கௌரி பார்வதி பாயி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உத்திரட்டாதி திருநாள் கௌரி பார்வதி பாயி
திருவிதாங்கூரின் மகாராணி
ஆட்சி1815–1829
முன்னிருந்தவர்கௌரி லட்சுமி பாய்
பின்வந்தவர்சுவாதித் திருநாள் ராம வர்மா
மனைவிராகவா வர்மா கோவில் தம்புரான்
வாரிசு(கள்)இல்லை
முழுப்பெயர்
'ஸ்ரீ பத்மநாப சேவினி வஞ்சி தர்ம வர்திணி ராஜ ராஜேஸ்வரி மகாராணி உத்திரட்டாதி திருநாள் கௌரி பார்வதி பாயி, அட்டிங்கல் இளைய தம்புரான், திருவிதாங்கூர் பிரதேச மகாராணி.
மரபுவேனாடு சொரூபம்
அரச குலம்குலசேகரா
சமயம்இந்து சமயம்
திருவிதாங்கூர்
கேரள வரலாறு
[1][2]
திருவிதாங்கூர் அரசர்கள்
வீரமார்த்தாண்டவர்மா 731-
அஞ்ஞாத நாமா -802
உதய மார்த்தாண்ட வர்மா 802-830
வீரராமமார்த்தாண்டவர்மா 1335-1375-
இரவிவர்மா 1375-1382
கேரள வர்மா 1382-1382
சேர உதய மார்த்தாண்ட வர்மா 1382-1444
வேணாடு மூத்தராஜா 1444-1458
இரண்டாம் வீரமார்த்தாண்டவர்மா 1458-1471
ஆதித்ய வர்மா 1471-1478
இரவி வர்மா 1478-1503
ஸ்ரீ மார்த்தாண்டவர்மா 1503-1504
ஸ்ரீ வீர இரவிவர்மா 1504-1528
முதலாம் மார்த்தாண்டவர்மா 1528-1537
இரண்டாம் உதய மார்த்தாண்ட வர்மா 1537-1560
கேரள வர்மா 1560-1563
ஆதித்ய வர்மா 1563-1567
உதய மார்த்தாண்ட வர்மா 1567-1594
ஸ்ரீ வீர இரவி வர்மா குலசேகர பெருமாள் 1594-1604
ஸ்ரீ வீர வர்மா 1604-1606
இரவி வர்மா 1606-1619
உண்ணி கேரள வர்மா 1619-1625
இரவி வர்மா 1625-1631
உண்ணி கேரள வர்மா 1631-1661
ஆதித்ய வர்மா 1661-1677
உமயமா ராணி 1677-1684
இரவி வர்மா 1684-1718
உண்ணி கேரள வர்மா 1719-1724
ராம வர்மா 1724-1729
மார்த்தாண்டவர்மா 1729-1758
தர்மாராஜா 1758-1798
அவிட்டம் திருநாள் 1798-1799
கௌரி லட்சுமி பாயி 1811-1815
கௌரி பார்வதி பாயி 1815-1829
சுவாதி திருநாள் 1829-1846
உத்திரம் திருநாள் 1846-1860
ஆயில்யம் திருநாள் 1860-1880
விசாகம் திருநாள் 1880-1885
மூலம் திருநாள் 1885-1924
சேது லட்சுமி பாயி 1924-1931
சித்திரைத் திருநாள் 1931-1949

க்ஷ Regent Queens

தலைநகரங்கள்
பத்மநாபபுரம் 1721-1795
திருவனந்தபுரம் 1795-1949
அரண்மனைகள்
பத்மநாபபுரம் கோட்டை
கிளிமானூர் கொட்டாரம்
குதிரை மாளிகை கொட்டாரம்
கவடியார் கொட்டாரம்
edit

உத்திரட்டாதி திருநாள் கவுரி பார்வதி பாயி (Gowri Parvati Bayi) (1802-1853) தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தில் இருந்ததிருவிதாங்கூர் மாநிலத்தின் அரச பிரதிநிதியாக இருந்தார்.[3] அவரது சகோதரி மகாராணி கௌரி லட்சுமி பாய்க்குப் பின் வந்த தனது ஆட்சியை அவரது மருமகனும் மகாராஜாவுமான சுவாதித் திருநாள் ராம வர்மா சார்பாக 14 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.[4]

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

மகாராணி கெளரி பார்வதி பாயி திருவிதாங்கூர் அரச குடும்பத்தின் ஆற்றிங்கல்லின் மூத்த ராணியான பரணித் திருநாள் என்பவருக்குப் பிறந்தார். 1815ஆம் ஆண்டில் இவரது மூத்த சகோதரி மகாராணி கௌரி லட்சுமி பாயி இறந்தபோது, இவருக்கு பதின்மூன்று வயதே நிரம்பியிருந்தது. குடும்பத்தில் ஒரே பெண்மணியாக, கெளரி பார்வதி பாயி தனது மருமகனும், ஆட்சியின் வாரிசுமான, மகாராஜா சுவாதித் திருநாள் ராம வர்மாவின் சார்பில் தனது மைத்துனர் சங்கனாச்சேரி குடும்பத்தைச் சேர்ந்த இராஜ ராஜ வர்மாவுடன் சேர்ந்து ஆட்சி செய்தார். இவருடைய கணவர், இராகவ வர்மன் கிளிமானூர் அரச குடும்பத்தை சேர்ந்தவராவார்.

அமைச்சரவை மாற்றங்கள்[தொகு]

மகாராணியின் முதல் நடவடிக்கையானது, புதிய திவான் என்கிற பிரதம மந்திரியை நியமிப்பதே ஆகும். ஏனென்றால் திவான் பத்மநாபன் இறந்துவிட்டார், அவருடைய துணைப் பொறுப்பாளரான பப்பு ராவ் மாநில விவகாரங்களை கவனித்து வந்தார். 1815 ஆம் ஆண்டில் பிராமணரான சங்கு அன்னாவி பிள்ளை என்பவர் திவானாக நியமிக்கப்பட்டார். ஆனால் அவரால் கடினமான நிர்வாகத்தை கையாள முடியாததால் இரண்டு மாதங்களுக்குள் அகற்றப்பட்டார். பின்னர் திருவிதாங்கூர் மாவட்ட நீதிபதி ராமன் மேனன், என்பவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இருப்பினும், திவான் ராமன் மேனனுக்கும் பிரிட்டிஷாருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் எழுந்தன. எனவே ராமன் மேனன் 1817 ஆம் ஆண்டில் ஒரு கீழமை அலுவலகத்திற்கு மாற்றப்பட்டார். மேலும் அவர் அப்பணியிலிருந்து முற்றிலும் ஓய்வு பெற விரும்பினார். 20ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற இந்திய இராஜதந்திரியும், வேங்கலில் குடும்பத்தின் மூதாதையுருமான கிருஷ்ண மேனனின் பெரிய தாத்தாவாக இருந்தவர் திவான் ராமன் மேனன். 1817 செப்டம்பரில் அவர் பிரிட்டிஷாருடன் நெருக்கமாக இருந்தபோது, ரெட்டி ராவ் என்ற துணைத் தூதர் திவானாக நியமிக்கப்பட்டார்.[5]

முக்கிய நடவடிக்கைகள்[தொகு]

மகாராணி கௌரி பார்வதி பாயி தனது மருமகனின் சார்பில் ஆட்சி செய்த போது தனது மாநிலத்தில் பல சீர்திருத்தங்களை நிறுவினார். முக்கிய சீர்திருத்தங்களில் ஒரு சில:

  • 1817 ஆம் ஆண்டில் ராணி கௌரி பார்வதி பாயி நவீன கல்வியை கற்பிக்க முன்னேற்பாடுகளை செய்தார்.
  • இந்து மத விழாக்களுடன் தொடர்புடைய கிறிஸ்தவ சபைகளை விடுவித்தார். அவர்கள் மதச் சடங்குகளுக்காக ஞாயிற்றுக்கிழமைகளில் வேலைக்கு வருவதிலிருந்தும் விடுவிக்கப்பட்டனர்.
  • தாழ்த்தப்பட்ட சாதியினர் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களை அணிவதிலிருந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டது. இதை அவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்று தங்களை அலங்கரித்து கொண்டனர். நாயர் போன்ற உயர் சாதியினர் தங்க ஆபரணங்களை பயன்படுத்துவதற்காக அதியார பணத்தை செலுத்திய பின்னர் பெற்றுக் கொள்வது அகற்றப்பட்டது.
  • மகாராணி தனது இராச்சியத்திலுள்ள அனைவரையும் தங்கள் வீடுகளின் மேல் ஓடுகள் வேய்வதற்கு அனுமதித்தார். கேரளாவின் சூழலில் இது ஒரு முக்கியமான அறிவிப்பாக இருந்தது. சாமோரின் போன்ற சக்திவாய்ந்த அரசர், மற்றும் கொச்சி இராச்சியத்தின் அரசர் போன்ற பேரரசர்கள கூட தங்கள் அரண்மனையில் இதை அனுமதிக்கவில்லை.
  • சில வகையான வீடுகளை பயன்படுத்துவதிலிருந்த அடிப்படை கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டன. அது வரை நாயர் என அழைக்கப்படுபவர்களே தங்கள் குடியிருப்புக்களை நாலுகெட்டு கொண்ட வீட்டினை கட்டிக்கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதற்கான வரிகள் முற்றிலும் அகற்றப்பட்டு, அனைத்து சமுதாயத்தினரும் இந்தவகை கட்டிடங்களின் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டனர். இதேபோல், யானைகளிலும், யானை, வண்டிகளிலும் பயணம் செய்ய உரிமை தரப்பட்டது.
  • காப்பி சாகுபடி முதல் முறையாக திருவிதாங்கூர் பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • அவரது சகோதரி மகாராணி கௌரி லட்சுமி பாயியின் ஆட்சி முடிவில் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டது. இது அவருக்கு ஒரு பெரிய சாதனையாகும்.
  • திருவிதாங்கூரில் கிருத்துவ திருச்சபையை மகாராணி அனுமதித்தார். மேலும் அவருடைய மாநிலத்தில் தேவாலயங்களை கட்டியெழுப்பவும் அனுமதிதார்.
  • வேலு தம்பி தளவாயின் கிளர்ச்சியைத் தொடர்ந்து, திருவிதாங்கூர் படையைச் சேர்ந்த ஏழு நூறு வீரர்கள் அரண்மனையைக் காப்பாற்ற ஏற்பாடு செய்யப்பட்டது

ஆட்சியின் முடிவு[தொகு]

1829 ஆம் ஆண்டு மகாராஜா சுவாதித் திருநாள் ராம வர்மா பதினாறு வயதை அடைந்தபோது அவரது அத்தையான, மகாராணி, ஆட்சியை கைவிட்டு, முழு அதிகாரத்துடன் அவருக்கு ஆட்சியதிகாரம் அளிக்க முடிவு செய்தார். அதன்படி, 1829-ஆம் ஆண்டில் மகாராஜா சுவாதி திருநாள் முடிசூட்டிக் கொண்டார்.

முழுப் பட்டம்[தொகு]

ஸ்ரீ பத்மநாப சேவினி வஞ்சி தர்ம வர்திணி ராஜ ராஜேஸ்வரி மகாராணி உத்திரட்டாதி திருநாள் கௌரி பார்வதி பாயி, ஆற்றிங்கல் இளைய தம்புரான், திருவாங்கூர் பிரதேச மகாராணி.

குடும்பம்[தொகு]

மகாராணி கௌரி பார்வதி பாயி மூன்று முறை திருமணம் செய்து கொண்டார். அவரது முதல் கணவர் கிளிமானூர் அரச குடும்பத்தின் ராகவா வர்மாவின் இறப்புக்குப் பிறகு மீண்டும் ஒரு திருமணம் நடைபெற்றது. 1824 ஆம் ஆண்டில் அவரும் மீண்டும் மரணமடைந்ததால் மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்த மூன்று திருமணங்களாலும் குழந்தைகள் இல்லை. கௌரி லட்சுமி பாயின் மரணத்திற்குப் பின் தனது மருமகனையும் மருமகளையும் தன் சொந்தக் குழந்தைகளாகவே பார்த்துக் கொண்டார். 1853-இல் மகாராணி இறந்தார்.

குறிப்புகள்[தொகு]

  1. histrory of travancore -p sankunni manon. tr. Dr. C. K karim. page 72
  2. Travancore Almanac & Directory 1919 Published by the Government of Travancore 1918
  3. http://www.swathithirunal.in/relatives/Gauri%20Parvathi%20Bayi.htm
  4. https://en.numista.com/catalogue/pieces49044.html
  5. Nagam Aiya, Pg 464
  • V. Nagam Aiya. Travancore State Manual, Volume I. 
  • History of Travancore by Shankunni Menon

இதனையும் காண்க[தொகு]

கௌரி பார்வதி பாயி
பிறப்பு: 1801 இறப்பு: 1853
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர்
கௌரி லட்சுமி பாய்
திருவிதாங்கூரின் மகாராணி
1814–1833
பின்னர்
சுவாதித் திருநாள் ராம வர்மா
"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌரி_பார்வதி_பாயி&oldid=3564563" இலிருந்து மீள்விக்கப்பட்டது