அத்வைத வேதாந்த ஆசிரியர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அத்வைத வேதாந்த ஆசிரியர்கள் அல்லது அத்வைத சித்தாந்திகள் (List of teachers of Advaita Vedanta) எனப்படுவோர் இறைவனும், சீவனும் ”இரண்டற்றது” அத்வைதம் எனும் கொள்கை உடையவர்கள் ஆவர். மேலும் இறைவன் சத்-சித்-ஆனந்தமயமானவர் என்றும், இறைவன் (பிரம்மம்) பெயர், உருவம், குணங்கள் அற்றவராக இருப்பவர், பிரம்மமே பிரபஞ்சமாகவும், சீவராசிகளுமாக உள்ளது என்ற கொள்கை உடையவர்கள்.

” ஈஸ்வரன் ஜெகத்காரணம் ”, பார்க்கப்படும் இந்த ” ஜெகத் மித்யா ” (நிலையற்றது), ஜெகத்தை படைத்த ”பிரம்மம் சத்யம்” என்பது இவர்களின் சித்தாந்தம். இவர்களுடைய சித்தாந்தங்கள், உபநிடதங்கள் மற்றும் பிரம்ம சூத்திரம் போன்ற வேதாந்த சாத்திரங்களில் அதிகமாக காணப்படுகிறது. அத்வைத சித்தாந்தங்கள், வேத காலத்திலிருந்து தற்காலம் வரை குருகுலத்தில், குரு - சீடர் பரம்பரையில் அத்வைத வேதாந்த சாத்திரங்கள் உபதேசிக்கப்பட்டு வருகிறது.

வேதகால அத்வைத வேதாந்த ஆசிரியர்கள்[தொகு]

  • யாக்ஞவல்கியர், இவர் தன் மனைவி மைத்ரேயிக்கு ’பிரம்மவித்தை’யை போதித்தார்
  • உத்தாலக ஆருணி, இவர் ’ஸத்’வித்தையை சுவேதகேதுவிற்கு உபதேசித்தார்.

பாதராயணருக்கு முந்தைய அத்வைத வேதாந்த ஆசிரியர்கள்[தொகு]

  • பதரி - [பிரகதாரண்யகம் 1.2.30]
  • ஒளடுலோமி - [பிரகதாரண்யகம் 1.3.21]
  • கசகிருஷ்ணர் - [பிரகதாரண்யகம் 1.4.22]
  • அஸ்மாத்தியர் - [பிரகதாரண்யகம் 1.2.29,1.4..20]
  • ஐதரேயர் - [பிரகதாரண்யகம் 111.4.4]
  • தர்சஜினி - [பிரகதாரண்யகம் 111.1.9]
  • பாதராயணர் - பிரம்ம சூத்திரத்தின் ஆசிரியர்

பாதராயணாருக்கு பிந்திய அத்வைத வேதாந்த ஆசிரியர்கள்[தொகு]

சங்கரருக்கு பிந்திய அத்வைத வேதாந்த ஆசிரியர்கள்[தொகு]

  • சுரேஷ்வரர் - (8ஆம் நூற்றாண்டு) - சங்கரரின் சீடர், விருத்திகாரர் [சங்கர பாஷ்யத்திற்கு விளக்காசிரியர்].
  • பத்மபாதர் - (8ம் நூற்றாண்டு) - சங்கரரின் சீடர், தைத்திரீய உபநிடதம் & பிரகதாரண்யக பாஷ்யத்திற்கு விளக்க ஆசிரியர் [விருத்திகாரர்]
  • அஸ்தாமலகர் - (8ம் நூற்றாண்டு) - சங்கரரின் சீடர்
  • தோடகர் - (8ம் நூற்றாண்டு) - சங்கரரின் சீடர்
  • சர்வாக்ஞாத்ம முனி (850 - 950)
  • வாசஸ்பதி மிஸ்ரர் - 9ம் நூற்றாண்டு, பல அத்வைத வேதாந்த நூல்களுக்கு விளக்கம் எழுதியவர் (விருத்திகாரர்)
  • ஸ்ரீஹர்ஷர் (1169 - 1225) ”காந்தன-காந்த-காத்யம்” எனும் நூலை எழுதியவர்.
  • பிரகாசாத்மா யதி (1200)
  • ஆனந்தகிரி - டீக்காகாரர், சங்கரரின் அனைத்து பாஷ்யத்திற்கும் விளக்க உரை வழங்கியுள்ளார்.
  • விமுக்தாத்மர் (1200)
  • சித்சுகர் - கி. பி., 1220களில் வாழ்ந்த அத்வைத கொள்கைவாதி. பட்டறிவு சார்ந்த உள்ளமையியல் (Ontology) மற்றும் அறிவாராய்ச்சியியல் (Epistemology) பற்றிய எதிர்மறையான வாதத்தை வைத்து புகழ் பெற்றவர்.
  • அமலானந்தர் (1247)
  • வித்யாரண்யர் (1350 - 1386) - நூலாசிரியர், பஞ்சதசீ மற்றும் ’திருக்-திருஷ்ய விவேகம்’ , மற்றும் சிருங்கேரி மடாதிபதியாக இருந்தவர்.
  • மாதவர் (14ம் நூற்றாண்டு), நூலாசிரியர், ’சர்வ தர்சன சங்கிரஹ’
  • சதானந்த யோகேந்திரர் (15ம் நூற்றாண்டு) - நூலாசிரியர், ’வேதாந்த சாரம்
  • தர்மராஜ அத்வேந்திரர் (1550-1650)
  • மதுசூதன சரஸ்வதி (1565-1650) - நூலசிரியர், ’அத்வைத சித்தி’
  • அப்பைய தீட்சிதர் (1603-) - நூலாசிரியர் ’பரிமளா’ மற்றும் ‘சித்தார்த்த-லேசா-சங்கிரகம்’
  • இலக்குமி தாரா கவி - நூலாசிரியர், ’அத்வைத மகரந்தம்’
  • சதானந்த யதி - கி.பி. 18வது நூற்றாண்டில் வாழ்ந்தவர். ’அத்வைத பிரம்ம-சித்தி’ எனும் நூலை எழுதியவர்.

19ம் நூற்றாண்டு முதல் அத்வைத வேதாந்த ஆசிரியர்கள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]