14-ஆம் நூற்றாண்டு
(14ம் நூற்றாண்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஆயிரமாண்டுகள்: | 2-ஆம் ஆயிரமாண்டு |
நூற்றாண்டுகள்: | 13-ஆம் நூற்றாண்டு - 14-ஆம் நூற்றாண்டு - 15-ஆம் நூற்றாண்டு |
பத்தாண்டுகள்: | 1300கள் 1310கள் 1320கள் 1330கள் 1340கள் 1350கள் 1360கள் 1370கள் 1380கள் 1390கள் |
கிபி 14ம் நூற்றாண்டு 1301 இல் ஆரம்பித்து 1400 இல் முடிவடைந்த ஒரு நூற்றாண்டு காலப் பகுதியைக் குறிக்கும்.
முக்கிய நிகழ்வுகள்[தொகு]
- ஓட்டோமான் பேராரசின் ஆரம்பம்.
- ஐரோப்பாவில் பெரும் வரட்சி காரணமாக 1315-1317 காலப்பகுதியில் மில்லியன் கணக்கில் மக்கள் கொல்லப்பட்டனர்.
- கொசோவோவில் 1389 இல் செர்பியர்களுக்கும் ஓட்டோமான் துருக்கியருக்கும் இடையில் பெரும் சமர் இடம்பெற்றது.
- தென்னிந்தியாவில் விஜயநகரப் பேரரசு முதலாம் ஹரிஹரர் தலைமையில் 1336 இல் உருவாக்கப்பட்டது.
- சீனாவில் மங்கோலிய யுவான் ஆட்சி முடிவுக்கு வந்து மிங் ஆட்சி ஆரம்பமாயிற்று (1368).
- மலே குடாவில் இஸ்லாம் பரவியது.
- ஸ்கொட்லாந்து விடுதலைப் போரில் ஸ்கொட்லாந்து வெற்றி பெற்றது.
- மத்தியதரைக் கடல் பகுதிக்கு வந்த முதலாவது சீனர் வாங் டயூவான் (1334-1339).
கண்டுபிடிப்புகளும் புதிய அமைப்புகளும்[தொகு]
தமிழறிஞர்கள், புலவர்கள்[தொகு]
- பரிமேலழகர் - திருக்குறள் உரையாசிரியர்
- இரட்டைப்புலவர்கள்: இளஞ்சூரியர் - முதுசூரியர்
- சிவாலய முனிவர் 1375-1400, அகத்தியர் தேவாரத் திரட்டு