தென்னிந்தியா
| தென்னிந்தியா | |
|---|---|
செந்நிறத்தில் காட்டப்பட்டுள்ள தென்னிந்தியா |
|
| சனத்தொகை | 252,770,595 |
| நிலப்பரப்பு | 6,35,780 கிமீ2 (2 ச மைல்) |
| சனத்தொகை அடர்த்தி | 362 /km2 (940 /sq mi) |
| மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும் | மாநிலங்கள்: ஆந்திரப் பிரதேசம் கருநாடகம் கேரளம் தமிழ் நாடு Territories: இலட்சத் தீவுகள் பாண்டிச்சேரி |
| தலைநகரங்கள் (2011) | தலைந்கரங்கள்: ஐதராபாத்து பெங்களூரு திருவனந்தபுரம் சென்னை Of ஆட்சிப் பகுதிகள்: கவாரெட்டி பாண்டிச்சேரி |
| முதல் பத்து சனத்தொகை மிகுந்த நகரங்கள் (2011) | 1. பெங்களூரு 2. ஐதராபாத்து 3. சென்னை 4. விசாகப்பட்டினம் 5. கோயம்புத்தூர் 6. விஜயவாடா 7. மதுரை 8. ஹுபிலி 9. மைசூர் 10.திருச்சி |
| அலுவல் மொழிகள் | ஆந்திரப் பிரதேசம்: தெலுங்கு (அலுவல்) உருது (துணை அலுவல்) கருநாடகம்: கன்னடம் கேரளா: மலையாளம் (அலுவல்) ஆங்கிலம் (துணை அலுவல்) தமிழ் நாடு: தமிழ் இலட்சத்தீவுகள்: மலையாளம் (அலுவல்) ஆங்கிலம் (துணை அலுவல்) மாலத்தீவியம் (துணை அலுவல்) பாண்டிச்சேரி: தமிழ் (அலுவல்) பிரெஞ்சு (அலுவல்) மலையாளம் (துணை அலுவல்) தெலுங்கு (துணை அலுவல்) [1] |
| பிறப்பு வீதம் | 20.4 |
| இறப்பு வீதம் | 7.7 |
| குழந்தை இறப்பு வீதம் | 48.4 |
|
^ இலட்சத் தீவுகளும் பாண்டிச்சேரியும் இந்தியாவின் ஆட்சிப் பகுதிகள். |
|
தென்னிந்தியா என்பது இந்திய நாட்டின் தெற்குப் பகுதியைக் குறிக்கும். ஆட்சிப் பிரிவுகளின் அடிப்படையில் தற்போதைய இந்திய மாநிலங்களான, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் என்பவற்றை உள்ளடக்கிய (பிரதேசமாகும்) நிலப்பகுதியாகும். இது மக்களின் அடிப்படையில், திராவிட இன மக்களே இப் பகுதியில் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். அவர்கள் பேசும் மொழிகளும் ஒருங்கே திராவிட மொழிகள் என அழைக்கப்படுகின்றன.
இது ஒரு தீபகற்பமாக (மூன்று புறம் நீரால் சூழப்பட்ட, மூவலந்தீவாக) அமைந்துள்ளது. மேற்கே அரபிக் கடலும், கிழக்கே வங்காள விரிகுடாவும் எல்லையாக அமைந்துள்ளன. மேற்குக் கரை மலபார் கரை எனவும், மேற்குக் கரை கோரமண்டல் கரை எனவும் அழைக்கப்படுவதுண்டு. இத்தீபகற்பத்துக்குத் தெற்கே இலங்கைத் தீவு அமைந்துள்ளது.
வடக்கு எல்லையில் வட இந்திய மாநிலங்களான மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், ஒரிசா என்பன உள்ளன.