பூவை செங்குட்டுவன்
பூவை செங்குட்டுவன் | |
|---|---|
| பிறப்பு | முருகவேல் காந்தி கீழப்பூங்குடி சிவகங்கை, தமிழ்நாடு, |
| இறப்பு | 2025 செப்டெம்பர் 5 சென்னை, தமிழ்நாடு |
| தொழில் | கவிஞர் பாடலாசிரியர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், திரைப்பட வசனகர்த்தா, இலக்கியவாதி |
| குறிப்பிடத்தக்க விருதுகள் | கலைமாமணி விருது, 'கலைச்செல்வம்', 'கவிமன்னர்', 'கண்ணதாசன் விருது' |
| துணைவர் | காந்திமதி |
| பிள்ளைகள் | பூவை தயா, இரவிச்சந்திரன், கலைச்செல்வி, விஜயலட்சுமி |
| பெற்றோர் | இராமையா அம்பலம்-இலட்சுமி அம்மாள் |
பூவை செங்குட்டுவன் (Poovai Senkuttuvan) (இறப்பு: 5 செப்டம்பர் 2025) தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். இவர் பக்திப் பாடல்கள் எழுதுவதில் சிறந்தவர்.[1] 1967-ஆம் ஆண்டு முதல் ஆயிரக்கணக்கான திரைப்பாடல்கள், 4000-இற்கும் மேற்பட்ட தனிப்பாடல்கள், 2 திரைப்படங்களுக்கு கதை, 3 திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் ஆகியவற்றை எழுதியவர். மேலும் 15-இற்கும் மேற்பட்ட மேடை நாடகங்கள், 30-இற்கும் மேற்பட்ட நாட்டிய நாடகங்கள், வானொலி நிகழ்ச்சிகள், தொலைக்காட்சித் தொடர்கள் என பல்துறையில் பங்காற்றியவராவார்.[2]
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]பூவை செங்குட்டுவன் சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடி என்னும் ஊரில் இராமையா அம்பலம்-இலட்சுமி அம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார்.
பக்திப் பாடல்கள்
[தொகு]'தேரழந்தூர் சகோதரிகள்' என்ற அறிமுகத்தோடு ஆரம்பகாலத்தில் அழைக்கப்பட்டு பின்னாளில் சூலமங்கலம் சகோதரிகளாகப் புகழ் பெற்றவர்களுக்காக பல பக்திப் பாடல்களை இயற்றியவர் பூவை செங்குட்டுவன்.
விருதுகள்
[தொகு]- கலைமாமணி விருது
- கண்ணதாசன் விருது
- 2010- கவிஞர்கள் திருநாள் விருது[3]
- 2021- மகாகவி பாரதியார் விருது[4][5]
இயற்றிய பாடல்களில் சில
[தொகு]| ஆண்டு | திரைப்படம் | பாடல் | பாடியோர் | இசையமைப்பாளர் |
|---|---|---|---|---|
| 1966 | கௌரி கல்யாணம் | திருப்புகழைப் பாட | சூலமங்கலம் இராஜலட்சுமி, பி. சுசீலா | ம. சு. விசுவநாதன் |
| வரணும் வரணும் மகராணி | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | |||
| தொட்டது போலே கனவு கண்டேன் | ||||
| 1967 | கந்தன் கருணை | திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் | சூலமங்கலம் இராஜலட்சுமி, பி. சுசீலா | குன்னக்குடி வைத்தியநாதன்)[6] |
| 1967 | கற்பூரம் | வணங்கிடும் கைகளின் வடிவத்தை | பி. சுசீலா, சூலமங்கலம் இராஜலட்சுமி | டி. பி. இராமச்சந்திரா |
| 1968 | புதிய பூமி | நான் உங்கள் வீட்டுப் பிள்ளை | டி. எம். சௌந்தரராஜன் | ம. சு. விசுவநாதன் |
| 1968 | காதல் வாகனம் | வணக்கம் என் வணக்கம் | பி. சுசீலா | கே. வி. மகாதேவன் |
| 1969 | வா ராஜா வா | இறைவன் படைத்த உலகை | சீர்காழி கோவிந்தராஜன் | குன்னக்குடி வைத்தியநாதன் |
| 1970 | திருமலை தென்குமரி | குருவாயூரப்பா திருவருள் தருவாய் | சீர்காழி கோவிந்தராஜன் | குன்னக்குடி வைத்தியநாதன் |
| 1972 | அகத்தியர் | தாயிற் சிறந்த கோயிலுமில்லை | டி. கே. கலா | குன்னக்குடி வைத்தியநாதன் |
| 1972 | கனிமுத்துப்பாப்பா | அனைத்துப் பாடல்கள் | பி. சுசீலா, எஸ். பி. பாலசுப்பிரமணியம், ஜோதி கண்ணா | டி. வி. ராஜூ |
| 1973 | ராஜராஜ சோழன் | ஏடு தந்தானடி தில்லையிலே | சீர்காழி கோவிந்தராஜன், எஸ். வரலட்சுமி | குன்னக்குடி வைத்தியநாதன் |
| 1973 | பெத்த மனம் பித்து | காலம் நமக்கு தோழன் | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | வி. குமார் |
| ---- | பௌர்ணமி | காலம் எனக்கொரு பாட்டெழுதும் | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | ஆர். கே. சேகர் |
| 1974 | தாகம் | வானம் நமது தந்தை, | எஸ். ஜானகி | எம். பி. சீனிவாசன் |
| உருகிடும் வேளையிலும் நல்ல | ||||
| 1974 | குமாஸ்தாவின் மகள் | எழுதி எழுதி பழகி வந்தேன் | சூலமங்கலம் இராஜலட்சுமி, எம். ஆர். விஜயா | வி. குமார் |
| 1982 | வடிவங்கள் | தண்ணீரில் மீன் அழுதால் | கே. ஜே. யேசுதாஸ் | சந்திரபோஸ் |
- ஆடுகின்றானடி தில்லையிலே (கந்தன் கருணை, இசை: கே.வி.மகாதேவன்)
- திருநெல்வேலி சீமையிலே (திருநெல்வேலி, இசை: இளையராஜா)
பாடலாசிரியராக
[தொகு]- மேல்நாட்டு மருமகள்
- பிஞ்சு மனம்
- குமார விஜயம்
- நீ ஒரு மகாராணி
- ஆடு புலி ஆட்டம்
- அன்னலட்சுமி
- மேளதாளங்கள்
- பருவகாலம்
- சமையல்காரன்
- புதிய பூமி
- வா ராஜா வா
- அகத்தியர்
- கனிமுத்து பாப்பா
- புதிய காற்று
இறப்பு
[தொகு]பூவை செங்குட்டுவன் வயது மூப்பு காரணமாக 2025 செப்டம்பர் 5 அன்று சென்னையில் காலமானார்.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "திரையிசைப் பாடல்களில் கவிதை நயம்".
- ↑ "Grill-mill-Poovai Senguttuvan".
- ↑ "கவிஞர்கள் திருநாள் விருது - 2010".
- ↑ "திருவள்ளுவர் விருது, சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள் அறிவிப்பு". Dinamani. Retrieved 2022-07-29.
- ↑ "2021 தமிழ்நாடு அரசின் விருதுகள்".
- ↑ "திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்.. – கவிஞர் பூவை செங்குட்டுவன்". வல்லமை (in அமெரிக்க ஆங்கிலம்). 2014-01-02. Retrieved 2022-07-29.
- ↑ "பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்". தினமலர். https://cinema.dinamalar.com/tamil-news/132334/cinema/Kollywood/Lyricist-and-poet-Poovai-Senguttuvan-passes-away.htm. பார்த்த நாள்: 5 September 2025.