சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில்
சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் | |
---|---|
![]() | |
சுப்பிரமணிய சுவாமி கோயில், சென்னிமலை, ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு | |
ஆள்கூறுகள்: | 11°09′26″N 77°35′29″E / 11.1572°N 77.5915°E |
அமைவிடம் | |
நாடு: | ![]() |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | ஈரோடு |
அமைவிடம்: | இச்சிப்பாளையம், சென்னிமலை, பெருந்துறை வட்டம்[1] |
சட்டமன்றத் தொகுதி: | காங்கேயம் |
மக்களவைத் தொகுதி: | திருப்பூர் |
கோயில் தகவல் | |
மூலவர்: | பழனியாண்டவர் |
தாயார்: | அமிர்த வல்லி, சுந்தர வல்லி |
குளம்: | மாமாங்கம் |
சிறப்புத் திருவிழாக்கள்: | தைப்பூசம், பங்குனி உத்தரம் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
வரலாறு | |
கட்டிய நாள்: | பத்தாம் நூற்றாண்டு |
இணையத்தளம்: | http://www.chennimalaitemple.tnhrce.in/ |

சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் என்பது தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம், சென்னிமலை என்னும் ஊரில் அமைந்துள்ள மலை மீதுள்ள முருகன் கோயிலாகும்.[2][3] இந்தியப் புகழ்பெற்ற இந்த கோவிலில் முருகனுக்கு அபிஷேகம் செய்தபின் தயிர் புளிப்பதில்லை என்ற அதிசயமும் நிகழ்கிறது.[1][4]
ஈரோடு - பெருந்துறை சாலையில் அமைந்த இக்கோயில், ஈரோட்டிலிருந்து 30 கி.மீ. தொலைவிலும், பெருந்துறையிலிருந்து 13 கி.மீ. தொலைவிலும், ஈங்கூர் தொடருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் உள்ள சென்னிமலை அருகே உள்ள இச்சிப்பாளையத்தின் மலைக் குன்றின் மீது அமைந்துள்ளது.
மலைப்படி ஆரம்பம் முதல், மலை உச்சிவரை கடம்பனேசுவரர், இடும்பன், வள்ளியம்மன் பாதம், முத்துக்குமாரவாசர் என்ற மலைக்காவலர், ஆற்றுமலை விநாயகர் என்று சிறுசிறு சன்னதிகள் உள்ளன. நீண்ட இலைகளுடன் கூடிய துரட்டி மரம் என்ற மிகப் பழைய மரம் ஒன்று இங்கு மலைப்படி வழியில் உள்ளது. சென்னிமலை முருகன் கோவில் கிபி 9ஆம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டது இந்த சென்னிமலை முருகன் கோவில். ஆனால் சென்னிமலை ஆண்டவர் மூலவர் சிலை சுமார் மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிலை இந்த சென்னிமலை முருகன்.
சிறப்புகள்
[தொகு]- தேவராய சாமிகள் என்ற முருகபக்தர் இயற்றிய கந்த சசுடி கவசம் என்ற என்ற கவசமாலை இத்தலத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்டது.[5]
- இத்தலத்தின் குன்றில் இரண்டு காளை மாடுகளைப் பூட்டிய மாட்டு வண்டி ஒன்று இந்த மலைப்படிக்கட்டுகள் வழியே ஏறிச்சென்று மலை உச்சி அடைந்த சம்பவம் இங்கு சமீபத்தில் நடந்துள்ளது.
விழாக்கள்
[தொகு]- தைப்பூசத் தேர்த்திருவிழா மற்றும் பங்குனி தேர்தல் விழா
- செவ்வாய் கிழமை, சஷ்டி திதி, கார்த்திகை நட்சத்திரம், அமாவாசை மற்றும் பௌர்ணமி சிறப்பு பூசை நாட்கள்
கோயில் அமைப்பு
[தொகு]இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[6]
மேற்கோள்கள்
[தொகு]
- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". [www.tamilvu.org/library/thirukkovil/Index.html தமிழ் இணையக் கல்விக்கழகம்]. Retrieved பெப்பிரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Arulmigu Subramaniyaswamy Temple, Malaikoil, Chennimalai - 638051, Erode District [TM010228].,Chennimalaitemple,Chenniandavar". hrce.tn.gov.in. Retrieved 2025-02-11.
- ↑ "Sri Subramaniaswami temple Temple : Sri Subramaniaswami temple Sri Subramaniaswami temple Temple Details". temple.dinamalar.com. Retrieved 2025-02-11.
- ↑ அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி (தண்டாயுதபாணி) திருக்கோயில்
- ↑ சஷ்டியை நோக்க சரவணபவனார்... கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய சென்னிமலை முருகன் கோயில்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: External link in
(help)|publisher=