புதூர் (செங்கோட்டை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புதூர் பேரூராட்சி
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தென்காசி
வட்டம் செங்கோட்டை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

12,457 (2011)

375/km2 (971/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 33.21 சதுர கிலோமீட்டர்கள் (12.82 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/s-pudur

புதூர் (செ) பேரூராட்சி (ஆங்கிலம்:Pudur (S)), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். பூலாங்குடியிருப்பு, லாலாக்குடியிருப்பு, இரவியதர்மபுரம், கீழப்புதூர், மேலப்புதூர், கண்ணுபுளிமெட்டு, கேசவபுரம் ஆகியவை இணைந்ததே புதூர் (செங்கோட்டை) பேரூராட்சி ஆகும்

அமைவிடம்[தொகு]

புதூர் (செ) பேரூராட்சி புகழ்பெற்ற சுற்றுலா தலமான குற்றாலத்திலிருந்து 8 கி.மீ தொலைவில், கேரளா செல்லும் சாலையில், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம், 5 கிமீ தொலைவில் உள்ள செங்கோட்டையில் உள்ளது இதனருகே அமைந்த ஊர்கள் குற்றாலம், செங்கோட்டை, தென்காசி ஆரியங்காவு ஆகும்.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

33.21 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 42 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி தென்காசி (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மககளவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3322 வீடுகளும், 12457 மக்கள்தொகையும் கொண்டது.[4][5][6]

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "செ. புதூர் பேரூராட்சியின் இணையதளம்". Archived from the original on 2019-03-25. பார்க்கப்பட்ட நாள் 2019-03-19.
  4. செ. புதூர் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்[தொடர்பிழந்த இணைப்பு]
  5. Pudur (S) Population Census 2011
  6. Pudur (S) Town Panchayat
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதூர்_(செங்கோட்டை)&oldid=3647473" இலிருந்து மீள்விக்கப்பட்டது