பிதான் சந்திர ராய்
பிதான் சந்திர ராய் | |
---|---|
2வது மேற்கு வங்காள முதலமைச்சர் | |
பதவியில் 14 சனவரி 1948 – 1 சூலை 1962 | |
முன்னையவர் | பிரபுல்ல சந்திரா கோஷ் |
பின்னவர் | பிரபுல்ல சந்திரா கோஷ் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பங்கிப்பூர், பட்னா, பீகார் | 1 சூலை 1882
இறப்பு | 1 சூலை 1962 கொல்கத்தா, மேற்கு வங்காளம் | (அகவை 80)
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | திருமணமாகாதவர் |
வாழிடம் | கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா |
முன்னாள் கல்லூரி | பிரசிடென்சி கல்லூரி, கொல்கத்தா பட்னா கல்லூரி மருத்துவர்களின் அரசக் கல்லூரி அங்கத்தினர் (M.R.C.P.) அறுவை மருத்துவ அரசக்கல்லூரியின் சீர் உறுப்பினர் (F.R.C.S.) |
தொழில் | மருத்துவர் விடுதலை போராளி அரசியல்வாதி |
சமயம் | பிரம்மோ சமாஜ் |
மரு. பிதான் சந்திர ராய் (Bidhan Chandra Roy, வங்காள மொழி: বিধান চন্দ্র রায়; 1 சூலை 1882–1 சூலை 1962) எனப்படும் பி. சி. ராய் இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் இரண்டாவது முதலமைச்சராக பணியாற்றியவர். 1948 முதல் 1962ஆம் ஆண்டில் தமது இறப்பு வரை 14 ஆண்டுகள் காங்கிரசு முதலமைச்சராக தொடர்ந்து இப்பதவியில் இருந்தார். சிறந்த மருத்துவராகவும் விடுதலை இயக்க போராளியாகவும் மிகவும் புகழ் பெற்றிருந்தார். மேற்கு வங்காளத்தின் வளர்ச்சிக்கு அடிகோலிய ராய் முதன்மை நகரங்களாக விளங்கும் துர்காபூர், கல்யாணி மற்றும் கொல்கத்தாவின் புறநகர் உருவாக காரணமாக இருந்தார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் படித்த ராய் ஒரே நேரத்தில் மருந்தியல் மற்றும் அறுவை மருத்துவத்திற்கான எம்.ஆர்.சி.பி மற்றும் எப்.ஆர்.சி.எசு. படிப்புகளை இரண்டாண்டுகள் மூன்று மாதங்களிலேயே படித்து முடித்தது ஒரு சாதனையாகும். இந்தியாவில் இவரது பிறந்த (மற்றும் இறந்த) நாளான சூலை 1 தேசிய மருத்துவர் நாள் எனக் கொண்டாடப்படுகிறது.