எம். வி. முத்தையா அரசினர் மகளிர் கலைக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம். வி. முத்தையா அரசு மகளிர் கலைக்கல்லூரி
குறிக்கோளுரைதூய்மை, ஒருமை, திறமை
வகைஅரசு மகளிர் கலைக்கல்லூரி
உருவாக்கம்1966
சார்புஅன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்
தலைவர்தமிழ்நாடு அரசு
முதல்வர்முனைவர்.தே.லட்சுமி
அமைவிடம், ,
இணையதளம்http://mvmwgacdgl.ac.in/

எம். வி. முத்தையா அரசு மகளிர் கலைக்கல்லூரி இந்தியாவின் தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் செயற்பட்டுவரும் மகளிருக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[1] இக்கல்லூரி 1966ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[2] அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது.[3] தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையின் (NAAC) அனுமதியுடன் மொத்தமாக 40 ஏக்கர் பரப்பளவைக் கொண்டு செயல்பட்டு வருகிறது.[4] முனைவர்.தே.லட்சுமி தற்போது இக்கல்லூரியின் முதல்வராக உள்ளார்.

வழங்கும் படிப்புகள்[தொகு]

இக்கல்லூரியில் பின்வரும் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

முதுகலை படிப்புகள்[தொகு]

முதுகலை தமிழ், முதுகலை ஆங்கிலம், முதுகலை வரலாறு, முதுகலை பொருளியல், முது வணிகவியல், முதுஅறிவியல் கணிதம், முதுஅறிவியல் இயற்பியல், முதுஅறிவியல் வேதியியல், முதுஅறிவியல் புவியியல், முதுஅறிவியல் விலங்கியல், முதுஅறிவியல் கணினி அறிவியல்.

இளநிலைப் படிப்புகள்[தொகு]

இளங்கலை தமிழ், இளங்கலை ஆங்கிலம், இளங்கலை பொருளியல், இளங்கலை வரலாறு, இளம் வணிகவியல், இளம் வணிக நிர்வாகவியல், இளம் அறிவியல் கணிதம், இளம் அறிவியல் இயற்பியல், இளம் அறிவியல் வேதியியல், இளம் அறிவியல் புவியியல், இளம் அறிவியல் விலங்கியல், இளம் அறிவியல் தாவரவியல், இளம் அறிவியல் கணினி அறிவியல்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. தினமலர் கல்விமலர்
  2. திண்டுக்கல் மாவட்ட கல்லூரிகள்
  3. "அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள்". Archived from the original on 2017-05-16. பார்க்கப்பட்ட நாள் 2017-04-07.
  4. 40 ஏக்கரில் செயல்பட்டுவரும் திண்டுக்கல் அரசு மகளிர் கலைக்கல்லூரி