விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஏப்ரல் 21
Jump to navigation
Jump to search
- 1506 – மூன்று நாள் லிஸ்பன் படுகொலைகள் முடிவுக்கு வந்தது. 1,900 யூதர்கள் போர்த்துக்கீசக் கத்தோலிக்கர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1526 – பானிப்பட் முதலாவது போர்: தில்லியின் கடைசி லௌதி சுல்தான் இப்ராகிம் லோடிக்கும் (படம்) தைமூர் வம்சத்தைச் சேர்ந்த பாபருக்கும் இடையில் நடந்த போரில் இப்ராகிம் கொல்லப்பட்டார். பாபர் இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவினார்.
- 1782 – இரத்தினகோசின் நகரம் (இன்றைய பேங்காக்) முதலாம் இராமா மன்னரால் அமைக்கப்பட்டது.
- 1964 – டிரான்சிட்-5பிஎன் என்ற செயற்கைக்கோள் சுற்றுவட்டத்தில் இணைய முடியாமல் வளி மண்டலத்தினுள் மீளத் திரும்பியது. 0.95கிகி கதிரியக்க புளுட்டோனியம் பரவலாக சிதறியது.
- 1987 – இலங்கையின் தலைநகர் கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 106 பேர் கொல்லப்பட்டனர்.
- 2019 – இலங்கை உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்புகள்: கொழும்பு உட்படப் பல இடங்களில் உயிர்ப்பு ஞாயிறு நாளன்று மூன்று கிறித்தவத் தேவாலயங்கள், நான்கு உணவகங்களில் இசுலாமிய அரசு ஆதரவில் தேசிய தவ்கீத் ஜமாத் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களில் 268 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
வி. கிருஷ்ணமூர்த்தி (பி. 1925) · பாரதிதாசன் (இ. 1964) · டி. ஆர். மகாலிங்கம் (இ. 1978)
அண்மைய நாட்கள்: ஏப்ரல் 20 – ஏப்ரல் 22 – ஏப்ரல் 23