ஈஞ்சார் ஊராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈஞ்சார்
—  ஊராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் விருதுநகர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் வீ ப ஜெயசீலன், இ. ஆ. ப [3]
ஊராட்சித் தலைவர்
மக்களவைத் தொகுதி விருதுநகர்
மக்களவை உறுப்பினர்

மாணிக்கம் தாகூர்

சட்டமன்றத் தொகுதி சிவகாசி
சட்டமன்ற உறுப்பினர்

ஜி. அசோகன் (இ.தே.கா)

மக்கள் தொகை 929
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


ஈஞ்சார் ஊராட்சி (Enjar Gram Panchayat), தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, சிவகாசி சட்டமன்றத் தொகுதிக்கும் விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 929 ஆகும். இவர்களில் பெண்கள் 477 பேரும் ஆண்கள் 452 பேரும் உள்ளனர்.

அடிப்படை வசதிகள்[தொகு]

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]

அடிப்படை வசதிகள் எண்ணிக்கை
குடிநீர் இணைப்புகள் 57
சிறு மின்விசைக் குழாய்கள் 4
கைக்குழாய்கள் 3
மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 3
தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள்
உள்ளாட்சிக் கட்டடங்கள் 11
உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 1
ஊரணிகள் அல்லது குளங்கள் 6
விளையாட்டு மையங்கள்
சந்தைகள்
ஊராட்சி ஒன்றியச் சாலைகள் 68
ஊராட்சிச் சாலைகள்
பேருந்து நிலையங்கள்
சுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 2

சிற்றூர்கள்[தொகு]

இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:

  1. ஹரிஜன் காலனி
  2. அக்ரஹாரம்
  3. ஈஞ்சார்

சுற்றுலா மற்றும் ஆன்மீக தலங்கள

ஈஞ்சார் பகுதியில் கி.பி., 1236 ல் பாண்டிய மன்னரின் ஒருவரான, மறவன்மணி சுந்திரபாண்டியர் காலத்தில் கட்டிய மீனாட்சி அம்மன் கோயில் உள்ளது. மூலவராக சிவன், சக்தியாக மீனாட்சி அம்மன், விநாயகர், முருகன், அய்யனார் போன்ற 18 சுவாமி சிலைகள் இருந்துள்ளன. 

ஆனால் தற்போது எந்த சிலைகளும் இல்லை. கோயிலை சுற்றி கலை நயமிக்க கல்வெட்டுகள், சித்திரங்கள், அழகோவிய சிலைகளும் உள்ளன. திறந்த வெளியில் நந்திபகவான் உள்ளார். கோயிலோ எந்த வித பராமரிப்பு இன்றி கேட்பாரற்று உள்ளது. சுற்றியும் புதர்மண்டி காட்சி அளிக்கிறது. கட்டட சிலைகளோ துாசி படிந்து பாழ்பட்டுவருகிறது. கோயில் மூலவர் சன்னதி கீழ் பாதாள சுரங்கம் உள்ளது. இது, மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ஸ்ரீவி ஆண்டாள் கோயில் செல்ல வழியாக உள்ளது. பெருமை வாய்ந்த கோயிலை இந்து அறநிலைத்துறை கையகப்படுத்தி வசதி செய்ய வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.ஆயிரம் ஆண்டு பழமையான கோயில் கேட்பாரற்று உள்ளது. இங்குள்ள சுவாமி சிலைகள் திருடப்பட்டு உள்ளன. 2017ல் மூலவர் சிலை திருடுப் போனது. திருத்தங்கல் போலீஸ் வழக்குப்பதிவு செய்தும் கண்டுபிடிக்கவில்லை. நந்தி சிலையை கடத்தமுயன்றபோது ,மக்கள் விரட்டி அடித்துள்ளனர். ஈஞ்சார் கோயிலை சுற்றி தோட்டம், ரதவீதிகள், தாமரைக்குளம் என பெரிய நகரம் இருந்துள்ளது. மன்னர், போர் காலத்தில் சுரங்கம் வழியாக தப்பிக்கவும், மறைந்து வாழும் இடமாகவும்,பொன், பொருளை பாதுகாக்கும் இருப்பிடமாக இருந்துள்ளது.

சான்றுகள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  5. "சிவகாசி வட்டார வரைபடம்". tnmaps.tn.nic.in. தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015. {{cite web}}: Unknown parameter |https://web.archive.org/web/20160305033159/http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode= ignored (help)
  6. 6.0 6.1 "தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்" (PDF). tnrd.gov.in. தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  7. "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈஞ்சார்_ஊராட்சி&oldid=3544799" இலிருந்து மீள்விக்கப்பட்டது