நாயர்
மொத்த மக்கள்தொகை | |
---|---|
(5,000,000) | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
கேரளா, கர்நாடகம், தமிழ்நாடு | |
மொழி(கள்) | |
தாய் மொழி: மலையாளம் | |
சமயங்கள் | |
இந்து சமயம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
சமபந்த சத்திரியர், பந்த், நம்பூதிரி |
நாயர் (மலையாளம்: നായര്) என்றழைக்கப்படுவோர் மலையாள மொழியை தாய்மொழியாகக் கொண்டோராவர். இவர்களில் பெரும்பாலானோர் கேரளத்தில் வசிப்பவர்கள். நாயர்கள் திராவிட இனத்தை சேர்ந்தவர்கள். நம்பூதிரிகளுடன் திருமண உறவு வைத்துக் கொள்பவர்கள். நாயர்கள் தாய்வழி (மருமக்கதாயம்) சமூகத்தினர் ஆவர்.
முந்தைய திருவிதாங்கூர் வரலாறு
திருவிதாங்கூர் அரசியாக கௌரி இலட்சுமிபாய் (1811-1815) முதல் அரசி பார்வதிபாய் (1815-1829) ஆட்சி செலுத்திய காலங்கள் வரை நம்பூதரி மட்டும் தங்க ஆபரணம் அணியலாம். , நாயர், ஈழவர்,வெள்ளாளர், போன்ற பிற சமூக மக்கள் தங்க ஆபரணம் அணிய தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஆங்கில கவர்னர் கர்னல் மன்றோவின் கருணையால் நாயர் சமூக மக்கள் தங்க ஆபரணங்கள் அணியலாம் என்று இசைவு தரப்பட்டது.