இந்தூர் முகமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தூர் முகமை (Indore), குடிமைப்பட்ட கால இந்தியாவை ஆண்ட பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் கீழிருந்த மத்திய இந்தியாவின் சுதேச சமஸ்தானங்களை கண்காணிக்கவும், ஆண்டுதோறும் திறை வசூலிக்கவும் இம்முகமை 1818-ஆம் ஆண்டு முதல் 1947-ஆம் ஆண்டு முடிய செயல்பட்டது.[1][2]இதன் தலைமையிடம் இந்தூர் நகரம் ஆகும்.

வரலாறு[தொகு]

மராத்தியப் பேரரசிற்கு எதிராக பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் ஆட்சியாளரகள் நடத்திய மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போரில் மராத்திய பேரரசு வெற்றி வாய்ப்பை இழந்தது. எனவே மராத்தியப் பேரரசில் இருந்த சிற்றரசுகள் அனைத்தும், 1818-ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்றக்கொண்டு, ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர்.

இந்தூர் பகுதி சுதேச சமஸ்தானங்களை நிர்வகிக்க இந்தூர் முகமை 1818-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. மத்திய மாகாணத்தின் தலைமை ஆணையாளரின் கீழ் இந்தூர் முகமை செயல்பட்டது. இந்தூர் முகமையின் கீழிருந்த சுதேச சமஸ்தான மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர். 1854-ஆம் ஆண்டு முதல் இந்தூர் முகமை, மத்திய இந்திய முகமையின் கீழ் செயல்பட்டது.

1947 இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்தூர் முகமையில் இருந்த சுதேச சமஸ்தானங்கள், 1948-ஆம் ஆண்டில் புதிய மத்திய பாரதம் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. பின்னர் 1 நவம்பர் 1956 அன்று மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின்படி, மத்தியப் பிரதேசம் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.

இந்தூர் முகமையின் கீழ் சுதேச சமஸ்தானங்கள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தூர்_முகமை&oldid=3388356" இலிருந்து மீள்விக்கப்பட்டது