தருமை ஆதீனம்
Jump to navigation
Jump to search
தருமபுரம் ஆதீனம் அல்லது தருமை ஆதீனம் என்பது சைவ மடங்களுள் ஒன்றாகும். தமிழ்நாட்டில் மயிலாடுதுறையில் இம்மடம் அமைந்துள்ளது. 1987 இல் சுமார் 27 சிவாலயங்கள் இதனுடைய கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன.[1]
இவ்வாதீனம் சமயம் சார்ந்த பணிகளோடு, மயிலாடுதுறையில் மகப்பேறு நிலையம் அமைத்தும், சிங்கிப்பட்டி காசநோய் மருத்துவமனை, அடையார் புற்றுநோய் மருத்துவமனை(அடையாறு கான்சர் இன்ஸ்டிடியூட்) போன்ற பொது நிறுவனங்களுக்கு பெருந்தொகை வழங்கியும், ஏழை மாணவர்களுக்கு கல்வி கற்க கட்டண உதவி புரிந்தும் சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றது.[2]
குறிப்பு[தொகு]
- ↑ M. Thangaraj (2003). Tamil Nadu: an unfinished task. SAGE. பக். 170. ISBN 0761997806, ISBN 978-0-7619-9780-1.
- ↑ http://www.tamilvu.org/library/l4130/html/l4130302.htm