திரிகடுகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி →top |
|||
வரிசை 25: | வரிசை 25: | ||
==வெளி இணைப்புகள்== |
==வெளி இணைப்புகள்== |
||
* [http://www.chennailibrary.com/pathinenkeelkanakku/thirikadugam.html திரிகடுகம் மூலம்] |
* [http://www.chennailibrary.com/pathinenkeelkanakku/thirikadugam.html திரிகடுகம் மூலம்] |
||
* [http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D திரிகடுகம்], [[ஆறுமுக நாவலர்|ஆறுமுக நாவலரின்]] உரையுடன் |
|||
[[பகுப்பு:பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்]] |
[[பகுப்பு:பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்]] |
13:00, 31 சூலை 2015 இல் நிலவும் திருத்தம்
திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இதிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்பட்டுள்ள மூன்று நீதிகள் மனிதனின் அறியாமையாகிய நோயைப் போக்கி, வாழ்க்கை செம்மை பெற உதவுமென்ற கருத்தமைந்தமையால் இந்நூல் திரிகடுகம் எனப்படுகிறது. 101 வெண்பாக்களைக் கொண்டது இந்நூல். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ,கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது. இதன் ஒவ்வொரு பாடலிலும் இம்மூவர் அல்லது இம்மூன்றும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சில பாடல்கள்
ஒருவன், உயர்வும் ஊக்கமும் பெறவேண்டுமானால், உலகத்தோடு எப்படி ஓட்ட ஒழுகவேண்டும் என்பது பற்றி, கூறும் 56வது பாடல்
“ | முந்தை எழுத்தின் வரவுணர்ந்துபிற்பாடு
தந்தையும் தாயும் வழிபட்டு –வந்த ஒழுக்கம் பெருநெறி சேர்தல் இம்மூன்றும் விழுப்ப நெறி தூராவாறு |
” |
பிறர் தன்னை உயர்த்தி பேசும் பொழுது இது தகாது என்று நாணுதலும், தன்னை விரும்பாதவர் தன்னை இகழுமிடத்து வெகுளாமல் பொறுத்தலும், மேகத்தைப் போல் கைம்மாறு கருதாமல் உதவி செய்தலும் சிறந்த செல்வமாகும் என்னும் வாழ்வியல் உண்மையை சொல்லும் 6வது பாடல்
“ | பிறர் தன்னைப் பேணுங்கால் நாணலும் பேணார்
திறன்வேறு கூறிற் பொறையும்—அறவினையைக் காராண்மை போல வொழுகலும் இம்மூன்றும் ஊராண்மை என்னும் செருக்கு. |
” |
வெளி இணைப்புகள்
- திரிகடுகம் மூலம்
- திரிகடுகம், ஆறுமுக நாவலரின் உரையுடன்