காஜி நஸ்ருல் இஸ்லாம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| காஜி நஸ்ருல் இஸ்லாம் | |
1920ல் காஜி நஸ்ருல் இஸ்லாம் |
|
| முழுப் பெயர் | காஜி நஸ்ருல் இஸ்லாம் |
|---|---|
| பிறப்பு | 25 மே 1899 புர்துவான் மாவட்டம், மேற்கு வங்காளம் |
| இறப்பு | ஆகத்து 27 1976 (அகவை 77) டாக்கா, வங்காளதேசம் |
| காலம் | 20ம் நூற்றாண்டு மெய்யியல் |
| பகுதி | இந்திய மெய்யியல் |
| சிந்தனை மரபுகள் | ஹனாஃபி மற்றும் சுன்னி இசுலாம் |
| முக்கிய ஆர்வங்கள் | கவிதை, இசை, அரசியல், சமூகம் |
|
செல்வாக்குச் செலுத்தியோர்
|
|
|
செல்வாக்குக்கு உட்பட்டோர்
|
|
காஜி நஸ்ருல் இஸ்லாம் (பெங்காலி: কাজী নজরুল ইসলাম ஆங்கிலம்:Kazi Nozrul Islam) (பிறப்பு மே 25 1899; மறைவு ஆகஸ்ட் 27 1976) வங்காளக் கவிஞர் ஆவார். சிறந்த இசைஞானத்துடன் இவர் இயற்றியுள்ள கவிதைகள் புரட்சிகரமானவையாகும். பாசிசத்திற்கு எதிராகவும், சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் இவர் தனது கவிதைகளைப் பேராயுதமாகப் பயன்படுத்தினார். தனது கவிதைகளின் வீச்சாலும், தேசிய விடுதலைப் போராட்டத்தில் அளித்த பங்களிப்புக்காகவும் இன்று வரை வங்காளத்தின் புரட்சிக்கவியாக அறியப்படுகிறார் நஸ்ருல் இஸ்லாம்.