உள்ளடக்கத்துக்குச் செல்

இண்டன் ஆறு

ஆள்கூறுகள்: 28°24′50″N 77°29′46″E / 28.41389°N 77.49611°E / 28.41389; 77.49611
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இண்டன் ஆறு
காசியாபாத்தில் இருந்து இண்டன் ஆற்றின் வான் பார்வை
அமைவு
நாடுஇந்தியா
பகுதிஉத்தரப் பிரதேசம்
சிறப்புக்கூறுகள்
மூலம்இரஜாஜி தொடர், சிவாலிக் மலை
 ⁃ அமைவுசகாரன்பூர் மாவட்டம், உத்தரப் பிரதேசம்
 ⁃ ஆள்கூறுகள்35°05′N 77°08′E / 35.083°N 77.133°E / 35.083; 77.133
முகத்துவாரம்யமுனை ஆறு
 ⁃ அமைவு
செக்டார்-150, நொய்டா, இந்தியா
 ⁃ ஆள்கூறுகள்
28°24′50″N 77°29′46″E / 28.41389°N 77.49611°E / 28.41389; 77.49611
நீளம்400 km (250 mi)
வடிநில அளவு7,083 km2 (2,735 sq mi)

இண்டன் ஆறு (Hindon River) (ஹிண்டன் ஆறு என்றும் அழைக்கப்படுகிறது) என்பது உத்தரப்பிரதேசத்தின் சகாரன்பூர் மாவட்டத்தில் உள்ள ஷகும்பரி தேவி மலைத்தொடரில் (மேல் சிவாலிக்) உருவாகி நொய்டாவில் உள்ள யமுனை நதியில் சேரும் ஒரு இந்திய நதியாகும். யமுனை நதியின் துணை நதியான இண்டன், முற்றிலும் மழைநீரை ஆதாரமாகக் கொண்டுள்ளது, இதன் நீர்ப்பிடிப்புப் பகுதி தோராயமாக 7,083 சதுர கிலோமீட்டர் (2,735 சதுர மைல்) ஆகும்.

இது முசாபர்நகர் மாவட்டம், மீரட் மாவட்டம், பாக்பத் மாவட்டம், காசியாபாத் மாவட்டம் மற்றும் கௌதம் புத்த நகர் மாவட்டம் வழியாக 400 கிலோமீட்டர் (250 மைல்) ஓடி கங்கை மற்றும் யமுனை நதிகளுக்கு இடையில் பாய்கிறது, இது நொய்டா செக்டர்-150 இல் யமுனை ஆற்றில் கலக்கிறது. இந்திய விமானப்படை இண்டன் விமானப்படைத் தளமும் தில்லியின் புறநகரில் உள்ள காசியாபாத் மாவட்டத்தில் அதன் கரையில் அமைந்துள்ளது.[1]

துணை ஆறு[தொகு]

காளி ஆறு இண்டனின் துணை நதியாகும். காளி சிவாலிக் மலைகளின் ராஜாஜி மலைத்தொடரில் உருவாகி, சகாரன்பூர், முசாபர்நகர், மீரட் மற்றும் பாக்பத் மாவட்டங்கள் வழியாக சுமார் 150 கிலோமீட்டர் (93 மைல்) பயணம் செய்து, சர்தனாவுக்கு அருகிலுள்ள பித்த்லோகரில் இண்டன் நதியுடன் இணைகிறது. அதன்பிறகு நொய்டாவில் உள்ள யமுனை ஆற்றில் இண்டன் இணைகிறது. காளி நதியும் மிகவும் மாசுபட்டுள்ளது, மேலும் இது உத்தரபிரதேசத்தின் மக்கள் தொகை மற்றும் தொழில்துறை பகுதி வழியாகச் செல்வதால் இண்டனின் மாசுபாட்டை அதிகரிக்கிறது.

புராணங்களில்[தொகு]

சர்தானா அருகில் மகாபாரத காலத்தைச் சேர்ந்ததாக நம்பப்படும் பண்டைய மகாதேவ் கோயில் உள்ளது, மேலும் பாண்டவர்கள் இலட்சகிரிக்குச் செல்வதற்கு முன்பு பிரார்த்தனை செய்த இடமாகக் கருதப்படுகிறது. இந்த இடம் இண்டன் (முன்பு ஹர்ணண்டி) மற்றும் கிருஷ்ணா (வர்ணவரத்தில் உள்ள காளி நதி, தற்போதைய பர்னவா) ஆகிய ஆறுகள் சங்கமித்த இடமாகும். இளவரசர்கள் தங்கள் தாயார் குந்தியுடன் வசித்த இடமாகும். இதே இடத்தில் தான் துரியோதனாவால் அரக்கால் செய்யப்பட்ட மோசமான அரண்மனை அமைந்திருந்ததாகக் கூறப்படுகிறது.[2]

வரலாறு[தொகு]

சிந்து சமவெளி நாகரிகம் (கிமு 1) தளமான ஆலம்கீர்பூர், தில்லியில் இருந்து 28 கிலோமீட்டர் (17 மைல்) தொலைவில் இண்டன் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது.

காசியாபாத் நகரம் இந்தியக் கிளர்ச்சியின் போது சண்டையிடும் ஒரு களமாக இருந்தது, அப்போது பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் கீழ் இருந்த வங்காள இராணுவத்தில் இருந்த இந்திய வீரர்கள் கிளர்ச்சி செய்தனர. ஆனால், இது விரைவில் இந்தியாவில் பிரித்தானிய ஆட்சிக்கு எதிரான பரவலான கிளர்ச்சியாக மாறியது. 1857 ஆம் ஆண்டில் இந்திய துருப்புக்களுக்கும் பிரித்தானிய வீரர்களுக்கும் இடையே பத்லி-கி-செராய் போர் உட்பட பல மோதல்கள் நடந்த இடமாக இண்டன் நதி இருந்தது. பிரித்தானிய வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் கல்லறைகளை இன்றும் இங்கு காணலாம். வட இந்திய வரலாற்றில் காசியாபாத்தின் பங்கு பல்வேறு புரட்சிகளில் பங்கு வகித்த பல சுதந்திர போராட்ட வீரர்களின் பிறப்பால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, அவர்கள் அனைவரும் அங்கு வாழ்ந்த-இன்னும் வாழ்ந்து வரும் அனைவருக்கும் சுதந்திரத்தை அடைவதற்கு அர்ப்பணிக்கப்பட்டவர்கள்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இண்டன்_ஆறு&oldid=3963021" இலிருந்து மீள்விக்கப்பட்டது