விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/செப்டம்பர் 16, 2018

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செங்கிஸ் கான் (1162–1227) கிபி 1206ல் மங்கோலியத் துருக்கிய இனக்குழுக்களை இணைத்து மங்கோலியப் பேரரசைத் தோற்றுவித்தார். உலக வரலாற்றின் மிகவும் குறிப்பிடத்தக்க இராணுவத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் வடகிழக்கு ஆசியாவின் நாடோடிப் பழங்குடியினர் பலரை இணைத்து, அதன் மூலமாக ஆட்சிக்கு வந்தார். இவர் பெரும்பகுதி ஐரோவாசியாவை வெற்றிகொண்ட படையெடுப்புளைத் தொடங்கினார். இவரது வாழ்வின் இறுதிக்கட்டத்தில், மங்கோலியப் பேரரசானது மத்திய ஆசியா மற்றும் சீனாவின் கணிசமான பகுதிகளை ஆக்கிரமித்திருந்தது. மேலும்...


குளச்சல் போர் என்பது திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மாவுக்கும், டச்சு கிழக்கிந்திய நிறுவனத்திற்கும் இடையே 1739 முதல் 1743 வரை நடைபெற்ற திருவிதாங்கூர் போரின் ஓர் அங்கமாக இடம்பெற்றது. கேரளப் பகுதியில் டச்சுக்காரர்களின் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தப் போரானது மார்த்தாண்ட வர்மாவின் அதிகாரத்தை நிலைநாட்டுவதிலும் முக்கிய பங்கு ஆற்றியது. மார்த்தாண்டர் தனது நாட்டை விரிவாக்கம் செய்வதற்காக பல குறுநில அரசுகளை வென்றெடுக்க விரும்பினார். டச்சு நிறுவனத்துடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்த தேசிங்க நாடு, நெடுமங்காடு அரசுகள் மீது போர் தொடுத்ததால் டச்சு வணிகம் கடுமையாக பாதிப்புக்குள்ளானது. இதனால் 1739 முதல் டச்சு படையினர் திருவாங்கூர் படையுடன் மோதி வந்தனர். மேலும்...