வேம்பநாட்டு ஏரி

ஆள்கூறுகள்: 9°35′N 76°25′E / 9.583°N 76.417°E / 9.583; 76.417
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேம்பநாட்டு ஏரி
ஆள்கூறுகள்9°35′N 76°25′E / 9.583°N 76.417°E / 9.583; 76.417
முதன்மை வரத்துஅச்சன்கோவில் ஆறு, மணிமாலா ஆறு, மீனச்சில் ஆறு, மூவாற்றுப்புழை, பம்பை, பெரியாறு
முதன்மை வெளியேற்றம்பல வாய்க்கால்கள்
வடிநில நாடுகள்இந்தியா
அதிகபட்ச நீளம்96 கிமீ
அதிகபட்ச அகலம்14 கீமீ
மேற்பரப்பளவு1512 கி.மீ²
கடல்மட்டத்திலிருந்து உயரம்0 மீ
குடியேற்றங்கள்ஆலப்புழா, கொச்சி, செர்த்தலா

வேம்பநாட்டு ஏரி அல்லது வேம்பநாட்டுக் காயல் இந்தியாவிலேயே மிகவும் நீளமான ஏரியாகும்.[1] கேரளத்தின் மிகப்பெரிய ஏரியான இது இந்தியாவின் பெரும் ஏரிகளுள் ஒன்று.

இந்தக் காயலின் பரப்பளவு 1512 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். ஆழப்புழா, எர்ணாகுளம், கோட்டயம் மாவட்டங்கள் இவ் ஏரியின் எல்லைகளாக அமைந்துள்ளன. இந்த ஏரி அரபிக்கடலின் மட்டத்திலேயே இருக்கிறது. ஏரியையும் கடலையும் சிறு குறுகிய நிலப்பரப்பு பிரிக்கிறது. பெரியாறு, மீனச்சில், பம்பா முதலிய ஆறுகள் இந்த ஏரியில் கலக்கின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Ayub, Akber (ed), Kerala: Maps & More, 2006 edition 2007 reprint, p. 48, Stark World Publishing, Bangalore, ISBN 81-902505-2-3
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேம்பநாட்டு_ஏரி&oldid=3817487" இலிருந்து மீள்விக்கப்பட்டது