சரவணப் பெருமாளையர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சரவணப்பெருமாளையர் 19 ஆம் நூற்றாண்டில் தொண்டை நாட்டில் திருத்தணிகையில் சங்கமகுலமென்னும் வீரசைவ மரபில் தோன்றி, வடமொழியிலும், தென்மொழியிலும் பெரும்புலமை பெற்றுப் பல நூல்களை இயற்றிச் சென்னை மாகாணக் கல்லூரியின் முதல் தமிழ் ஆசிரியராக இருந்தவர்.

பிறப்பு[தொகு]

கல்லாரகரி வீர சைவமடத்ததிபர் வழிவந்தவருமான கந்தப்பையர் அவர்களின் இளையகுமாரர் ஆவார். இவர் உடன்பிறந்தவர் விசாகப்பெருமாளையர் இவர்களிருவரும் கந்தப்பையருகதகு இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தவர்கள். வீரசைவ மரபிரனராதலால், விசாகன், சரவணன் என்னும் சைவப்பெயர்களைப் பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் தம் தந்தையாரிடத்திலே கல்வி பயின்றதோடு, இலக்கணக்கடல் இராமானுச கவிராயரிடம் இலக்கண, இலக்கியங்களைக் கற்றனர்.

பணிகள்[தொகு]

எடுத்துக்காட்டி விளக்குகின்றது. இவ்வுரையையும் விளக்கத்தையும் பலர் மேற்கொண்டனர். இவ்வுரையிலும் சில திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்று அறிஞர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர். முனைவர் உ. வே. சாமிநாத ஐயர். திருவள்ளுவமாலையில், 1330 அருங்குறளும் என்னும் செய்யுளில் (16) உள்ள ‘வீற்றிருக்கலாம்’ என்ற சொல்லிற்கு ‘ஒரு சபை நடுவிலே உயர்வாகிய ஆசனத்தில் ஏறியிருக்கலாம்’ என்று சரவணப் பெருமாளையர்’ எழுதிவிட்டார். கவலையற்றிருக்கலாம் என்பதே அதன் பொருள். சிந்தாமணி உரையிலும், திருமுருகாற்றுப்படையிலும் வீற்றிருத்தல் என்பதற்குக் கவலையற்றிருத்தல் என்று நச்சினார்க்கினியர் பொருள் கூறியிருக்கிறார்” என்று உரைக்கின்றார்கள்.
  • பிரபுலிங்க லீலை, நைடதம் இவற்றின் பிற்பகுதிக்கு உரைகண்ட கந்தப்பையர் இவர் மகன் என்பது குறிப்பிடத் தக்கது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரவணப்_பெருமாளையர்&oldid=2659763" இலிருந்து மீள்விக்கப்பட்டது