ரேணுகா தேவி பர்கடகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரேணுகா தேவி பர்கடகி
கல்வி, சமூக நலன் மற்றும் கலாச்சாரத்திற்கான மத்திய அமைச்சர்
பதவியில்
ஆகத்து1977 – 15 சூலை 1979
பிரதமர்மொரார்ஜி தேசாய்
அமைச்சர்பிரதாப் சந்திர சவுந்தர்
நாடாளுமன்ற உறுப்பினர்-மக்களவை
பதவியில்
23 மார்ச் 1977 – 22 ஆகத்து 1979
முன்னையவர்தினேசு கோசுவாமி
பின்னவர்தினேசு கோசுவாமி
தொகுதிகுவகாத்தி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு29 நவம்பர் 1932
இறப்பு14 ஆகத்து 2017(2017-08-14) (அகவை 84)
அரசியல் கட்சிஜனதா கட்சி (1977-1979)
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு (1962-1967)
நிறுவன காங்கிரசு (1967-1972)
சுயேச்சை (1972-1977)
துணைவர்முனீந்திர நாத் பார்கடாய்
பிள்ளைகள்
  • மீனாட்சி
பெற்றோர்(s)ருத்ரா காந்த சர்மா (தந்தை)
தர்மேசுவரி தேவி (தாய்)
முன்னாள் கல்லூரிகாட்டன் கல்லூரி, குவகாத்தி

ரேணுகா தேவி பர்கடாகி (Renuka Devi Barkataki)(1932 - 2017) என்பவர்அசாமைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார்.

அரசியல்[தொகு]

ரேணுகா 1977 முதல் 1979 வரை பிரதமர் மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா கட்சி அரசாங்கத்தில் கல்வி, சமூக நலன் மற்றும் கலாச்சாரத்திற்கான மத்திய அமைச்சராக இருந்தார். 1962-ல், இந்தியத் தேசிய காங்கிரசு வேட்பாளராக பர்பேட்டா மக்களவைத் தொகுதியிலிருந்து மூன்றாவது மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1972-ல், இவர் ஹாஜோ சட்டமன்றத் தொகுதியிலிருந்து அசாம் சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 1977-ல், ஜனதா கட்சி வேட்பாளராக கவுகாத்தி மக்களவைத் தொகுதியிலிருந்து ஆறாவது மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] பின்னர், இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் அசாம் மாநிலக் கிளையின் கௌரவச் செயலாளராக ஆனார்.

இறப்பு[தொகு]

ரேணுகா தேவி காயம் காரணமாக அரசு மருத்துவமனையில் 14 ஆகத்து 2017 அன்று இறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேணுகா_தேவி_பர்கடகி&oldid=3668583" இலிருந்து மீள்விக்கப்பட்டது