நீர்ப்பாசனம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீர்ப்பாசனம் என்பது விவசாயத்திற்கு மழை நீர் தவிர பிற நீர்நிலைகள், ஆற்றுநீர், நிலத்தடி நீர் போன்றவற்றைப் பயன்படுத்துவதாகும். வேளாண்மையில் பயிர்களின் செழிப்பான வளர்ச்சிக்கு அத்தியாவசியமாகத் தேவையானவை சூரிய ஒளியும், நீரும் ஆகும். இயற்கையால் மழைமூலம் கிடைக்கும் நீரின் அளவை, பயிருக்கான தேவைகள் மிஞ்சும் போது மனிதர்களால் செயற்கையாக நீரின் தேவை பூர்த்தி செய்யப்படவேண்டி உள்ளது. இதுவே நீர்ப்பாசனம் ஆகும். நீர்ப்பாசனம் என்பது பயிர்களின் தன்மைகளைப் பொறுத்து பல்வேறு முறைகளில் மேற்கொள்ளப்படுகிறது. அவை:
- வெள்ள நீர்ப் பாசனம் (Flood Irrigation)
- அடுக்குநீர்அலைபாசனம்(Surge irrigation)
- சொட்டு நீர்ப் பாசனம் (Drip Irrigation)
- தெளிப்பு நீர்ப் பாசனம் (Sprinkler Irrigation)
இவை ஒவ்வொன்றும் அவற்றுக்கே உரிய நிறை குறைகளைக் கொண்டுள்ளன.
கி. மு. ஆறாவது ஆயிரவாண்டில் மொசப்பத்தேமியா, எகிப்து ஆகிய பகுதிகளில் நீர்ப்பாசனம் செய்யப்பட்டமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.