மலாயா கூட்டமைப்பு
|
|||||||||||||||||||||||||||||||||||||||
மலாயா கூட்டமைப்பு (Federation of Malaya) என்பது 1948 சனவரி 31 முதல் 1963 செப்டம்பர் 16 வரையில் இருந்த 11 மாநிலங்களின் கூட்டமைப்பு ஆகும். ஒன்பது மலே மாநிலங்கள் மற்றும் பினாங்கு, மலாக்கா ஆகிய பிரித்தானிய குடியேற்றங்கள் உள்ளிட்ட 11 மாநிலங்களும் இணைந்த இக்கூட்டமைப்பு பின்னர் 1963 செப்டம்பர் 16 இல் மலேசியா என்ற பெயரில் ஒரே நாடாயின.
வரலாறு[தொகு]
1946 முதல் 1948 வரை 11 மாநிலங்களும் மலாய ஒன்றியம் என்ற பெயரில் பிரித்தானியக் குடியேற்ற நாடாயின. மலே தேசியவாதிகளின் எதிர்ப்பை அடுத்து இந்த ஒன்றியம் கலைக்கப்பட்டு மலேயக் கூட்டமைப்பு ஆனது. இக்கூட்டமைப்பு மலே ஆட்சியாளர்களின் அடையாளத்தை மீள உறுதிப்படுத்தியது.
இக்கூட்டமைப்புக்குள், மலே மாநிலங்கள் ஐக்கிய இராச்சியத்தின் காப்புநாடுகளாக (protectorate) இருந்தாலும், பினாங்கு, மற்றும் மலாக்கா ஆகியன தொடர்ந்து பிரித்தானியக் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்தன. சிங்கப்பூர் மலாயாவின் ஒரு பகுதியாகக் கருதப்பட்டாலும், மலேய ஒன்றியத்திலோ அல்லது மலேயக் கூட்டமைப்பிலோ சிங்கப்பூர் இணையவில்லை.
1957, ஆகத்து 31 இல் மலேயக் கூட்டமைப்பு பொதுநலவாயத்தின் கீழ் விடுதலை பெற்றது. 1963 இல், மலாயா கூட்டமைப்பு சிங்கப்பூர், சரவாக், பிரித்தானிய வடக்கு போர்ணியோ (இப்போதைய சாபா) ஆகியவற்றுடன் இணைந்து மலேசியா என்ற பெயரில் ஒரு நாடாயின. 1965 ஆகத்து 9 இல் சிங்கப்பூர் மலேசியாவில் இருந்து பிரிந்து தனிக் குடியரசாகியது.
கூட்டமைப்பின் உறுப்பு நாடுகள்[தொகு]
மக்கள்[தொகு]
| ஆண்டு | மலே | சீனர் | இந்தியர் | ஏனையோர் |
| 1948 | 2,457,014 | 1,928,965 | 536,646 | 64,802 |
| 1951 | 2,631,154 | 2,043,971 | 566,371 | 75,726 |
| மூலம்: Annual Report on the Federation of Malaya: 1951 in C.C. Chin and Karl Hack, Dialogues with Chin Peng pp. 380, 81. | ||||