இடுக்கி அணை
| இடுக்கி அணை | |
பெரியாற்றின் குறுக்கே இடுக்கி அணை |
|
| உருவாக்கும் ஆறு | பெரியாறு |
|---|---|
| உருவாக்குவது | இடுக்கி நீர்த்தேக்கம் |
| அமைவிடம் | கேரளம், இந்தியா |
| பராமரிப்பு | கேரளஅரசு |
| உயரம் | 169.16 |
| கட்டத் தொடங்கியது | 30 ஏப்ரல் 1969 |
| திறப்பு நாள் | பெப்ரவரி 1973 |
| நீர்த்தேக்க தகவல் | |
| கொள்ளளவு | 2000 மி m3 |
| நீர்ப்பிடிப்பு பகுதி | 60 சகீ2 |
| புவியியல் தரவு | |
| அமைவிடம் | |
இடுக்கி அணை கேரள மாநிலத்தில் பாயும் பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணை. இது கேரளத்தில் உள்ள குறவன், குறத்தி மலைகளுக்கு இடையே கட்டப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே உயரமான வளைவு அணைகளுள் (arch dam) இது ஒன்று. இதன் உயரம் 167.68 மீட்டர்கள். 1975-ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் 4ஆம் நாள் முதல் இங்கு நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது [1].
ஓணம் திருவிழாக் காலங்களிலும் ஆங்கிலப் புத்தாண்டுக் காலங்களிலும் இந்த அணை பொதுமக்கள் பார்வைக்குத் திறந்து விடப்படுகிறது. படகு சவாரியும் உண்டு. குறத்தி மலையில் சிறிய குகை ஒன்றும் வெட்டப்பட்டுள்ளது. குறவன் மலையிலும் ஒரு குகை வெட்டப்பட்டுள்ளது. ஆனால் இது பயன்பாட்டில் இல்லை. குறவன் மலையின் மறுபுறம் செறுதோணி அணை உள்ளது. இவை இரண்டும் தடுப்பதால் உருவாகும் நீர்த்தேக்கம் இடுக்கி நீர்த்தேக்கம் எனப்படுகிறது.
புவியியல் [தொகு]
இடுக்கி மாவட்டத்தில் உள்ள இந்த அணையின் மின்னுற்பத்தி நிலையம் மூலமட்டம் என்னும் இடத்தில் உள்ளது. இது அணையில் இருந்து 43 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.