சொர்ணவாரி (நெல் பருவம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இளவேனிற்காலமான சொர்ணவாரிப் பருவம் (Sonavari Season) வேளாண் வழக்கு சொர்ணவாரிப் பட்டம் என்பது; தென்னிந்திய மாநிலங்களான தமிழ் நாடு மற்றும் பாண்டிச்சேரி விவசாய நிலங்களில், நெல் விதைப்பு, அல்லது நடவு தொடங்கும் காலத்தையும், மற்றும் சாகுபடி கால அளவையும் குறிக்கும் நெல் பருவமாகும். ஏப்ரல் - மே (தமிழ்: சித்திரை - வைகாசி) மாதங்களில் துவங்கும் இப்பருவம், சூலை - ஆகத்து (தமிழ்: ஆடி - ஆவணி) மாதங்களில் முடிவடைகிறது.[1]

120 நாட்களைக் கொண்ட இந்த சொர்ணவாரிப் பருவம், குறுகியகால நெல் வகைகளை சாகுபடி செய்ய ஏற்ற பருவமாகும்.

பருவ அட்டவணை[தொகு]

விதைக்கும் மாதம் கால அளவு (நாட்கள்) தகுந்த இரகங்கள் பயிரிடும் இடங்கள்
அக்டோபர் - நவம்பர் 120 குறுகியகாலம் திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கூடலூர், விழுப்புரம், நாமக்கல், தருமபுரி, மாவட்டங்கள்.[2]
  • சொர்ணவாரி பருவத்தில் தமிழகத்தின் மாவட்ட வாரியாக பயிரிடப்படும் நெல் இரகங்கள்.[3]
மாவட்டங்கள் விதைப்பு மாதம் இரகங்கள்
காஞ்சிபுரம், திருவள்ளூர் ஏப்ரல் - மே எம் டி யு - 5, ஏ டீ டி ஆர் எச் - 1, ஏ எஸ் டி - 1, ஏ எஸ் டி - 16, ஏ எஸ் டி - 18, ஏ எஸ் டி - 20, ஏ டி டீ - 36, ஏ டி டீ - 37, ஏ டி டீ 42, ஏ டி டீ - 43, ஏ டி டீ (ஆர்) - 45, ஏ டி டீ (ஆர்) - 47, ஐ ஆர் - 36, ஐ ஆர் - 50, ஐ ஆர் 64, கோ - 47, டி கே எம் - 9, மற்றும் டி ஆர் ஒய் (ஆர்)2*,
வேலூர், திருவண்ணாமலை ஏப்ரல் - மே எம் டி யு - 5, ஏ எஸ் டி - 16, ஏ எஸ் டி - 17, ஏ எஸ் டி - 18, ஏ எஸ் டி - 20, ஏ டீ டி ஆர் எச் - 1, ஏ டி டீ - 36, ஏ டி டீ - 37, ஏ டி டீ 42, ஏ டி டீ 43, ஏ டி டீ (ஆர்) - 45, ஏ டி டீ (ஆர்) - 47, ஐ ஆர் - 50, ஐ ஆர் 64, கோ - 47, மற்றும் டி கே எம் - 9
கடலூர், விழுப்புரம் ஏப்ரல் - மே எம் டி யு - 5, ஏ எஸ் டி - 16, ஏ எஸ் டி - 18, ஏ எஸ் டி - 20, ஏ டீ டி ஆர் எச் - 1, ஏ டி டீ - 36, ஏ டி டீ 42, ஏ டி டீ - 43, ஏ டி டீ (ஆர்) - 45, ஏ டி டீ (ஆர்) - 47 ஐ ஆர் - 50, ஐ ஆர் 64, கோ - 47, டி கே எம் - 9, மற்றும் டி ஆர் ஒய் (ஆர்) - 2*

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சொர்ணவாரி_(நெல்_பருவம்)&oldid=2775289" இலிருந்து மீள்விக்கப்பட்டது