கருணா (ஓவியர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இயூஜின் வின்சென்ற்
பிறப்புகரவெட்டி, யாழ்ப்பாணம்
இறப்பு(2019-02-22)பெப்ரவரி 22, 2019
டொராண்டோ, கனடா
மற்ற பெயர்கள்கருணா
பணிஓவியர்
அறியப்படுவதுஓவியர்

கருணா (இயூஜின் வின்சென்ட், இறப்பு: பெப்ரவரி 22, 2019) ஓர் ஈழத்து ஓவியர் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இயூஜின் வின்சென்ற் இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டம், கரவெட்டி மேற்கு, அரசடியை அண்மித்த பகுதியில் பிறந்தவர். புகழ் பெற்ற ஓவியர் மாற்குவின் மாணவர். புலம்பெயர்ந்து கனடா, டொராண்டோவில் வாழ்ந்து வந்த இவர் ஏராளமான தமிழ் நூல்களின் அட்டைப்படங்களை வரைந்துள்ளார். திண்ணை, உலகத் தமிழோசை உள்ளிட்ட பல இதழ்களில் இவரது ஓவியங்கள் வெளிவந்துள்ளன. பத்திரிகை வடிவமைப்பு, விளம்பர வடிவமைப்பு போன்றவற்றில் பெயர் பெற்ற இவர் சிறந்ததொரு ஒளிப்படக் கலைஞருமாவார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கருணா_(ஓவியர்)&oldid=2662460" இலிருந்து மீள்விக்கப்பட்டது