இ. ம. வெ. கிருட்டிணமூர்த்தி
தோற்றம்
இ. ம. வெ. கிருட்டிணமூர்த்தி E. M. V. Krishnamurthy | |
---|---|
பிறப்பு | இடையாற்று மங்கலம் வெங்கடராம கிருட்டிணமூர்த்தி 18 சூன் 1934 அரியலூர், தமிழ்நாடு, இந்தியா |
இறப்பு | 26 அக்டோபர் 2012 கான்பரா, ஆத்திரேலியா | (அகவை 78)
தேசியம் | இந்திய மக்கள் |
துறை | கணினியியல் |
அறியப்படுவது | துரித வகுத்தல் படிமுறை கோட்பாட்டு கணினி அறிவியல் |
இடையாற்று மங்கலம் வெங்கடராம கிருட்டிணமூர்த்தி (E. M. V. Krishnamurthy)(18 சூன் 1934 - 26 அக்டோபர் 2012) இந்தியாவில் பிறந்த கணினி அறிவியலாளர் ஆவார். பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் கணினி அறிவியல் துறையில் பேராசிரியராக இருந்தார். இவர் முதுபெரும் பேராசிரியர் கணினி அறிவியல் ஆய்வகம், தகவல் அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி பள்ளி, கான்பெரா ஆத்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் பணியாற்றியுள்ளார்.
கிருட்டிணமூர்த்தி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான மதிப்புமிக்க சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதினைப் 1978ஆம் ஆண்டு பெற்றார்.[1] இவர் இந்தியா, ஆத்திரேலியா, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பிற நாடுகளின் பல நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "MATHEMATICAL SCIENCES". Council of Scientific and Industrial Research. Archived from the original on 10 February 2012. Retrieved 22 September 2011.