திராட்சை செடி உவமை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
திராட்சைச் செடி.
இயேசு தனது போதனைகளின் போது கூறிய உவமானமாகும். இது விவிலியத்தின் புதிய ஏற்பாட்டின் யோவான் 15:1-6 இல் காணப்படுகிறது. இது கதை வடிவில் அமையவில்லை. மாறாக, இயேசு தன்னைத் திராட்சைச் செடிக்கும், கடவுளைத் தோட்டக்காரருக்கும் ஒப்பிட்டுப் பேசுகிறார்.
உவமை[தொகு]
நான் மெய்யான திராட்சைச்செடி, என் பிதா திராட்சைத் தோட்டக்காரர். என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கின்ற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார். என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சைச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள். நானே திராட்சைச்செடி; நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான். என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது. ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோகும்.
இவற்றையும் பார்க்கவும்[தொகு]
உசாத்துணை[தொகு]
வெளியிணைப்பு[தொகு]
- தமிழ் கிறிஸ்தவ சபை பரணிடப்பட்டது 2007-02-12 at the வந்தவழி இயந்திரம்