சி. எஸ். சேஷாத்திரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி. எஸ். சேஷாத்திரி
2010இல் ஐ.ஐ.எஸ்.சி., பெங்களூரில் சேஷாத்திரி .
பிறப்புகாஞ்சீவரம் ஸ்ரீரங்காச்சாரி சேஷாத்திரி
பெப்ரவரி 29, 1932 (1932-02-29) (அகவை 92)
குடியுரிமைஇந்தியா
தேசியம்இந்தியன்
துறைகணிதம்
பணியிடங்கள்சென்னை கணிதவியல் கழகம்
ஆய்வு நெறியாளர்குமாரவேலு சந்திரசேகரன்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
விக்ரமன் பாலாஜி, வெ. இலட்சுமிபாய்
அறியப்படுவதுசேஷாத்திரி கான்ஸ்டண்ட்
நரசிம்மன்-சேஷாத்திரி தேற்றம்,
ஸ்டாண்டர்ட் மோனோமியல் தியரி
விருதுகள்சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது, பத்ம பூசண், ராயல் சமூகத்தின் உறுப்பினர்

சி. எஸ். சேஷாத்ரி (எப்.ஆர்.எஸ்) (C. S. Seshadri), பெப்ரவரி 29, 1932இல் பிறந்த[1]) ஒரு இந்திய கணிதவியலாளர் ஆவார். இவர் சென்னை கணிதவியல் கழகத்தின் நிறுவனர் மற்றும் ஓய்வு பெற்ற இயக்குனர் ஆவார்.[2] மற்றும் இயற்கணித வடிவவியலில் இவரது பணிக்காக அறியப்படுகிறார். மேலும், இவரது பங்களிப்பு, சேஷாத்ரி கான்ஸ்டண்ட் என அழைக்கப்படுகிறது.

இவர் 2009 ஆம் ஆண்டில் நாட்டின் மூன்றாவது உயர்ந்த குடிமகன் விருதான.[3] பத்ம பூஷணைப் பெற்றார்,[4]

பட்டங்கள் மற்றும் பதிவுகள்[தொகு]

அவர் 1953 இல் சென்னை பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் ரெசின் மற்றும் எஸ். நாராயணன் போன்றோரின் வழிகாட்டுதலில் பி.ஏ. (ஹானர்ஸ்) பட்டம் பெற்றார்.[5] அவர் தனது முனைவர் பட்டத்தை 1958 ஆம் ஆண்டு பாம்பே பல்கலைக்கழகத்தில் கே. சந்திரசேகரனின் மேற்பார்வையில் பெற்றார்.[6] 1971 ஆம் ஆண்டில் இந்திய அகாதமி ஆஃப் சயின்ஸின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7]

1953 முதல் 1984 வரை மும்பையில் உள்ள டாட்டா அடிப்படை ஆராய்ச்சிக் கழகத்தின் (டி.ஐ.எப்.ஆர்) கணித பாடத்திட்டத்தில் சேஷாத்ரி ஒரு ஆராய்ச்சி பேராசிரியராக தொடங்கி ஒரு மூத்த பேராசிரியராக உயர்ந்தார். 1984 முதல் 1989 வரை, சென்னை நகரில் உள்ள கணித அறிவியல் கழகத்தில் (ஐ.எம்.எஸ்.சி.) பணியாற்றினார். 1989 முதல் 2010 வரை, சென்னை கணிதவியல் கழகத்தின் நிறுவன இயக்குனராக பணியாற்றினார். டிசம்பர் 2010 இல் சென்னை கணிதவியல் நிறுவனத்தின் இயக்குனர் பதவியிலிருந்து அவர் விலகினார். 2011 ஜனவரி 1 முதல் சென்னை கணிதவியல் கழகத்தின் ஓய்வு பெற்ற இயக்குனராக இருக்கிறார்.

ஆராய்ச்சி வேலை[தொகு]

சேஷாத்ரியின் முக்கிய வேலை இயற்கணித வடிவியல் ஆகும் . அவர் எம்.எஸ். நரசிம்மனுடன் சேர்ந்து கண்டுபிடித்த ஒற்றை திசையன் அம்சங்கள் மற்றும் நரசிம்மன்-சேஷாத்ரி தேற்றம் இயற்கணித வடிவியல் துறையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது படைப்புக்களான ஜியோமெட்ரிக் பன்மையாக்கல் தியரி மற்றும் ஸ்க்யுபர்ட் வகைகள் குறித்த அவரது பணி, குறிப்பாக அவரது நிலையான ஒற்றை கோட்பாட்டின் அறிமுகம், பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சேஷாத்ரி பங்களிப்புகளில்,இந்தியாவில் கணிதம் குறித்த ஆய்வுக்காக சென்னை கணிதவியல் கழகத்தை, உருவாக்கியது மிக முக்கியமாக கருதப்படுகிறது.

குறிப்புகள்[தொகு]

  1. C S Seshadri — A Glimpse of His Mathematical Personality. http://www.asiapacific-mathnews.com/02/0204/0017_0021.pdf. 
  2. "C.S. Seshadri's official profile an Chennai Mathematical Institute".
  3. "Prof. C S Seshadri to be conferred prestigious Rathindra Puraskar from Visva Bharrati". BUSINESSWIRE INDIA. 24 November 2008. http://www.financialexpress.com/news/prof.-c-s-seshadri-to-be-conferred-prestigious-rathindra-puraskar-from-visva-bharrati/389880/. 
  4. "பத்மா புஷான், 2009". Archived from the original on 2009-02-05. பார்க்கப்பட்ட நாள் 2019-03-21. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  5. RAMANI, HEMA IYER. "‘Constant’ Mathematician". The Hindu. http://www.thehindu.com/features/magazine/constant-mathematician/article5764243.ece. 
  6. கணித மரபியல் திட்டத்தில் C. S. Seshadri
  7. Information of the Indian Academy of Sciences "Fellow Profile of Prof. C.S. Seshadri".
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._எஸ்._சேஷாத்திரி&oldid=3723888" இலிருந்து மீள்விக்கப்பட்டது