ஒட்ட நாடகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒட்ட நாடகம் என்பது,[1] ஒட்டர் என்ற சாதியினரால் நிகழ்த்தப்படும் கலை என்பதால், ஒட்ட நாடகம் எனப்படுகிறது. இக்கலை, ஒட்டக்கூத்து எனவும் அழைக்கப்படுகிறது . இக்கூத்தானது, சேலம் , ஈரோடு , தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் மாரியம்மன் கோவில் விழாக்களில் நிகழ்த்தப்படுகிறது.

இவ்விழாக்கள் பெரும்பாலும் பங்குனி,சித்திரை மாதங்களில் நிகழ்வதால், இக்கலையும், இந்த மாதங்களிலேயே நிகழ்த்தப்படுகிறது . ஒட்ட நாடகத்தின் எல்லாப் பகுதிகளும், இசைப்பாட்டுகளாலேயே நிகழ்கிறது. கூத்தாக மட்டுமே நடிக்கப்பட்டு வந்த இந்நாடகமானது, இன்றைய நிலையில் சித்திரவல்லி நாடகம் என்ற பெயரில் நாடகமாக நிகழ்கிறது.நகர்ப்புறத் தாக்கம் இல்லாத இடங்களில் கூத்தாகவும், நகரங்களில் நாடகமாகவும் இன்றும் நடத்தப்பட்டு வருகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழ்நாட்டு நாட்டுப்புறக் கலைகள்". Archived from the original on 2012-01-11. பார்க்கப்பட்ட நாள் 2012-07-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒட்ட_நாடகம்&oldid=3546872" இலிருந்து மீள்விக்கப்பட்டது