புன்னத்தூர் கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புன்னத்தூர் கோட்டை (Punnathurkotta) என்பது கோட்டபாடியில் அமைந்துள்ள ஒரு கோட்டை மற்றும் முன்னாள் அரண்மனையாகும். இது தென்னிந்தியாவில் கேரள மாநிலத்தின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணா கோயிலிலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் இது அமைந்துள்ளது.[1]

புன்னத்தூர் கோட்டாவில் யானைகள் சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளன

விளக்கம்[தொகு]

புன்னத்தூர்கோட்டை ஒரு காலத்தில் உள்ளூர் மன்னர்களின் அரண்மனையாக இருந்துள்ளது. ஆனால் இப்போது அரண்மனை மைதானம் குருவாயூர் கோயிலுக்கு சொந்தமான யானைகளை தங்க வைக்கப் பயன்படுகிறது. மேலும் ஆனக்கோட்டா ("யானைக் கோட்டை" என்று பொருள்) என்றும் பெயராக மருவியுள்ளது. இங்கு 86 யானைகள் தங்க வைக்கப்பட்டிருந்தன. ஆனால் தற்போது சுமார் 59 யானைகளே உள்ளன. யானைகள் குருவாயூர் குருவாயூரப்பன் கோயில் பக்தர்களால் வேண்டுதலுக்காக வழங்கப்பட்டவை ஆகும்.

இது 'யானைகளின் அரண்மனை' என்றும் விவரிக்கப்படுகிறது [2] யானைகள் சிறீ கிருட்டிணருக்கு சேவை செய்வதற்கும், ஆண்டு முழுவதும் நடக்கும் பல விழாக்களில் பங்கேற்பதற்கும் இந்த யானைகள் பயன்படுத்தப்படுகிறது. 82 வயதான இராமச்சந்திரன் என்ற ஒரு வயதான யானை இங்குள்ளது. கஜபூசை ( யானைகளை வணங்குதல் ) மற்றும் ஆனயூட்டு (யானைகளுக்கு உணவளித்தல்) ஆகிய சடங்குகள் விநாயகர் பிரசாதமாக இங்கு அனுசரிக்கப்படுகின்றன. புகழ்பெற்ற யானையான " குருவாயூர் கேசவன் " இங்கு தங்க வைக்கப்பட்டிருந்தது.

இந்த வளாகத்தில் ஒரு நாலுகெட்டு வீடு ஒன்று உள்ளது. இது பாரம்பரிய செவ்வக வீடான இது மத்தியில் முற்றத்துடன் காணப்படுகிறது. இது புன்னத்தூர் ராஜாவுக்கு சொந்தமானது. இது மோசமாக பராமரிக்கப்பட்டு தற்போது பாகன்களுக்கான (மாவுத்தன்/பாப்பன்) பயிற்சிப் பள்ளியைக் கொண்டுள்ளது

கான்கிரீட் கற்களில் யானைகள் சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளன

இந்த வளாகத்தில் சிவன் மற்றும் பகவதிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோயிலும் உள்ளது. புகழ்பெற்ற மலையாள திரைப்படமான " ஒரு வடக்கன் வீரகாத " ( மம்மூட்டி நடித்தது) என்றப் படத்தின் சில காட்சிகள் இந்த இடத்தில் படமாக்கப்பட்டன. இதை பார்வையிடும் நேரம் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை. நுழைவுக் கட்டணம் வயது வந்தோருக்கு ரூ .10 மட்டும் பெறப்படுகிறது. வளாகத்திற்குள் புகைப்பட கருவியைப் பயன்படுத்த கூடுதலாக ரூ .25 வசூலிக்கப்படுகிறது. தற்போது புகைப்பட கருவி பயன்பாடு புன்னத்துர் கோட்டையில் அனுமதிக்கப்படுவதில்லை.

புன்னத்தூர்கோட்டையில் யானை முகாம்[தொகு]

குருவாயூர் கோயிலிலிருந்து 3 கி.மீ தூரத்தில் புன்னத்தூர் கோட்டையில் யானை முகாம் அமைந்துள்ளது. இந்த யானை முகாமில் 11.5 ஏக்கர் நிலத்தில் 58 யானைகள் உள்ளன. மேலும் அதிக எண்ணிக்கையிலான சிறைமீட்கப்பட்ட யானைகளும் உள்ளன. [3] ஆனால் யானைகளின் நலன் குறித்து நியமிக்கப்பட்ட ஆய்வில் இந்த நடைமுறை இந்திய விலங்குகள் நல வாரியத்தால் விமர்சிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் யானைகளுக்கு சிகிச்சையளிப்பதில் பல வெளிப்படையான சிக்கல்கள் இருப்பதையும், அவற்றில் பல நடைமுறைப்படுத்தப்படாத தீர்வு நடவடிக்கைகளையும் பரிந்துரைத்தன. [4]

யானைகளைப் பராமரித்தல்[தொகு]

இங்கு ஒவ்வொரு யானைக்கும் மலையாள மொழியில் பாப்பன் (പാപ്പാൻ ) என்று அழைக்கப்படும் மூன்று யானைப் பாகன்கள் உள்ளனர். யானையை சிறிய கற்கள் மற்றும் தேங்காய்களின் நார்கள் ஆகியவற்றைக் கொண்டு உடலைத் தேய்த்து குளிக்க வைப்பதும், பாகன்களின் மிக முக்கியமான கடமையாகும் மழைக்காலத்தில், யானைகள் ஆயுர்வேத புத்துணர்ச்சி சிகிச்சைகளுக்கு உட்படுகின்றன. இதில் மூலிகைகள் சாறுகள் கொண்ட தண்ணீர் போன்றவை அடங்கும். இது மலையாள மொழியில் "சுக சிகிச்சா" என்று அழைக்கப்படுகிறது.

Panoramic view of the kotta.
புன்னத்தூர் கோட்டா

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Indian Columbus. "Punnathur Kotta Elephant Sanctuary - Guruvayur, Kerala, India". பார்க்கப்பட்ட நாள் 19 July 2012.
  2. https://medium.com/@syngrafi/punnathurkotta-a-palace-for-pachyderms-in-kerala-5e72e4ed3c28
  3. Punnathurkotta
  4. Animal Welfare Board of India. "Report on the Welfare & Veterinary Status Captive Elephants (Elephas maximus) at Punnathur Kotta" (PDF). cupabangalore.org. Archived from the original (PDF) on 9 January 2018. பார்க்கப்பட்ட நாள் 9 January 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புன்னத்தூர்_கோட்டை&oldid=3044320" இலிருந்து மீள்விக்கப்பட்டது