ்வராக் கல்லூரி யின் 3 பழைய மாணவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். பருத்தித்துறைத் தொகுதியில் பொன். கந்தையா, அதிலிருந்து பிரிக்கப்பட்ட உடுப்பிட்டி தொகுதியில் மு. சிவசிதம்பரம், கே. ஜெயக்கொடி ஆகியோர்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரவெட்டி&oldid=3480470" இலிருந்து மீள்விக்கப்பட்டது