கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நவம்பர் 30 - இலங்கையின் தலைநகர் கொழும்பில் நடைபெற்ற திடீர் தேடுதல் வேட்டையில் 350-க்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள், யுவதிகள் கைது செய்யப்பட்டு காவல் நிலையங்களில் அடைக்கப்பட்டனர். (புதினம்)
நவம்பர் 26 - அனுராதபுரம் "மகாவிலாச்சிய" என்ற கிராமத்தில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் நான்கு பொதுமக்களின் சடலங்கள் மீட்கப்பட்டன. (புதினம்)
நவம்பர் 25 - கிளிநொச்சி தர்மபுரத்தில் இலங்கை வான்படை நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர். (புதினம்)
நவம்பர் 21 - கொழும்பின் தென்பகுதியில் உள்ள இரத்மலானையில் அமைந்துள்ள "சண்டே லீடர்" மற்றும் "மோர்ணிங் லீடர்" ஆகிய வார ஏடுகளின் அச்சகம் அதிகாலை அடையாளம் தெரியாத ஆயுதக்குழு ஒன்றினால் எரித்து அழிக்கப்பட்டது. (புதினம்)
நவம்பர் 7 - யாழ். கிளாலி முதல் முகமாலை வரையான பகுதியில் இலங்கைப் படையினர் மேற்கொண்ட பாரியளவிலான முன்நகர்வு விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டதுடன் 20-க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டு 100-க்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்ததாகவும் ஒரு போராளி இறந்ததாகவும் புலிகள் தெரிவித்தனர். 52 புலிகளும் தமது தரப்பில் 11 பேரும் இறந்ததாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.(புதினம்), (டெய்லி மிரர்)
நவம்பர் 3 - இலங்கையில் இருந்து இரகசியமாக லண்டனுக்கு சென்ற துணை இராணுவக் குழுவைச் சேர்ந்த கருணா, போலி கடவுச் சீட்டு வைத்திருந்ததாக லண்டனில் கைது செய்யப்பட்டார். (பிபிசி)
நவம்பர் 1 -முருங்கன் மன்னார் முன்னரங்க நிலைகளில் ஏற்பட்ட மோதல்களில் இரு தரப்பிற்கும் சேதம் ஏற்பட்டது. குறைந்தது ஒரு குடிமகள் கொல்லப்பட்டாள்.(தமிழ்நெட்), (இலங்கை பாதுகாப்பு அமைச்சு)