மார்தோனியசு (முதலாம் டோரியசின் மருமகன்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மார்தோனியசு (Mardonius, Mr̥duniyaʰ ; கிரேக்கம்: Μαρδόνιος Mardónios ; [1] கிமு 479 இல் இறந்தார்) என்பவர் கிமு 5 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கிரேக்கத்துடனான பாரசீகப் போர்களின் போது முன்னணி பாரசீக இராணுவத் தளபதியாக இருந்தார். இவர் பிளாட்டியா போரில் இறந்தார்.

ஆரம்ப ஆண்டுகள்[தொகு]

மார்தோனியசின் தந்தை கோப்ரியாஸ், டேரியசின் கல்லறையில். [2]

மார்தோனியசு அகாமனிசிய இளவரசர் டேரியஸ் அரியணையைக் கைப்பற்றியபோது அவருக்கு உதவிய பாரசீக பிரபுவான கோப்ரியாசின் மகன் ஆவார். புதிய மன்னருக்கும் அவரது நண்பருக்கும் இடையிலான கூட்டணி இராசதந்திர திருமணங்களால் உறுதிப்படுத்தப்பட்டது: டேரியஸ் கோப்ரியாசின் மகளை மணந்தார், மேலும் கோப்ரியாஸ் டேரியசின் சகோதரியை மணந்தார். மேலும், மார்தோனியஸ் டேரியசின் மகள் ஆர்டோசோஸ்ட்ராவை மணந்தார்.[3]

கிரேக்கர்களுடன் பாரசீகப் போர்கள்[தொகு]

கிரேக்கத்தின் மீதான முதல் பாரசீக படையெடுப்பு[தொகு]

டேரியஸ் தன் தளபதிகளில் ஒருவராக மார்தோனியசை நியமித்தார். ஐயோனியன் கிளர்ச்சிக்குப் பிறகு, கிமு 492 இல் ஐயோனியர்களுக்கு உதவியதற்காக கிரேக்க நகர அரசான ஏதென்சைத் தண்டிக்க இவரை அனுப்பினார். ஏதென்சுக்குச் செல்லும் வழியில், இவர் கிரேக்க சர்வாதிகாரிகளை அகற்றவும் சனநாயக அரசாங்கங்களை அமைக்கவும் ஐயோனியன் நகரங்களில் தனது இராணுவத்தைப் பயன்படுத்தினார். இது அந்த நேரத்தில் கிரேக்கர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது. பாரசீக இராணுவம் கடந்து சென்ற பிறகு ஐயோனியர்கள் மீண்டும் ஒரு முறை கிளர்ச்சி செய்யக்கூடாது என்பதற்காக இவர் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கலாம் என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். [4] இவரது கடற்படையும், இராணுவமும் தார்தனெல்சு நீரிணை வழியாக சென்றது. மார்தோனியஸ் முதலில் தங்கச் சுரங்கங்களைக் கொண்ட கிரேக்க தீவான தாசோசைத் தாக்கினார். இது பாரசீகப் பேரரசின் துணை ஆறுபோல மாறியது. கடற்படை மற்றும் இராணுவம் மாக்கெடோனியாவை வந்தடைந்தது இதைத் தொடர்ந்தது, இது விரைவில் பாரசீக சாம்ராஜ்யத்தின் அணியைச் சேர்ந்த இராச்சியமாக ஆனது. மேலும் அதன் நிர்வாக அமைப்பின் ஒரு பகுதியாகவும் மாறியது. [5] [6]

இருப்பினும், இந்த வெற்றிகளுக்குப் பிறகு, அதோஸ் மலைக்கு அருகே கடற்கரையில் ஒரு புயலில் மார்தோனியசின் கடற்படை அழிபட்டது. எரோடோடசின் கூற்றுப்படி, பாரசீகர்கள் அதில் 300 கப்பல்களையும் 20,000 ஆட்களையும் இழந்தனர். இந்த நேரத்தில், திரேசில் நடந்த போரில் மார்தோனியசு இராணுவத்திற்கு தலைமை தாங்கினார். மார்தோனியசு போரில் காயமடைந்தபோதும், அவர் வெற்றி பெற்றார், திரேசை மீண்டும் பாரசீகப் பேரரசிற்கு அடிபணியச் செய்தார். [7] ஆயினும்கூட, கடற்படை இழப்பால் இவர் சின்ன ஆசியாவுக்கு பின்வாங்க வேண்டியிருந்தது. [8] கிமு 490 இல் கிரேக்க படையெடுப்பிற்கு தலைமை தாங்க டாடிஸ் மற்றும் இளைய ஆர்டபெர்னெசை நியமித்த டேரியஸ் இவரை அதிலிருந்து விடுவித்தார். மேலும் அவர்கள் நக்சேசைக் கைப்பற்றி எரீத்திரியாவை அழிப்பதில் வெற்றி பெற்றாலும், பின்னர் அவர்கள் மராத்தான் போரில் தோற்கடிக்கப்பட்டனர்.

கிரேக்கத்தின் மீதான இரண்டாவது பாரசீக படையெடுப்பு[தொகு]

மார்தோனியசின் மைத்துனரும் டேரியசின் வாரிசான செர்கசின் கீழ் மார்தோனியஸ் மீண்டும் போருக்கு ஆதரவாக வந்தார். கிரேக்கத்துடன் மீண்டும் போர் புரிவதில் செர்க்செஸ் முதலில் ஆர்வம் காட்டவில்லை, ஆனால் செர்க்செஸ் மீது அதிக செல்வாக்கைக் கொண்டிருந்த மார்தோனியஸ், [9] டேரியசின் தோல்விக்குப் பழிவாங்க வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தி அவரை உடன்பட வைக்க முயன்றார். இதை செர்க்செசின் மற்றொரு ஆலோசகரான, அர்தபானஸ் எதிர்த்தார். அவர் இந்த விஷயத்தில் அதிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். மார்தோனியசை சற்றே தீய ஆலோசகராக சித்தரிக்கும் எரோடோடஸ் (பல நல்ல ஆலோசகர்களின் வாதங்கள் எப்போதும் ஏற்க்கப்படுவதில்லை), மார்தோனியஸ் கிரேக்கத்தின் சட்ராப் (ஆளுநர்) ஆக விரும்புவதாகவும், 'துன்பம் மற்றும் சாகசங்களில்' விருப்பம் கொண்டிருந்ததாகவும் கூறுகிறார். . [10]

இவர் தெர்மோபைலேப் போரில் கலந்து கொண்டார், மேலும் சலாமிஸ் போரில் பாரசீக தோல்விக்குப் பிறகு, இவர் மற்றொரு போர்த் தொடரில் இருந்து போராட செர்க்சை ஒப்புக்கொள்ள வைக்க முயன்றார். இந்த முறை மார்தோனியசால் செர்க்சை ஓரளவுக்கு மேல் வற்புறுத்த முடியவில்லை. ஆனால் செர்க்சஸ் வெளியேறியபோது அவர் பாரசீகர்களால் கைப்பற்றப்பட்ட கிரேக்கத்தின் பகுதிகளுக்கு இவரை ஆளுநராக்கினார். இவர் மாக்கெடோனியாவை கீழ்ப்படுத்தினார். அந்த நேரத்தில் மன்னர் முதலாம் அலெக்சாண்டர் ஆட்சி செய்துவந்தார். ஆனால் அலெக்சாண்டர் தானே ஏதெனியர்களுக்கு மார்தோனியசின் போர்த் திட்டங்களைப் பற்றிய சிறப்பான தகவல்களைக் கொடுத்தார். ஒரு கிரேக்கராகரால், கிரேக்கம் தோற்கடிக்கப்படுவதைத் தாங்க முடியவில்லை என்று கூறினார்.

ஏதென்சின் அழிவுக்கு மார்சோனியஸ் தலைமை தாங்கினார். தொல்லியல் எச்சங்களின் ஒரு பகுதி பெர்சர்சுட் அல்லது "பாரசீக இடிபாடு" என்று அழைக்கப்படுகிறது.

போர்த் தொடரின் முதல் பகுதிக்குப் பிறகு, செர்க்சசின் கீழ் நேரடியாக, மார்தோனியஸ் கிரேக்கத்தில் 300,000 உயரடுக்கு துருப்புக்களுடன் தங்கியிருந்தார். அவர்கள் போரின் கடைசிக் கட்டங்களில் போராடி, ஏதென்சை அழித்தார்கள். ஆனால் இறுதியாக பிளாட்டியா போரில் தோற்கடிக்கப்பட்டார். [11]

மார்தோனியசின் தூதர்களுக்கு ஏதெனியன் அரிசுடடைடீசு அளித்த பதில்: "சூரியன் அதன் தற்போதைய போக்கில் செல்லும் வரை, நாங்கள் ஒருபோதும் செர்க்சுடன் இணக்கமாகி வர மாட்டோம்". [12]

சலாமிஸ் போருக்கு முன்பு மக்கள் வெளியேறி வெறிச்சோடியிருந்த ஏதென்சை மார்தோனியஸ் கைப்பற்றி சூறையாடினார். ஏதெனியர்கள் தங்களுடன் போர்நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டு தங்களுடன் இணக்கத்துக்கு வந்தால் ஏதென்சு நகரத்தை மீண்டும் கட்டியெழுப்ப உதவுவதாக இவர் முன்வந்தார், ஆனால் ஏதெனியர்கள் அதை நிராகரித்து மற்றொரு போருக்குத் தயாராகினர்.

பிளாட்டியா மற்றும் மார்தோனியசின் மரணம்[தொகு]

மார்தோனியசின் முகாம் மற்றும் பிளாட்டியா போரில் (கிமு 479), மார்தோனியஸ் கொல்லப்பட்டதில் பாரசீக துருப்புக்களின் இடம். இடமிருந்து வலமாக: கிரேக்க கூட்டாளிகள், சகர்கள், இந்தியர்கள், பாக்டிரியர்கள், மேதியர்கள், பெர்சியர்கள்.

மற்றொரு பாரசீக தளபதியான அர்தபாசசின் எதிர்ப்பையும் மீறி மார்தோனியஸ் கிரேக்கப் படைகளை பிளாட்டீயாவில் சந்திக்கத் தயாரானார். எசுபார்தன்களால் நடத்ததப்பட போரில் மார்தோனியஸ் கொல்லப்பட்டார் (பார்க்க பிளாட்டீயா போர் ). இது குறித்து குறிப்பிடும் எரோடோட்டசு [13] மற்றும் புளூட்டாக் [14] ஆகியோர் ஐம்னெஸ்டஸ் என்ற பிளாட்டியன் மார்தோனியசைக் கொன்றதாக குறிப்பிடுகின்றனர். இது இவரது இராணுவம் உடைய வழிவகுத்தது.

தேமோபைலேப் போருக்குப் பிறகு லியோனிடாசுக்கு செர்க்ஸ் செய்ததைப் போல, கொல்லப்பட்ட பாரசீகத் தளபதி மார்தோனியசின் தலையை ஒரு தூணில் ஏற்றும்படி ஏஜினிடன் பரிந்துரைத்தபோது, ஸ்பார்டான் தலைவர் பௌசானியாசின் பதிலை எரோடோடஸ் விவரிக்கிறார்  : "இத்தகைய செயல்கள் கிரேக்கர்களை விட காட்டுமிராண்டிகளுக்கு பொருந்தும், மேலும் காட்டுமிராண்டிகளில் கூட நாங்கள் அவர்களை வெறுக்கிறோம். . . இதுபோன்ற பேச்சுக்களோடும், அறிவுரைகளோடும் மீண்டும் என் முன் வராதே, நீ இப்போது தண்டிக்கப்படவில்லை என்பதற்காக என் பொறுமைக்கு நன்றி".

பரவலர் பண்பாட்டில்[தொகு]

  • இவரது பெயர் மார்தோனியஸ் ( ஸ்பைரோஸ்ட்ரெப்டிடே குடும்பம் ) உயிர் இனத்திற்கு வைக்கப்பட்டது. இதில் ஒன்பது வகையான மாபெரும் ஆப்பிரிக்க மரவட்டைகள் உள்ளன.
  • தி 300 ஸ்பார்டன்ஸ் (1962) திரைப்படத்தில், மார்தோனியசு பாத்திரத்தில், நடிகர் கோஸ்டாஸ் பலாடிமாஸ் நடித்தார் [15] .
  • ஸ்டீவன் பிரஸ்ஃபீல்டின் கேட்ஸ் ஆஃப் ஃபயர் புதினத்தில், மார்தோனியஸ், இறவாப்படையின் தளபதி ஓரோண்டஸ் மற்றும் போர்வீரர் ஆர்ட்டெமிசியா ஆகியோருடன் செர்க்சசின் மிகவும் நம்பகமான ஆலோசகர்களில் ஒருவராக சித்தரிக்கப்படுகிறார்.

குறிப்புகள்[தொகு]

  1. Jan Tavernier (2007). Iranica in the Achaemenid Period (ca. 550-330 B.C.). Peeters Publishers. p. 19. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9042918337.
  2. Kuhrt, Amélie (2013). The Persian Empire: A Corpus of Sources from the Achaemenid Period (in ஆங்கிலம்). Routledge. p. 450. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781136017025.
  3. Gobryas (conspirator) - Livius.
  4. Herodotus 6, 43
  5. Joseph Roisman,Ian Worthington. "A companion to Ancient Macedonia" John Wiley & Sons, 2011. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 144435163X pp 343-345
  6. Vasilev 2015, ப. 156.
  7. Joseph Roisman,Ian Worthington. "A companion to Ancient Macedonia" John Wiley & Sons, 2011. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 144435163X pp 343-345
  8. Herodotus 6, 44-45
  9. Herodotus (1998). The Histories. Oxford University: Oxford University Press.
  10. Herodotus 7, 5-6
  11. Tola, Fernando (1986). "India and Greece before Alexander" (in en). Annals of the Bhandarkar Oriental Research Institute (Annals of the Bhandarkar Oriental Research Institute Vol. 67, No. 1/4) 67 (1/4): 159–194. 
  12. The Histories (in ஆங்கிலம்). Penguin UK. 2013. p. 484. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780141393773.
  13. Herodotus 9, 65
  14. Plutarch's Lives, Aristides 19
  15. "The 300 Spartans (1962) Full Cast & Crew". IMDb. பார்க்கப்பட்ட நாள் 2013-10-24.