வேம்பநாட்டு ஏரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வேம்பநாட்டு ஏரி | |
|---|---|
|
|
|
| புவியமைவுக் கூறுகள் | அமைவு: |
| உள்வடிகால் | அச்சன்கோவில் ஆறு, மணிமாலா ஆறு, மீனச்சில் ஆறு, மூவாட்டுப்புழா ஆறு, பம்பை, பெரியாறு |
| வெளிப்போக்கு | பல வாய்க்கால்கள் |
| வடிநில நாடுகள் | இந்தியா |
| அதிக அளவு நீளம் | 96 கிமீ |
| அதிக அளவு அகலம் | 14 கீமீ |
| மேற்பரப்பளவு | 1512 கி.மீ² |
| மேற்பரப்பின் உயரம் | 0 மீ |
| குடியிருப்புகள் | ஆலப்புழா, கொச்சி, செர்த்தலா |
வேம்பநாட்டு ஏரி அல்லது வேம்பநாட்டுக் காயல் இந்தியாவிலேயே மிகவும் நீளமான ஏரியாகும். கேரளத்தின் மிகப்பெரிய ஏரியான இது இந்தியாவின் பெரும் ஏரிகளுள் ஒன்று.
இந்தக் காயலின் பரப்பளவு 1512 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். ஆழப்புழா, எர்ணாகுளம், கோட்டயம் மாவட்டங்கள் இவ் ஏரியின் எல்லைகளாக அமைந்துள்ளன. இந்த ஏரி அரபிக்கடலின் மட்டத்திலேயே இருக்கிறது. ஏரியையும் கடலையும் சிறு குறுகிய நிலப்பரப்பு பிரிக்கிறது. பெரியாறு, மீனச்சில், பம்பா முதலிய ஆறுகள் இந்த ஏரியில் கலக்கின்றன.