அழுந்தூர், திருச்சிராப்பள்ளி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அழுந்தூர்
அழிந்தியூர்
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருச்சிராப்பள்ளி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்621 651

அழுந்தூர் (Alundur) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆகும். இந்த ஊரில் கிடைத்த கல்வெட்டுகளில் இந்த ஊர் முன்பு அழிந்தியூர் என்று அழைக்கப்பட்டது தெரியவருகிறது.[1]

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான திருச்சிராப்பள்ளிக்கு தெற்கே மேலூர் சாலையில் 19 கிலோமீட்டர் தொலைவிலும், மணிகண்டத்தில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 372 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைபாடு[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த கிராமத்தில் 651 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 2643 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 1340 (50.7 % ) என்றும், ஆண்களின் எண்ணிக்கை 1303 என்றும் உள்ளது. கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 62.9 % ஆகும்.[2] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.

ஊரில் உள்ள கோயில்கள்[தொகு]

மேற்கோள்[தொகு]

  1. "Varalaaru - A Portal For South Asian History". www.varalaaru.com. பார்க்கப்பட்ட நாள் 2023-05-28.
  2. "Alundur Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2023-05-28.