தேரழுந்தூர்

ஆள்கூறுகள்: 11°01′N 79°21′E / 11.02°N 79.35°E / 11.02; 79.35
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேரழுந்தூர்
—  கிராமம்  —
தேரழுந்தூர்
இருப்பிடம்: தேரழுந்தூர்

, தமிழ் நாடு , இந்தியா

அமைவிடம் 11°01′N 79°21′E / 11.02°N 79.35°E / 11.02; 79.35
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ் நாடு
மாவட்டம் மயிலாடுதுறை
வட்டம் குத்தாலம்
ஆளுநர் ஆர். என். ரவி
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
ஊராட்சி மன்ற தலைவர் சின்ன.சிவகுமார் [1]
மக்கள் தொகை 9,533 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

தேரழுந்தூர் அல்லது திருவழுந்தூர் தமிழ்நாட்டின் சோழ நாட்டுக் காவிரித் தென்கரையில் உள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தாலம் வட்டம் மற்றும் குத்தாலம் ஊராட்சி ஒன்றியம், தேரழந்தூர் ஊராட்சியில் அமைந்த சிற்றூர் ஆகும். கம்பராமாயணம் பாடிய கம்பர் இவ்வூரில் பிறந்தவர். இவ்வூரில் திருவழுந்தூர் தேவாதிராஜன் கோயில் எனும் வைணவக் கோயிலும், தேரழுந்தூர் வேதபுரீசுவரர் கோயில் எனும் சிவன் கோயிலும் உள்ளது. கம்பர் இவ்வூரில் பிறந்ததற்கு ஆதராமாக உள்ள கம்பர் மேடு எனும் பகுதி இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.[2][3][4][5]

அமைவிடம்[தொகு]

இந்த ஊர் மயிலாடுதுறைக்கு தெற்கே 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மயிலாடுதுறை, கும்பகோணம் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்துகளில் தேரழுந்தூர் செல்லலாம். மயிலாடுதுறை – கும்பகோணம் தொடர் வண்டிப் பாதையில் உள்ள தேரழுந்தூர் இரயில் நிலையத்தில் இறங்கி தெற்கே 3 கி.மீ. தூரம் சென்றால் ஊரை அடையலாம். இவ்வூர் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி யையும், பூம்புகார் (சட்டமன்றத் தொகுதி) யையும் சேர்ந்தது. தேரழுந்தூர் மேலையூர், கீழையூர், தொழுதாலங்குடி ஆகிய 4 பஞ்சாயத்துக்களைக் கொண்ட மிகப்பெரிய ஊராகும். சுமார் 9533 மக்கள் தொகை கொண்ட கிராமம் ஆகும். இதன் எல்லையாக கிழக்கில் அசிக்காடும், மேற்கில் திருவாவடுதுறையும், வடக்கில் குத்தாலமும் தெற்கில் கோமலும் அமைந்து உள்ளது. இந்த ஊரில் கம்பர் மேடு என்று ஒரு இடம் உள்ளது.[6]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.tnsec.tn.nic.in/results/result%202011/Result_VPP/VPP%20NGP%20Kuthalam.pdf
  2. புதர் மேடாகிக் கிடக்கும் கம்பர் வாழ்ந்த `கம்பர் மேடு’ - அரசு நடவடிக்கை எடுக்குமா?
  3. கவனிப்பாரற்ற நிலையில் தேரழந்தூர் கம்பர் மேடு
  4. "கம்பர் வாழ்ந்த இடம் முறையாக பாதுகாக்கப்படுமா?". Archived from the original on 2019-03-17. பார்க்கப்பட்ட நாள் 2021-10-12.
  5. Kambarmedu, believed to be the birth place of Tamil poet Kambar, in state of neglect
  6. தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான், கம்பன் பிறந்த ஊர் - கட்டுரை, கம்பன் சுயசரிதம் - நூல், பக்கம் 100-109
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேரழுந்தூர்&oldid=3713043" இலிருந்து மீள்விக்கப்பட்டது